மதுரை: மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் உள்ள கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கில் ஜனவரி 18,19 (இன்று மற்றும் நாளை) ஆகிய 2 நாட்களும் சர்வதேச பலூன் திருவிழா நடைபெறுகிறது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரையில் முதன்முறையாக சர்வதேச பலூன் திருவிழா நடைபெறுகிறது. இந்த பலூன் திருவிழா சுற்றுலா துறையை மேம்படுத்தும் நோக்கில் சென்னை மற்றும் பொள்ளாச்சியில் நடத்தப்பட்ட நிலையில், இந்தாண்டு முதன்முறையாக மதுரையிலும் நடத்தப்பட உள்ளது.
இந்த விழாவில் பிரான்ஸ், ஆஸ்திரேலியா, பிரேசில், பெல்ஜியம், தாய்லாந்து மற்றும் வியட்நாம் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த ஏர் பலூன் பைலட்டுகள் பங்கேற்க உள்ளனர். இந்த விழாவில் குழந்தைகளை கவரும் விதத்தில் பல்வேறு வடிவிலான பலூன்கள் பறக்க உள்ளன. பொள்ளாச்சி மற்றும் சென்னையில் பறக்க விடப்பட்டது போன்ற யானை, தவளை உள்ளிட்ட வடிவிலான பலூன்கள் பறக்க விடப்பட உள்ளன.
இந்த பலூன் திருவிழா, மதுரை மாவட்டம், ஜல்லிக்கட்டு நடைபெறும், அலங்காநல்லூரில் உள்ள கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கில் நடைபெற உள்ளது. 2 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் பல உணவு வகைகளுடன் விளையாட்டுப் போட்டிகளும் நடத்தப்பட உள்ளன. இந்த பலூன் திருவிழா மதுரை மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்பத்தியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
அணு ஆயுதங்களைக் காட்டி இந்தியாவை யாரும் மிரட்ட முடியாது.. பிரதமர் மோடி எச்சரிக்கை
தனியார் துறையில் முதல் வேலை பெறுவோருக்கு ரூ. 15,000.. புதிய திட்டத்தை அறிவித்தார் பிரதமர் மோடி
சிறந்த மாநகராட்சியாக ஆவடி, நாமக்கல் தேர்வு.. சென்னை சுதந்திர தின விழாவில் விருது
வருடாந்திர பாஸ்டாக் பாஸ்.. இன்று முதல் அமலுக்கு வந்தது.. யாருக்கெல்லாம் லாபம்?
50 ஆண்டு கால திரைப்பயணம்... வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!
பிரதமர் மோடி அறிவித்த டபுள் தீபாவளி.. ஜிஎஸ்டி வரி விதிப்பில் என்னெல்லாம் மாற்றம் இருக்கும்?
சுதந்திரம்.. ஆன்மீகம்.. இரண்டுக்கும் தொடர்பிருக்கு தெரியுமா?
சுகமாய் சுற்றித் திரிவோரே.. இன்று மட்டுமாயின்.. ஒர் நாழிகையேனும் நினைவுகூறுக!
சுதந்திரம் காப்போம்!
{{comments.comment}}