சென்னை: தமிழ்நாட்டு கடலோரங்களில் அமலில் இருந்து வந்த மீன்பிடி தடைக்காலம் இன்று நள்ளிரவுடன் முடிவடைகிறது. இதையடுத்து கடலுக்குள் செல்ல மீனவர்கள் ஆயத்தமாகி வருகின்றனர்.
தமிழ்நாட்டு கடல் பகுதிகளில் கடந்த 2 மாதங்களாக அமலில் இருந்து வந்த மீன்பிடி தடைக்காலம் இன்றுடன் முடிவடைகிறது. ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 வரை 60 நாட்கள் இந்த தடை விதிக்கப்படுவது வழக்கம். இந்த சமயத்தில் மீன்களின் இனப்பெருக்க காலம் என்பதால் இந்த சமயத்தில் மீன் பிடி தடை விதிக்கப்படுகிறது.
திருவள்ளூர் தொடங்கி ராமாநாதபுரம் மாவட்டம் வரையிலும் இந்த மீன் பிடிதடைக்காலம் அமலில் இருக்கும். கடந்த இரண்டு மாதங்களாக மீன்பிடிக்க செல்லாமல் இருந்து வந்த மீனவர்கள் மீன்பிடித்தடை காலம் இன்றுடன் முடிவடைவதால் மீண்டும் மீன் பிடிக்க கடலுக்குள் செல்ல உள்ளனனர். படகுகளை பழுது பார்ப்பது, மீன்பிடி வலைகளை சரி செய்வது உள்ளிட்ட பணிகளில் அவர்கள் தீவிரமாக இறங்கி உள்ளனர்.
நாளை முதல் மீண்டும் ஆழ்கடல் மீன்பிடி தொடங்கும். அதாவது இன்று நள்ளிரவு 12 மணியுடன் தடை முடிவதால் நள்ளிரவுக்கு மேல் கடலுக்குள் செல்ல படகுகள் மற்றும் மீனவர்கள் தயாராகி வருகின்றனர். மீன்பிடி தடைக்காலத்தின் காரணமாக அதிக அளவில் மீன்கள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளதால் மீனவர்கள் உற்சாகத்துடன் கடலுக்குள் செல்ல உள்ளனர். அதே சமயம் இலங்கை கடற்படையானது தங்களுக்கு எந்தவித இடையூறும் செய்யாமல் இருக்க வேண்டும் என்று ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}