மீன்பிடி தடைக்காலம் முடிவடைகிறது.. கடலுக்குள் பாய தயாராகும் படகுகள்.. மீனவர்கள் உற்சாகம்

Jun 14, 2024,10:10 AM IST

சென்னை:   தமிழ்நாட்டு கடலோரங்களில் அமலில் இருந்து வந்த மீன்பிடி தடைக்காலம் இன்று நள்ளிரவுடன் முடிவடைகிறது. இதையடுத்து கடலுக்குள் செல்ல மீனவர்கள் ஆயத்தமாகி வருகின்றனர்.


தமிழ்நாட்டு கடல் பகுதிகளில் கடந்த 2 மாதங்களாக அமலில் இருந்து வந்த மீன்பிடி தடைக்காலம் இன்றுடன் முடிவடைகிறது. ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 வரை 60 நாட்கள் இந்த தடை விதிக்கப்படுவது வழக்கம். இந்த சமயத்தில் மீன்களின் இனப்பெருக்க காலம் என்பதால் இந்த சமயத்தில் மீன் பிடி தடை விதிக்கப்படுகிறது.




திருவள்ளூர் தொடங்கி ராமாநாதபுரம் மாவட்டம் வரையிலும் இந்த மீன் பிடிதடைக்காலம் அமலில் இருக்கும். கடந்த இரண்டு மாதங்களாக மீன்பிடிக்க செல்லாமல் இருந்து வந்த மீனவர்கள் மீன்பிடித்தடை காலம் இன்றுடன் முடிவடைவதால் மீண்டும் மீன் பிடிக்க கடலுக்குள் செல்ல உள்ளனனர். படகுகளை பழுது பார்ப்பது, மீன்பிடி வலைகளை சரி செய்வது உள்ளிட்ட பணிகளில் அவர்கள் தீவிரமாக இறங்கி உள்ளனர்.


நாளை முதல் மீண்டும் ஆழ்கடல் மீன்பிடி தொடங்கும். அதாவது  இன்று நள்ளிரவு 12 மணியுடன் தடை முடிவதால் நள்ளிரவுக்கு மேல் கடலுக்குள் செல்ல படகுகள் மற்றும் மீனவர்கள் தயாராகி வருகின்றனர். மீன்பிடி தடைக்காலத்தின் காரணமாக அதிக அளவில் மீன்கள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளதால் மீனவர்கள் உற்சாகத்துடன் கடலுக்குள் செல்ல உள்ளனர். அதே சமயம் இலங்கை கடற்படையானது தங்களுக்கு எந்தவித இடையூறும் செய்யாமல் இருக்க வேண்டும் என்று ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

கல்வி எனும் ஆயுதத்தால் அனைத்தையும் தகர்த்தெறிந்த அறிவுச்சூரியன்தான் அம்பேத்கர்:முதல்வர் முக ஸ்டாலின்

news

எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும்?. நயினார் நாகேந்திரனுக்கு கனிமொழி கேள்வி!

news

உலகமே உற்றுப் பார்த்த மோடி - புடின் சந்திப்பு.. அசைந்து கொடுக்குமா அமெரிக்கா?

news

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை நேரில் பார்த்தால்.. 21 தலைமுறைக்கு முக்தி கிடைக்குமாம்!

news

Festival Trains annoounced.. சொந்த ஊருக்குப் போக கவலையில்லை.. ஸ்பெஷல் ரயில்கள் அறிவிப்பு!

news

11ம் வகுப்பு மாணவர்கள் தாக்கியதில்... +2ம் வகுப்பு மாணவன் பலி... 15 மாணவர்கள் கைது!

news

கீரை சாப்பிடாத குழந்தைகளும் விரும்பி உண்ணும் கீரை தொக்கு.. லஞ்சுக்கு சூப்பர் ரெசிப்பி!

news

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் கும்பாபிஷேகம்.. 149 பள்ளிகளுக்கு 8ம் தேதி விடுமுறை

news

இடியாப்பம்.. நீல கலர் ஜிங்குச்சா.. கலர் கலரா இடியாப்பம் செஞ்சு சாப்பிடலாமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்