டெல்லி: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று இடைக்கால பட்ஜெட்டை லோக்சபாவில் தாக்கல் செய்து பேசி வருகிறார்.
இது தேர்தல் ஆண்டு. தற்போதைய மத்திய அரசு தாக்கல் செய்யப் போகும் கடைசி பட்ஜெட் இது. அந்த வகையில் பல்வேறு சர்ப்ரைஸ்களும், சலுகைகளும், அறிவிப்புகளும் இந்த பட்ஜெட்டில் இடம் பெற்றிருக்கும் என்று பலரும் எதிர்பார்த்துக் காத்துள்ளனர்.
இடைக்கால பட்ஜெட் என்பதால் பெரிய அளவிலான வரி விதிப்பு உள்ளிட்டவை இடம் பெற வாய்ப்பில்லை. லோக்சபா தேர்தல் முடிந்து, புதிய அரசு பதவியேற்கும் காலம் வரை மட்டுமே இந்த பட்ஜெட்டானது செல்லும் என்பதால் அதற்கேற்ற வகையிலேயே பட்ஜெட் இருக்கும்.

மாதாந்திர ஊதியதாரர்களுக்கு வரிச் சலுகை அளிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் தருவதில் பிரதமர் மோடி ஆர்வம் காட்டி வருகிறார். எனவே பெண்களுக்கான திட்டங்கள் குறித்த அறிவிப்பும் இன்றைய பட்ஜெட்டில் இடம் பெறக் கூடும் என்று தெரிகிறது.
3வது முறையாக ஆட்சியை தக்க வைக்கும் நோக்கில் பாஜக அரசு பல்வேறு முஸ்தீபுகளுடன் செயல்பட்டு வருகிறது. எனவே அதை மனதில் கொண்டு இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக ஒரு பேச்சு உள்ளது.
நாடாளுமன்றம் தற்போது புதிய கட்டடத்தில் இயங்கி வருகிறது. அந்த புதிய நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள முதல் பட்ஜெட் இதுதான். புதிய நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்த முதல் நிதியமைச்சர் என்ற பெருமையும் நிர்மலா சீதாராமனுக்குக் கிடைத்துள்ளது. முதல் பட்ஜெட்டை புதிய நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த அரசு, கட்சி என்ற பெயர் பாஜகவுக்குக் கிடைக்கவுள்ளது.
பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!
8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?
எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்
அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!
மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!
டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!
ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?
என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!
{{comments.comment}}