டெல்லி: 18வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் ஜூன் 24ம் தேதி தொடங்குகிறது. அன்றைய தினம் புதிய எம்.பிக்கள் பதவியேற்பு நடைபெறும். தற்காலிக சபாநாயகர் புதிய எம்.பிக்களுக்குப் பதவிப்பிரமாணம் செய்து வைப்பார்.
இந்தத் தகவலை நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
புதிய எம்.பிக்கள் பதவியேற்பு முடிந்ததும், லோக்சபா சபாநாயகர் தேர்தலும் நடைபெறும். புதிய சபாநாயகர் தேர்வு செய்யப்பட்டதும், அவை முன்னவரும், எதிர்க்கட்சித் தலைவரும் இணைந்து அவரை அவரது இருக்கையில் அமர வைப்பார்கள். அதன் பின்னர் குடியரசுத் தலைவர் உரை இடம் பெறும். ஜூன் 27ம் தேதி குடியரசுத் தலைவரின் உரை இடம் பெறும். மக்களவை மற்றும் மாநிலங்களவை கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரை நிகழ்த்துவார். ஜூலை 3ம் தேதியுடன் கூட்டத் தொடர் நிறைவு பெறும்.

இதேபோல ராஜ்யசபாவின் 264வது கூட்டத் தொடர் ஜூன் 27ம் தேதி தொடங்கி ஜூலை 3ம் தேதி முடிவடையும் என்றும் அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தில் நிச்சயம் அனல் பறக்கும் என்று தெரிகிறது. ஏற்கனவே எக்சிட் போல் சமயத்தில் பங்குச் சந்தையில் ஏற்பட்ட பெரும் உயர்வு மற்றும் தேர்தல் நாளில் ஏற்பட்ட சரிவு குறித்து காங்கிரஸ் கட்சி பரபரப்பான புகாரை வைத்துள்ளது. அதேபோல நீட் தேர்வு குறித்தும் நாடாளுமன்றத்தில் பேசுவேன் என்று ராகுல் காந்தி கூறியிருக்கிறார். எனவே எதிர்க்கட்சிகள் தரப்பில் புயலைக் கிளப்பக் காத்துள்ளனர். எனவே மக்களவையின் முதல் கூட்டத் தொடரிலேயே சூறாவளிக்கு வாய்ப்பிருக்கிறது.
2026 சட்டசபைத் தேர்தலில் புதுச்சேரி மாநிலத்திலும் தவெக கொடி பறக்கும்...விஜய் அதிரடி பேச்சு
நாகப்பட்டினத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!
சென்னையில் நாளை கூடுகிறது.. அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு.. முக்கிய முடிவு எடுக்கப்படுமா?
எனது கையெழுத்தை போலியாக போட்டுள்ளனர்: அன்புமணி மீது ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!
TVK Vijay.. விஜய்யின் தமிழ்நாடு பிரச்சார பேச்சு Vs புதுச்சேரி பேச்சு... எது பெஸ்ட்?
லக்னோவில் நடந்த ஸ்கவுட் நிகழ்ச்சியில்.. ஜொலித்த தமிழ்நாடு மாணவி!
Most Searched Athlete: அதிரடி காட்டிய இந்திய வீரர் அபிஷேக் ஷர்மா.. பாகிஸ்தானில் காட்டிய எழுச்சி
எடப்பாடியார் அதிரடி.. கேஏ செங்கோட்டையனின் அண்ணன் மகனை இழுத்த அதிமுக!
முதல் மாதத்தில் உடையவனே தஞ்சம்.. பத்தாம் மாதத்தில் அழகான குழந்தை.. தாய்மையின் பேரழகு!
{{comments.comment}}