சென்னை: தென் சென்னை பாஜக வேட்பாளர் டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன் பிரச்சாரம் செய்து வந்த போது, ஜேசிபியால் பூ மழை பொழிந்து வரவேற்றுள்ளனர்.
தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தல் நடைபெற இன்னும் ஆறு நாட்களே உள்ள நிலையில், பாஜக வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் தென் சென்னை தொகுதியில் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன், அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் ஆகியோரை எதிர்த்து போட்டியிடுகிறார். இதனால் இந்தப் பகுதிகளில் டப் காம்பெடிஷன் நடைபெறுகிறது. ஏனெனில் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் ஏற்கனவே ஆளுநர் பதவியை ராஜினாமா செய்து விட்டு பாஜகவில் இணைந்தார். இதற்காக தீவிர பிரச்சாரமும் மேற்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில் தென் சென்னை தொகுதியில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என தீவிர போட்டி நடைபெற்று வருகிறது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா எல்லோரும் அறிந்ததே. அந்த திருவிழாவில் மீனாட்சி அம்மனின் திரு வீதி உலா நேற்று முதல் தொடங்கப்பட்டது . அப்போது ஒவ்வொரு நாளும் சொக்கரும் மீனாட்சியம்மனும் திருவீதி உலா வரும்போது மேல மாசி வீதி பகுதிகளில் வானத்து தூதர்கள் போல ஒரு பொம்மையை ஏற்பாடு செய்து, அம்மையும் அப்பனும் மீது பூக்களை கொட்டி மாலை அணிவித்து சிறப்பு வரவேற்பு நடத்துவது வழக்கம்.
அதுபோல டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன் தீவிர பிரச்சாரம் செய்ய வாகன பேரணி மேற்கொள்ளும் போது ஜே சி பி யில் நிறைய மலர்களை நிரப்பி தமிழிசை சௌந்தர்ராஜன் தலை மீது பூமழை பொழிந்தது. அந்த நொடியில் தமிழிசை சௌந்தர்ராஜன் அருகில் ஜேசிபி வரவும் பதறிப் போனார். அது மட்டுமல்லாமல் பொக்லைன் மூலம் ராட்சத மாலையும் அணிவிக்கப்பட்டது. இதனை பாஜக தொண்டர்கள் அனைவரும் வரவேற்று மகிழ்ச்சியில் கைகளை தட்டினர். பின்னர் தமிழிசை சௌந்தர்ராஜன் மகிழ்ச்சியில் பூக்களை அள்ளி தொண்டர்கள் மீது தூவி வாக்கு சேகரித்தார்.
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
தவெகவின் பூத் கமிட்டி மாநாட்டில்.. கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டார்.. விஜய்!
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
{{comments.comment}}