செங்கல்பட்டு அருகே விபரீதம்.. படுவேகமாக வந்த கார் மோதி.. மாடு மேய்த்த 5 பெண்கள் பரிதாப மரணம்!

Nov 27, 2024,08:45 PM IST

செங்கல்பட்டு: மாமல்லபுரம் அருகே ஓ.எம்.ஆர். சாலையில் கார் மோதி, சாலையோரம் மாடு மேய்த்து விட்டு அமர்ந்திருந்த 5 பெண்கள் பலியாகியுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அடுத்த ஓ.எம்.ஆர் சாலையில் பண்டித மேடு பகுதியை சேர்ந்த பெண்கள் அப்பகுதியில் உள்ள மேய்ச்சல் நிலங்களில் மாடுகளை மேய்த்து விட்டு சாலையோரம் அமர்ந்திருந்தனர். அப்போது திருப்போரூரில் இருந்து செங்கல்பட்டு நோக்கி தாறுமாறாக வந்த கார், சாலையோரமாக மாடு மேய்த்து விட்டு அமர்ந்திருந்த 5 பெண்கள் மீது மோதியது. இந்த சம்பவத்தில் வரிசையாக அமர்ந்திருந்த 5 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். 




சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார் விபத்து எவ்வாறு நடந்தது என்று விசாரணையில் ஈடுபட்டனர். விசாரணையில் கார் மோதி பலியானது,  கெளரி, ஆனந்தி, விஜயா, லோகம்மாள், யசோதா என்பது தெரிய வந்தது. உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு போலீசார் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்துள்ளனர். சம்பவத்தை அடுத்து விபத்தில் இறந்த பெண்களின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.


கார் ஓட்டி வந்த இளைஞரை அப்பகுதி மக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்தனர். போலீஸார் அவர்களிடமிருந்து அந்த நபரை மீட்டு கைது செய்து அங்கிருந்து கூட்டிச்  சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

அதிகம் பார்க்கும் செய்திகள்