மதுரை: மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் உள்ள கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கில் ஜனவரி 18,19 (இன்று மற்றும் நாளை) ஆகிய 2 நாட்களும் சர்வதேச பலூன் திருவிழா நடைபெறுகிறது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரையில் முதன்முறையாக சர்வதேச பலூன் திருவிழா நடைபெறுகிறது. இந்த பலூன் திருவிழா சுற்றுலா துறையை மேம்படுத்தும் நோக்கில் சென்னை மற்றும் பொள்ளாச்சியில் நடத்தப்பட்ட நிலையில், இந்தாண்டு முதன்முறையாக மதுரையிலும் நடத்தப்பட உள்ளது.

இந்த விழாவில் பிரான்ஸ், ஆஸ்திரேலியா, பிரேசில், பெல்ஜியம், தாய்லாந்து மற்றும் வியட்நாம் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த ஏர் பலூன் பைலட்டுகள் பங்கேற்க உள்ளனர். இந்த விழாவில் குழந்தைகளை கவரும் விதத்தில் பல்வேறு வடிவிலான பலூன்கள் பறக்க உள்ளன. பொள்ளாச்சி மற்றும் சென்னையில் பறக்க விடப்பட்டது போன்ற யானை, தவளை உள்ளிட்ட வடிவிலான பலூன்கள் பறக்க விடப்பட உள்ளன.
இந்த பலூன் திருவிழா, மதுரை மாவட்டம், ஜல்லிக்கட்டு நடைபெறும், அலங்காநல்லூரில் உள்ள கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கில் நடைபெற உள்ளது. 2 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் பல உணவு வகைகளுடன் விளையாட்டுப் போட்டிகளும் நடத்தப்பட உள்ளன. இந்த பலூன் திருவிழா மதுரை மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்பத்தியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
ஏப்ரல் 2-ல் திருவாரூரில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
நயினார் நாகேந்திரன் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்ய திமுக சார்பில் மனு
சென்னையில் விஜய்யின் 'ரோடு ஷோ'வுக்கு அனுமதி மறுப்பு: தவெக தொண்டர்கள் அதிர்ச்சி
அதிமுக கூட்டணியில் இணைந்த புதிய கட்சி... சிதமுக.,விற்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு
மாம்பழத்தை இப்போது முடக்க முடியாது .. உறுதிபட சொன்ன தேர்தல் ஆணையம்
செட்டிநாட்டு அடுப்படி.. தித்திக்கும் உக்காரை.. சூப்பர் இனிப்பு.. சுப்ரீம் சந்தோஷம்!
கால் வைத்த இடமெல்லாம் வெற்றித் தடம்.. சாதிக்கத் துடிக்கும் மாணவர் மோ.வசீகரன்!
RCB: அதை மட்டும் மாத்த மாட்டோம்.. கவலைப்படாதீங்க.. உறுதிப்படுத்திய அனன்யா பிர்லா
வரமும்.. வரம்பும்!
{{comments.comment}}