தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு... 3 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

May 20, 2025,11:57 AM IST

கிருஷ்ணகிரி: தென்பெண்ணை ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளதால், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை ஆகிய 3 மாவட்டங்களுக்கு வெள்ள ஆபாய  எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.


கர்நாடாகாவில் பெய்து வரும் கனமழையால், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர்  அருகே உள்ள கெலவரப்பள்ளி அணை நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இந்த அணை வேகமாக நிரம்பி வரும் நிலையில், தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் தென்பெண்ணை ஆற்றின்  கரையோரம் உள்ள 3 மாவட்ட மக்களுக்கு வெள்ள ஆபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.




கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்துள்ளது. 52 அடி உயரம் கொண்ட அணையின் நீர் மட்டம் 51 அடியை தற்போது எட்டியது. இதனால், அணையின் பாதுகாப்பு கருதி முன் எச்சரிக்கையாக வினாடிக்கு 4,000 கன அடி நீர் தென்பெண்ணை  ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால், தென்பெண்ணை ஆற்றில் தரைப்பாலத்தை மூழ்கி தண்ணீர் செல்கிறது. தொடர்ந்து அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கக் கூடும் என்பதால் அணையில் இருந்து எந்த நேரமும் கூடுதல் நீர் திறக்க வாய்ப்புள்ளது.


இதன் காரணமாக, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை ஆகிய 3 மாவட்டங்களில் தென்பெண்ணை ஆற்றின் கரையேராம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், ஆற்றில் பொதுமக்கள் குளிக்கவோ, ஆற்றில் இறங்கவோ, ஆற்றைக் கடக்கவோ வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழகத்தில் இன்று16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!

news

மாம்பழ விவசாயிகளின் நலனுக்காக... பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

news

தமிழ்நாட்டில் புதிய முதலீடுகள்... அம்பலமான திமுக அரசின் புளுகு: அன்புமணி காட்டம்

news

4 ஆண்டுகளாக அரசு முடங்கிக் கிடந்ததற்கு, இப்போது நடக்கும் கண்துடைப்பு முகாம்களே சாட்சி: அண்ணாமலை

news

ஆந்திராவில் பிரம்மாண்ட ஏஐ மையம் அமைக்கும் கூகுள்... இன்று ஒப்பந்தம் கையெழுத்து!

news

பொண்டாட்டி இலவசம் என்று கூறுவதா.. மனிதராகவே இருக்கத் தகுதியற்ற சி.வி. சண்முகம்.. அமைச்சர் கீதா ஜீவன்

news

முதல்வர் நிதீஷ் குமார் வீட்டின் முன் போராட்டம்.. சீட் கிடைக்காததால் ஜேடியு எம்.எல்.ஏ தர்ணா

news

பீகார் சட்டசபைத் தேர்தல்.. இந்தியா கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டில் தொடரும் இழுபறி

news

41 குடும்பங்களுக்கும் மாதம் ரூ. 5000.. தவெக சார்பில் ஜேப்பியார் கல்லூரி தலைவர் வழங்குகிறார்!

அதிகம் பார்க்கும் செய்திகள்