டெல்லி: 18வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் ஜூன் 24ம் தேதி தொடங்குகிறது. அன்றைய தினம் புதிய எம்.பிக்கள் பதவியேற்பு நடைபெறும். தற்காலிக சபாநாயகர் புதிய எம்.பிக்களுக்குப் பதவிப்பிரமாணம் செய்து வைப்பார்.
இந்தத் தகவலை நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
புதிய எம்.பிக்கள் பதவியேற்பு முடிந்ததும், லோக்சபா சபாநாயகர் தேர்தலும் நடைபெறும். புதிய சபாநாயகர் தேர்வு செய்யப்பட்டதும், அவை முன்னவரும், எதிர்க்கட்சித் தலைவரும் இணைந்து அவரை அவரது இருக்கையில் அமர வைப்பார்கள். அதன் பின்னர் குடியரசுத் தலைவர் உரை இடம் பெறும். ஜூன் 27ம் தேதி குடியரசுத் தலைவரின் உரை இடம் பெறும். மக்களவை மற்றும் மாநிலங்களவை கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரை நிகழ்த்துவார். ஜூலை 3ம் தேதியுடன் கூட்டத் தொடர் நிறைவு பெறும்.
இதேபோல ராஜ்யசபாவின் 264வது கூட்டத் தொடர் ஜூன் 27ம் தேதி தொடங்கி ஜூலை 3ம் தேதி முடிவடையும் என்றும் அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தில் நிச்சயம் அனல் பறக்கும் என்று தெரிகிறது. ஏற்கனவே எக்சிட் போல் சமயத்தில் பங்குச் சந்தையில் ஏற்பட்ட பெரும் உயர்வு மற்றும் தேர்தல் நாளில் ஏற்பட்ட சரிவு குறித்து காங்கிரஸ் கட்சி பரபரப்பான புகாரை வைத்துள்ளது. அதேபோல நீட் தேர்வு குறித்தும் நாடாளுமன்றத்தில் பேசுவேன் என்று ராகுல் காந்தி கூறியிருக்கிறார். எனவே எதிர்க்கட்சிகள் தரப்பில் புயலைக் கிளப்பக் காத்துள்ளனர். எனவே மக்களவையின் முதல் கூட்டத் தொடரிலேயே சூறாவளிக்கு வாய்ப்பிருக்கிறது.
Good மாத்ரே, பிரேவிஸ், ஹூடா அதிரடி.. Bad துபே, தோனி.. Ugly கடைசி வரிசை வீரர்கள்.. CSK ஏமாற்றம்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}