செங்கல்பட்டு அருகே விபரீதம்.. படுவேகமாக வந்த கார் மோதி.. மாடு மேய்த்த 5 பெண்கள் பரிதாப மரணம்!

Nov 27, 2024,08:45 PM IST

செங்கல்பட்டு: மாமல்லபுரம் அருகே ஓ.எம்.ஆர். சாலையில் கார் மோதி, சாலையோரம் மாடு மேய்த்து விட்டு அமர்ந்திருந்த 5 பெண்கள் பலியாகியுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அடுத்த ஓ.எம்.ஆர் சாலையில் பண்டித மேடு பகுதியை சேர்ந்த பெண்கள் அப்பகுதியில் உள்ள மேய்ச்சல் நிலங்களில் மாடுகளை மேய்த்து விட்டு சாலையோரம் அமர்ந்திருந்தனர். அப்போது திருப்போரூரில் இருந்து செங்கல்பட்டு நோக்கி தாறுமாறாக வந்த கார், சாலையோரமாக மாடு மேய்த்து விட்டு அமர்ந்திருந்த 5 பெண்கள் மீது மோதியது. இந்த சம்பவத்தில் வரிசையாக அமர்ந்திருந்த 5 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். 




சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார் விபத்து எவ்வாறு நடந்தது என்று விசாரணையில் ஈடுபட்டனர். விசாரணையில் கார் மோதி பலியானது,  கெளரி, ஆனந்தி, விஜயா, லோகம்மாள், யசோதா என்பது தெரிய வந்தது. உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு போலீசார் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்துள்ளனர். சம்பவத்தை அடுத்து விபத்தில் இறந்த பெண்களின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.


கார் ஓட்டி வந்த இளைஞரை அப்பகுதி மக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்தனர். போலீஸார் அவர்களிடமிருந்து அந்த நபரை மீட்டு கைது செய்து அங்கிருந்து கூட்டிச்  சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!

news

இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி

news

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

news

தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!

news

ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

news

கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)

news

ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்

அதிகம் பார்க்கும் செய்திகள்