ஓசூர்: பிறந்து 14 நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தையை துணியால் கழுத்தை நெரித்து கொடூரமாக கொலை செய்த தந்தையை போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் ஜெக்கேரி இருளர் காலனியை சேர்ந்தவர் மாதையன் என்ற கூழித்தொழிலாளி. இவருக்கு வயது 46. இவரது மனைவி முனியம்மா. இவர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில், சின்னம்மா என்பவரை மாதையன் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு திருமணம் ஆகி 14 ஆண்டுகள் ஆகின்றன. இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் மீண்டும் கர்ப்பமானார் சின்னம்மா. அவருக்கு 4வதாக பெண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தை பிறந்ததில் இருந்து இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. 4வது பெண் குழந்தை என்பதால் இதனை கொன்று விடலாம் என்று மாதையன் கூறியுள்ளார். இதற்கு சின்னம்மாள் சம்மதிக்கவில்லை.
சின்னம்மாள் மற்றும் மாதையனுக்கும் இடையே தகராறு எற்பட்ட நிலையில், சின்னம்மாளை தகாத வார்த்தைகளில் திட்டி எட்டி உதைத்த மாதையன் பிறந்து 14 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை தூக்கிக்கொண்டு ஓடியுள்ளார். சின்னம்மாளும் கணவன் மற்றும் குழந்தையை அங்கும் இங்கும் தேடியுள்ளார். இரவு 9 மணி அளவில் மாதையன் குழந்தையை வீட்டின் அருகே போட்டு விட்டு சென்றுள்ளார். குழந்தையை பார்த்த சின்னம்மாள் பதறியடித்துக்கொண்டு குழந்தையை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுள்ளார். அங்கு குழந்தை முன்னரே இறந்து விட்டது என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக அப்பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் மாதையா மீது சின்னம்மாள் புகார் கொடுத்துள்ளார். இவர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் மாதையாவை தேடி கண்டுபிடித்து விசாரித்ததில், குழந்தையை கொன்றது உறுதி செய்யப்பட்டது. அதன்பின்னர் மாதையாவை கைது செய்து போலீஸ் காவலில் வைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்
ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்
ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!
12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
{{comments.comment}}