மதுரை: மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் உள்ள கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கில் ஜனவரி 18,19 (இன்று மற்றும் நாளை) ஆகிய 2 நாட்களும் சர்வதேச பலூன் திருவிழா நடைபெறுகிறது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரையில் முதன்முறையாக சர்வதேச பலூன் திருவிழா நடைபெறுகிறது. இந்த பலூன் திருவிழா சுற்றுலா துறையை மேம்படுத்தும் நோக்கில் சென்னை மற்றும் பொள்ளாச்சியில் நடத்தப்பட்ட நிலையில், இந்தாண்டு முதன்முறையாக மதுரையிலும் நடத்தப்பட உள்ளது.
இந்த விழாவில் பிரான்ஸ், ஆஸ்திரேலியா, பிரேசில், பெல்ஜியம், தாய்லாந்து மற்றும் வியட்நாம் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த ஏர் பலூன் பைலட்டுகள் பங்கேற்க உள்ளனர். இந்த விழாவில் குழந்தைகளை கவரும் விதத்தில் பல்வேறு வடிவிலான பலூன்கள் பறக்க உள்ளன. பொள்ளாச்சி மற்றும் சென்னையில் பறக்க விடப்பட்டது போன்ற யானை, தவளை உள்ளிட்ட வடிவிலான பலூன்கள் பறக்க விடப்பட உள்ளன.
இந்த பலூன் திருவிழா, மதுரை மாவட்டம், ஜல்லிக்கட்டு நடைபெறும், அலங்காநல்லூரில் உள்ள கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கில் நடைபெற உள்ளது. 2 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் பல உணவு வகைகளுடன் விளையாட்டுப் போட்டிகளும் நடத்தப்பட உள்ளன. இந்த பலூன் திருவிழா மதுரை மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்பத்தியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
Tnpsc exam: 3935 பணிகளை நிரப்ப குரூப்-4 தேர்வு தேதி வெளியீடு.. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!
{{comments.comment}}