திருச்சி: சாலை விபத்தில் உயிரிழந்த ஆர் டி ஓ ஆரமுத தேவசேனாவிற்கு ரூ.1.15 கோடி நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திருச்சி மாவட்டம் முசிறி ஆர் டி ஓ வாக இருந்தவர் ஆரமுத தேவசேனா. இவருக்கு வயது 50. இவர் இன்று காலை அலுவலக ஜீப்பில் முசிறியில் இருந்து திருச்சி நோக்கி சென்றுகொண்டிருந்தார். அப்பேது ஜீப் ஜீயர்புரம் அருகே கரியகுறிச்சி பகுதிக்கு வந்தபோது விபத்தில் சிக்கினார்.

திருச்சியில் இருந்து திருப்பூர் நோக்கி சென்ற அரசு பஸ் ஜீப்பும் நேருக்கு நேர் மோதுவது போல வந்தது. அதில் இருந்து தப்பிக்க டிரைவர் வேகமாக இடது பக்கம் திருப்பினார்.அப்போது ஜீப் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஜேசிபி மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஆர் டி ஓ ஆரமுத தேவசேனா இடிபாடுகளுக்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். ஜீப்பை ஓட்டி வந்த டிரைவர் பலத்த காயங்களுடன் உயிர் தப்பினார்.
இந்த கோர விபத்து குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிர்ச்சியும், ஆழ்ந்த இரங்கலும் தெரிவித்துள்ளார். இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்த முசிறி ஆர் டி ஓ ஆரமுத தேவசேனா குடும்பத்திற்கு முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.10 லட்சமும், குடும்ப பாதுகாப்பு நிதியிலிருந்து ரூ.5 லட்சமும், அரசு அலுவலர்களுக்கான காப்பீட்டுத் தொகை ரூ.1 கோடியும் வழக்கப்படும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.
இனி கூட்டணியே தேவையில்லை.. திமுக தனித்துப் போட்டியிட வேண்டும்.. தொண்டர்கள் வலியுறுத்தல்
காங்கிரஸ் அணுகுமுறையால் திமுக கூட்டணிக்குத் தோல்வி.. திருமாவளவன் குற்றச்சாட்டு
பெண் சிங்கம்.. ராத்திரி 11 மணி.. தனி ஆளாய்.. மொத்த கும்பலையும் வேரறுத்த.. ரிதி ராஜ் ஐபிஎஸ்!
மீண்டும் போர் பதற்றம்: ஈரானிலிருந்து இந்தியர்கள் வெளியேற மத்திய அரசு அறிவுறுத்தல்!
மக்களின் குறை தீர்க்கும் தமிழ்நாடு அரசு.. முக்கிய இமெயில் முகவரிகள்.. நோட் பண்ணிக்கங்க!
முதல்வர் விஜயைச் சந்தித்து.. செஸ் விளையாடி.. ஜெயித்து வாழ்த்து பெற்றார் சாம்பியன் பிரக்ஞானந்தா!
தமிழ்நாடு மின் வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு: சிபிசிஐடி-க்கு மாற்றி டிஜிபி உத்தரவு!
பா.ஜ.க-விலிருந்து விலகிய செய்தித் தொடர்பாளர் ஸ்ரீகாந்த் கருணேஷ்.. அண்ணாமலையுடன் இணைகிறாரா?
ராஜ்யசபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு இன்று கடைசி நாள்.. தவெக ஆதரவுடன் எம்.பி ஆகும் காங்.
{{comments.comment}}