மீன்பிடி தடைக்காலம் முடிவடைகிறது.. கடலுக்குள் பாய தயாராகும் படகுகள்.. மீனவர்கள் உற்சாகம்

Jun 14, 2024,10:10 AM IST

சென்னை:   தமிழ்நாட்டு கடலோரங்களில் அமலில் இருந்து வந்த மீன்பிடி தடைக்காலம் இன்று நள்ளிரவுடன் முடிவடைகிறது. இதையடுத்து கடலுக்குள் செல்ல மீனவர்கள் ஆயத்தமாகி வருகின்றனர்.


தமிழ்நாட்டு கடல் பகுதிகளில் கடந்த 2 மாதங்களாக அமலில் இருந்து வந்த மீன்பிடி தடைக்காலம் இன்றுடன் முடிவடைகிறது. ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 வரை 60 நாட்கள் இந்த தடை விதிக்கப்படுவது வழக்கம். இந்த சமயத்தில் மீன்களின் இனப்பெருக்க காலம் என்பதால் இந்த சமயத்தில் மீன் பிடி தடை விதிக்கப்படுகிறது.




திருவள்ளூர் தொடங்கி ராமாநாதபுரம் மாவட்டம் வரையிலும் இந்த மீன் பிடிதடைக்காலம் அமலில் இருக்கும். கடந்த இரண்டு மாதங்களாக மீன்பிடிக்க செல்லாமல் இருந்து வந்த மீனவர்கள் மீன்பிடித்தடை காலம் இன்றுடன் முடிவடைவதால் மீண்டும் மீன் பிடிக்க கடலுக்குள் செல்ல உள்ளனனர். படகுகளை பழுது பார்ப்பது, மீன்பிடி வலைகளை சரி செய்வது உள்ளிட்ட பணிகளில் அவர்கள் தீவிரமாக இறங்கி உள்ளனர்.


நாளை முதல் மீண்டும் ஆழ்கடல் மீன்பிடி தொடங்கும். அதாவது  இன்று நள்ளிரவு 12 மணியுடன் தடை முடிவதால் நள்ளிரவுக்கு மேல் கடலுக்குள் செல்ல படகுகள் மற்றும் மீனவர்கள் தயாராகி வருகின்றனர். மீன்பிடி தடைக்காலத்தின் காரணமாக அதிக அளவில் மீன்கள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளதால் மீனவர்கள் உற்சாகத்துடன் கடலுக்குள் செல்ல உள்ளனர். அதே சமயம் இலங்கை கடற்படையானது தங்களுக்கு எந்தவித இடையூறும் செய்யாமல் இருக்க வேண்டும் என்று ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

Tamil Nadu Assembly elections: தமிழ்நாட்டில் 84.29% வாக்குப் பதிவு.. கரூர் மாவட்டத்தில்தான் உச்சம்!

news

தமிழ்நாடு முழுக்க வாக்குப் பதிவு விகிதம் அதிகரிக்க என்ன காரணம்.. சென்னையும் கலக்குதே!

news

வாக்குப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் அதிகரிங்க.. தேர்தல் ஆணையத்துக்கு விஜய் கோரிக்கை

news

முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, விஜய், ரஜினி, கமல், அஜீத் ஓட்டுப் போட்டாச்சு!

news

சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்வு? - வதந்தி என.. மத்திய அரசு விளக்கம்!

news

விதைக்குள் காடு விரும்பி அதை நாடு!

news

நெருங்குதலும் விலகலும்

news

Dr Latha poems: அமைதியே என் ஆயுதம்.. நான் என உறுதி கொள்!

news

English Language Day: வில்லியம் ஷேக்ஸ்பியரை நினைவு கூர்ந்து Thanks சொல்வோம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்