மதுரை: மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் உள்ள கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கில் ஜனவரி 18,19 (இன்று மற்றும் நாளை) ஆகிய 2 நாட்களும் சர்வதேச பலூன் திருவிழா நடைபெறுகிறது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரையில் முதன்முறையாக சர்வதேச பலூன் திருவிழா நடைபெறுகிறது. இந்த பலூன் திருவிழா சுற்றுலா துறையை மேம்படுத்தும் நோக்கில் சென்னை மற்றும் பொள்ளாச்சியில் நடத்தப்பட்ட நிலையில், இந்தாண்டு முதன்முறையாக மதுரையிலும் நடத்தப்பட உள்ளது.
இந்த விழாவில் பிரான்ஸ், ஆஸ்திரேலியா, பிரேசில், பெல்ஜியம், தாய்லாந்து மற்றும் வியட்நாம் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த ஏர் பலூன் பைலட்டுகள் பங்கேற்க உள்ளனர். இந்த விழாவில் குழந்தைகளை கவரும் விதத்தில் பல்வேறு வடிவிலான பலூன்கள் பறக்க உள்ளன. பொள்ளாச்சி மற்றும் சென்னையில் பறக்க விடப்பட்டது போன்ற யானை, தவளை உள்ளிட்ட வடிவிலான பலூன்கள் பறக்க விடப்பட உள்ளன.
இந்த பலூன் திருவிழா, மதுரை மாவட்டம், ஜல்லிக்கட்டு நடைபெறும், அலங்காநல்லூரில் உள்ள கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கில் நடைபெற உள்ளது. 2 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் பல உணவு வகைகளுடன் விளையாட்டுப் போட்டிகளும் நடத்தப்பட உள்ளன. இந்த பலூன் திருவிழா மதுரை மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்பத்தியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
11ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகளும் வெளியானது.. தேர்ச்சி விகிதம் மொத்தம் 92.09% !
தமிழ்நாட்டில்.. மே மாத இறுதியில் கோடை வெயில்.. இயல்பை விட குறையும்.. தமிழ்நாடு வெதர்மேன்!
தமிழகத்தில் 10வகுப்பு பொது தேர்வு முடிவுகள் இன்று வெளியானது.. வழக்கம் போல மாணவியரே அதிகம் பாஸ்!
பொள்ளாச்சி வழக்கில்.. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கூடுதலாக நிவாரணம் வழங்க.. முதல்வர் உத்தரவு..!
என் குழந்தைகள் என் உயிர்.. என்னிடமிருந்து பிரிக்க முயன்றார்கள்.. நடிகர் ரவி மோகன் பரபரப்பு அறிக்கை
தமிழ்நாட்டில் இந்த ஆண்டு 52 சதவீதம் குற்றங்கள் அதிகரிப்பு..பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
இந்தியாவில் ஐபோன் உற்பத்தி செய்ய வேண்டாம்...ஆப்பிள் சிஇஓ.,க்கு டிரம்ப் உத்தரவு
cyclone shakthi பெங்களூருக்கு ஆரஞ்சு அலர்ட்...புயல் காற்றுடன் மழை வெளுக்க போகுதாம்
இந்தியாவில் அமலுக்கு வந்தது.. பயோ மெட்ரிக் விவரங்கள் அடங்கிய இ-பாஸ்போர்ட்..!
{{comments.comment}}