சென்னை: பகாசுரன், திரெளபதி உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் மோகன் ஜியை போலீசார் கைது செய்தனர். பழனி பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மாத்திரை கலக்கப்பட்டதாக யூடியூப் சேனலுக்கு பேட்டியளிந்திருந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பழைய வண்ணாரப்பேட்டை, திரெளபதி, ருத்ர தாண்டவம், பகாசுரன் ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் மோகன் ஜி. இவரது திரைப்படங்களில் கூறிய கருத்துக்கள் பல்வேறு விமர்சனங்களையும், சர்ச்சைகளையும் ஏற்படுத்தி வந்தது. இந்த நிலையில் சமீபத்தில் இயக்குனர் மோகன் ஜி தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியது. அந்த பேட்டியில், "நமக்குத் தெரிந்த கோவில் ஒன்றில் பிரசாதமாக வழங்கப்படும் பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மாத்திரைகள் கலந்து பக்தர்களுக்கு வழங்கப்படுவதாகத் செவி வழியாக வந்த செய்தியாக கேள்விப்பட்டேன்" எனத் தெரிவித்திருந்தார்.

இந்தக் கருத்தைத் தொடர்ந்து திருச்சியில் மோகன் ஜி மீது போலீஸில் புகார் தரப்பட்டது. இதையடுத்து வழக்குப் பதிவு செய்த போலீஸார், இயக்குனர் மோகன் ஜியை சென்னை காசிமேடு இல்லத்தில் வைத்து கைது செய்துள்ளனர்.
இந்தக் கைதை பாஜக கண்டித்துள்ளது. பாஜக மாநிலச் செயலாளர் அஸ்வத்தாமன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சினிமா இயக்குனர் மோகன் ஜி சற்று முன் தமிழக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். என்ன காரணம், எந்த வழக்கு என்று எந்த முறைப்படியான தகவலும் குடும்பத்தினருக்கு கூறப்படவில்லை. இது உச்சநீதிமன்ற ஆணைக்கு எதிரானது. அவர் எங்கு வைக்கப்பட்டுள்ளார் என்ற தகவலும் இல்லை.
திமுக ஆட்சி அமைந்ததிலிருந்து எதிர் கருத்து பேசுபவர்கள் சட்டத்திற்கு புறம்பான முறையில் கைது செய்யப்படுவது வாடிக்கையாகிவிட்டது. கஞ்சா கலாச்சாராயத்தைக் கட்டுப்படுத்த முடியாத திராவிட மாடலின் காவல்துறை இது மாதிரியான ஒழுங்கு முறைகளை மட்டும் சரியாக செய்கிறது " எனக் குறிப்பிட்டு இருந்தார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்
ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்
ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!
12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
{{comments.comment}}