தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு... 3 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

May 20, 2025,11:57 AM IST

கிருஷ்ணகிரி: தென்பெண்ணை ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளதால், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை ஆகிய 3 மாவட்டங்களுக்கு வெள்ள ஆபாய  எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.


கர்நாடாகாவில் பெய்து வரும் கனமழையால், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர்  அருகே உள்ள கெலவரப்பள்ளி அணை நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இந்த அணை வேகமாக நிரம்பி வரும் நிலையில், தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் தென்பெண்ணை ஆற்றின்  கரையோரம் உள்ள 3 மாவட்ட மக்களுக்கு வெள்ள ஆபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.




கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்துள்ளது. 52 அடி உயரம் கொண்ட அணையின் நீர் மட்டம் 51 அடியை தற்போது எட்டியது. இதனால், அணையின் பாதுகாப்பு கருதி முன் எச்சரிக்கையாக வினாடிக்கு 4,000 கன அடி நீர் தென்பெண்ணை  ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால், தென்பெண்ணை ஆற்றில் தரைப்பாலத்தை மூழ்கி தண்ணீர் செல்கிறது. தொடர்ந்து அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கக் கூடும் என்பதால் அணையில் இருந்து எந்த நேரமும் கூடுதல் நீர் திறக்க வாய்ப்புள்ளது.


இதன் காரணமாக, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை ஆகிய 3 மாவட்டங்களில் தென்பெண்ணை ஆற்றின் கரையேராம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், ஆற்றில் பொதுமக்கள் குளிக்கவோ, ஆற்றில் இறங்கவோ, ஆற்றைக் கடக்கவோ வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

திமுகவின் சரமாரி தாக்குதலிலிருந்து தப்ப.. அதிமுக, பாஜகவுடன் ஐக்கியமாவாரா தவெக விஜய்?

news

TVK Vijay: தவெக தலைவர் விஜய்யுடன்.. பவன் கல்யாண் பேசி வருகிறாரா.. உண்மை என்ன?

news

விஜய்க்கு மீண்டும் சிபிஐ சம்மன்...நாளை தவெக வேட்பாளர் நேர்காணல் நடப்பதில் சிக்கல்

news

குந்தவை த்ரிஷா பற்றி சர்ச்சை கருத்து...மன்னிப்பு கேட்டார் நடிகர் பார்த்திபன்

news

அமெரிக்காவுலதாங்க அதுக்குப் பேரு இறைச்சி பந்து.. நம்ம ஊர்ல என்ன தெரியுமா?

news

கேஸ் சிலிண்டர் புக் பண்ண போறீங்களா?...இந்த புதிய விதிகளை தெரிஞ்சுக்க மறந்துடாதீங்க

news

தமிழக ராஜ்யசபா தேர்தல்... 6 வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்வு

news

ஈரான் போர் பதற்றம்..எதிர்க்கட்சிகள் அமளி...வெளியுறவுத்துறை அமைச்சர் விளக்கம்

news

மார்ச் 12ல் தமிழகம் தழுவிய போராட்டம்...தவெக அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்