செங்கல்பட்டு அருகே விபரீதம்.. படுவேகமாக வந்த கார் மோதி.. மாடு மேய்த்த 5 பெண்கள் பரிதாப மரணம்!

Nov 27, 2024,08:45 PM IST

செங்கல்பட்டு: மாமல்லபுரம் அருகே ஓ.எம்.ஆர். சாலையில் கார் மோதி, சாலையோரம் மாடு மேய்த்து விட்டு அமர்ந்திருந்த 5 பெண்கள் பலியாகியுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அடுத்த ஓ.எம்.ஆர் சாலையில் பண்டித மேடு பகுதியை சேர்ந்த பெண்கள் அப்பகுதியில் உள்ள மேய்ச்சல் நிலங்களில் மாடுகளை மேய்த்து விட்டு சாலையோரம் அமர்ந்திருந்தனர். அப்போது திருப்போரூரில் இருந்து செங்கல்பட்டு நோக்கி தாறுமாறாக வந்த கார், சாலையோரமாக மாடு மேய்த்து விட்டு அமர்ந்திருந்த 5 பெண்கள் மீது மோதியது. இந்த சம்பவத்தில் வரிசையாக அமர்ந்திருந்த 5 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். 




சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார் விபத்து எவ்வாறு நடந்தது என்று விசாரணையில் ஈடுபட்டனர். விசாரணையில் கார் மோதி பலியானது,  கெளரி, ஆனந்தி, விஜயா, லோகம்மாள், யசோதா என்பது தெரிய வந்தது. உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு போலீசார் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்துள்ளனர். சம்பவத்தை அடுத்து விபத்தில் இறந்த பெண்களின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.


கார் ஓட்டி வந்த இளைஞரை அப்பகுதி மக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்தனர். போலீஸார் அவர்களிடமிருந்து அந்த நபரை மீட்டு கைது செய்து அங்கிருந்து கூட்டிச்  சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

சென்னை வாக்குப்பதிவில் சுவாரஸ்யம்.. சதவீதம் உயர்வு.. ஆனால் ஓட்டுப் போட்டவர்கள் குறைவுதான்!

news

Chettinadu Kitchen: அடித்துத் தாக்கும் வெயிலுக்கு..அதிரடி தேங்காய் பால் கஞ்சியும்..பருப்பு துவையலும்

news

Siva Puranam: பிரபஞ்சத்தின் ஜோதிலிங்கமான.. சிவபெருமான்.. சிவபுராணம் (2)

news

தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளியின் நிறைவு நாளை எப்படி கொண்டாடலாம்?

news

மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்.. கோலாகல ஏற்பாடுகள் தீவிரம்

news

Cards Playing: சீட்டு விளையாடலாமா? விளையாடக்கூடாதா?

news

கூண்டுக்குள் வளர்க்காதீர்கள்: இன்றைய பெற்றோருக்கான புதிய சவால்!

news

குழந்தைகளும் கைபேசியும்: பொம்மலாட்டம் வழி ஒரு விழிப்புணர்வு!

news

அன்பும், கருணையும் கலந்து உருவான உலகம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்