18வது மக்களவையின் முதல் கூட்டம்.. ஜூன் 24ம் தேதி தொடங்குகிறது.. எம்.பிக்கள் பதவியேற்புடன்!

Jun 12, 2024,09:31 PM IST

டெல்லி:  18வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் ஜூன் 24ம் தேதி தொடங்குகிறது. அன்றைய தினம் புதிய எம்.பிக்கள் பதவியேற்பு நடைபெறும். தற்காலிக சபாநாயகர் புதிய எம்.பிக்களுக்குப் பதவிப்பிரமாணம் செய்து வைப்பார்.


இந்தத் தகவலை நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.


புதிய எம்.பிக்கள் பதவியேற்பு முடிந்ததும், லோக்சபா சபாநாயகர் தேர்தலும் நடைபெறும். புதிய சபாநாயகர் தேர்வு செய்யப்பட்டதும், அவை முன்னவரும், எதிர்க்கட்சித் தலைவரும் இணைந்து அவரை அவரது இருக்கையில் அமர வைப்பார்கள். அதன் பின்னர் குடியரசுத் தலைவர் உரை இடம் பெறும்.  ஜூன் 27ம் தேதி குடியரசுத் தலைவரின் உரை இடம் பெறும். மக்களவை மற்றும் மாநிலங்களவை கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரை நிகழ்த்துவார். ஜூலை 3ம் தேதியுடன் கூட்டத் தொடர் நிறைவு பெறும்.


 


இதேபோல ராஜ்யசபாவின் 264வது கூட்டத் தொடர் ஜூன் 27ம் தேதி தொடங்கி ஜூலை 3ம் தேதி முடிவடையும் என்றும் அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.


குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தில் நிச்சயம் அனல் பறக்கும் என்று தெரிகிறது. ஏற்கனவே எக்சிட் போல் சமயத்தில் பங்குச் சந்தையில் ஏற்பட்ட பெரும் உயர்வு மற்றும் தேர்தல் நாளில் ஏற்பட்ட சரிவு குறித்து காங்கிரஸ் கட்சி பரபரப்பான புகாரை வைத்துள்ளது. அதேபோல நீட் தேர்வு குறித்தும் நாடாளுமன்றத்தில் பேசுவேன் என்று ராகுல் காந்தி கூறியிருக்கிறார். எனவே எதிர்க்கட்சிகள் தரப்பில் புயலைக் கிளப்பக் காத்துள்ளனர். எனவே மக்களவையின் முதல் கூட்டத் தொடரிலேயே சூறாவளிக்கு வாய்ப்பிருக்கிறது.

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்