வெள்ள பாதிப்பை பார்வையிட வந்த அமைச்சர் பொன்முடி மீது சேறு வீச்சு.. விழுப்புரத்தில் பரபரப்பு!

Dec 03, 2024,02:11 PM IST

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் இருவேல்பட்டு பகுதிகளில் புயல் பாதிப்புகளை நேரில் சென்று பார்வையிட்ட அமைச்சர் பொன்முடி மீது மக்கள் சேற்றை வாரி இறைத்து எதிர்ப்பை தெரிவித்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.



ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை புரட்டி எடுத்தது. குறிப்பாக விழுப்புரம் மாவட்டத்தில் வரலாறு காணாத வகையில் 51 சென்டிமீட்டர் பெருமழை கொட்டி தீர்த்தது. இதனால் நகரின் பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கி ஆறு போல் ஓடியது.மறுபக்கம் அங்குள்ள ஏரி உடைந்ததால் அளவுக்கு அதிகமான உபரி நீர் வெளியாகி திண்டிவனம், மரக்காணம் உள்ளிட்ட பகுதிகள் முழுவதும் வெள்ளக்காடானது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. குடியிருப்புக்குள் மழை நீர் புகுந்ததால்   பேரிடர் மீட்பு குழுவினர் விரைந்து வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டு அங்குள்ள மக்களை மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்தனர். அதே நேரத்தில் வராக நதியில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அபாய அளவை தாண்டி தண்ணீர் சென்றதால் அப்பகுதி வழியாக செல்லும் ரயில்களும் ரத்து செய்யப்பட்டது.




இதற்கிடையே முதல்வர் மு க ஸ்டாலின் நேரில் வந்து வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்டு மக்களின் குறைகளை கேட்டறிந்தார். அதனைத் தொடர்ந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்கள்களுக்கு பல்வேறு நிவாரண பொருட்களையும் வழங்கினார். இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் இருவேல்பட்டு பகுதிகளில் ஃபெஞ்சல் புயல் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று ஆய்வு செய்ய அமைச்சர் பொன்முடி சென்றார். இவருடன் அமைச்சர் மகன் சிகாமணி, மாவட்ட கலெக்டர் பழனி, ஆகியோரும் உடன் இருந்தனர்.


அப்போது விழுப்புரம் மாவட்டத்திலுள்ள இருவேல்பட்டுப் பகுதி மக்கள் வெள்ளம் பாதித்த பகுதிகளில்  உடனே நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென போராட்டம் செய்தனர்.  அமைச்சர் பொன்முடி கிராம மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட போது  சேற்றை வாரி இறைத்து  தங்களின் கோபத்தையும் எதிர்ப்பையும் வெளிப்படுத்தினர். இதனால் அப்பகுதிகளில் பெரும் பரபரப்பு நிலவியது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

உள்ளாட்சி தேர்தலில் வென்றால் ஆட்சியை பிடிக்கலாம்: இபிஎஸ் ஆருடம்

news

ஓபிஎஸ் வெற்றியை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு

news

முதல்வர் விஜய் கரூர் செல்லவும் தடை இல்லை.. பேசவும் தடையில்லை.. திமுகவின் கோரிக்கைகள் நிராகரிப்பு!

news

'காக்ரோச் ஜனதா கட்சி'யின் எக்ஸ்தள பக்க முடக்கத்தை நீக்க கோர்ட் அதிரடி உத்தரவு!

news

ஆகஸ்ட் 17 முதல் ஆன்லைனில் பத்திரப்பதிவு: அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் அறிவிப்பு!

news

எங்கள் கேப்டன் கூல்...தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன முதல்வர் விஜய்

news

சென்னை உயர் நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி முன்ஜாமீன் மனுத் தாக்கல்!

news

கேரளா வயநாட்டில் நிலச்சரிவு: சுரங்கப்பாதை பணி நடக்கும் இடத்தில் பயங்கரம்

news

குஜராத்தில்.. 30 நிமிடங்களாக இளைஞரை தரையில் அழுத்திப் பிடித்த சிங்கம் - பதறவைக்கும் வீடியோ

அதிகம் பார்க்கும் செய்திகள்