சென்னை: தென் சென்னை பாஜக வேட்பாளர் டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன் பிரச்சாரம் செய்து வந்த போது, ஜேசிபியால் பூ மழை பொழிந்து வரவேற்றுள்ளனர்.
தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தல் நடைபெற இன்னும் ஆறு நாட்களே உள்ள நிலையில், பாஜக வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் தென் சென்னை தொகுதியில் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன், அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் ஆகியோரை எதிர்த்து போட்டியிடுகிறார். இதனால் இந்தப் பகுதிகளில் டப் காம்பெடிஷன் நடைபெறுகிறது. ஏனெனில் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் ஏற்கனவே ஆளுநர் பதவியை ராஜினாமா செய்து விட்டு பாஜகவில் இணைந்தார். இதற்காக தீவிர பிரச்சாரமும் மேற்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில் தென் சென்னை தொகுதியில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என தீவிர போட்டி நடைபெற்று வருகிறது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா எல்லோரும் அறிந்ததே. அந்த திருவிழாவில் மீனாட்சி அம்மனின் திரு வீதி உலா நேற்று முதல் தொடங்கப்பட்டது . அப்போது ஒவ்வொரு நாளும் சொக்கரும் மீனாட்சியம்மனும் திருவீதி உலா வரும்போது மேல மாசி வீதி பகுதிகளில் வானத்து தூதர்கள் போல ஒரு பொம்மையை ஏற்பாடு செய்து, அம்மையும் அப்பனும் மீது பூக்களை கொட்டி மாலை அணிவித்து சிறப்பு வரவேற்பு நடத்துவது வழக்கம்.

அதுபோல டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன் தீவிர பிரச்சாரம் செய்ய வாகன பேரணி மேற்கொள்ளும் போது ஜே சி பி யில் நிறைய மலர்களை நிரப்பி தமிழிசை சௌந்தர்ராஜன் தலை மீது பூமழை பொழிந்தது. அந்த நொடியில் தமிழிசை சௌந்தர்ராஜன் அருகில் ஜேசிபி வரவும் பதறிப் போனார். அது மட்டுமல்லாமல் பொக்லைன் மூலம் ராட்சத மாலையும் அணிவிக்கப்பட்டது. இதனை பாஜக தொண்டர்கள் அனைவரும் வரவேற்று மகிழ்ச்சியில் கைகளை தட்டினர். பின்னர் தமிழிசை சௌந்தர்ராஜன் மகிழ்ச்சியில் பூக்களை அள்ளி தொண்டர்கள் மீது தூவி வாக்கு சேகரித்தார்.
தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளியின் நிறைவு நாளை எப்படி கொண்டாடலாம்?
Chettinadu Kitchen: அடித்துத் தாக்கும் வெயிலுக்கு..அதிரடி தேங்காய் பால் கஞ்சியும்..பருப்பு துவையலும்
ஆதலால் காதல் செய்வீர்!
மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்.. கோலாகல ஏற்பாடுகள் தீவிரம்
சென்னை வாக்குப்பதிவில் சுவாரஸ்யம்.. சதவீதம் உயர்வு.. ஆனால் ஓட்டுப் போட்டவர்கள் குறைவுதான்!
Tamil Nadu Assembly elections: தமிழ்நாட்டில் 84.29% வாக்குப் பதிவு.. கரூர் மாவட்டத்தில்தான் உச்சம்!
தமிழ்நாடு முழுக்க வாக்குப் பதிவு விகிதம் அதிகரிக்க என்ன காரணம்.. சென்னையும் கலக்குதே!
வாக்குப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் அதிகரிங்க.. தேர்தல் ஆணையத்துக்கு விஜய் கோரிக்கை
முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, விஜய், ரஜினி, கமல், அஜீத் ஓட்டுப் போட்டாச்சு!
{{comments.comment}}