ஊட்டி: ஊட்டியில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் அரசு சார்பில் மலர் கண்காட்சி மற்றும் நாய்கள் கண்காட்சி மே 10ம் தேதி தொடங்கவுள்ளது.
தமிழ்நாட்டில் சமீபகாலமாக வெயில் சக்கை போடு போட்டு வருகிறது. இதனை மக்கள் சமாளிக்க முடியாமல் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இந்த நிலையில் ஊட்டியில் தற்போது நல்ல சீதோசனம் நிலை நிலவி வருகிறது. இதனால் அங்கு சுற்றுலா பயணிகள் பெருமளவில் கூட்டம் கூட்டமாக படையெடுத்து வருவதால் ஊட்டியில் கோடை சீசன் களைகட்ட ஆரம்பித்துள்ளது.
ஊட்டியில் ஒவ்வொரு வருடமும் மக்களைக் கவரும் வகையில் அரசு சார்பில் மலர் கண்காட்சியும் தேசிய நாய்கள் கண்காட்சியும் நடைபெறும். கோடை காலத்தில் நல்ல குளுமையான சீசனை அனுபவிப்பது மட்டுமல்லாமல் அங்கு நடைபெறும் மலர் கண்காட்சியையும், நாய்கள் கண்காட்சியையும் காண ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டுவார்கள்.

அந்த வகையில் இந்த வருடம் மக்கள் கண்டு ரசிக்க ஏற்ற வகையில் தாவரவியல் பூங்கா மற்றும் ரோஜா பூங்காவில் மே 10 முதல் பத்து நாட்கள் வரை மலர் கண்காட்சி நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது 126 ஆவது மலர் கண்காட்சியாகும். இந்த மலர்க்காட்சியை மக்கள் கண்டு களிக்க பிரம்மாண்ட ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
அதேபோல, மே 10 முதல் தேசிய நாய்கள் கண்காட்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மே 10ம் தேதி தொடங்கி மூன்று நாட்கள் நடைபெற உள்ளது. இது 134 வது கண்காட்சியாகும். கண்காட்சியை காண வரும் மக்கள் கூட்டத்தை சமாளிக்க தகுந்த நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் எடுத்துள்ளது.
முதல் முறையாக.. சொன்ன நேரத்துக்கு முன்பே வந்து சேர்ந்த தவெக தலைவர் விஜய்!
தஞ்சை பெருவுடையார் கோயில் கல்வெட்டில் இடம் பெற்ற ஒரு பெண்ணின் பெயர்.. யார் அவர்?
விழாக்கோலம் பூண்ட புதுச்சேரி.. சீக்கிரமே வந்து விஜய்.. பேச்சைக் கேட்க திரண்ட தவெக தொண்டர்கள்!
Movie review: வசூலை வாரிக் குவிக்கும் தேரே இஷ்க் மேய்ன்.. எப்படி இருக்கு படம்?
நொறுங்கத் தின்றவனுக்கு நூறு வயசு.. பழமொழியும் உண்மை பொருளும்!
ஓம்கார ஹரியே .. ஒம் ஒம்ஹரியே கோவிந்தஹரியே .. கோவர்த்தனம் சுமந்த ஹரி நீ!
பேரின்பப் பெருவாழ்வு பெற்று உய்க... தேவாரத் தலங்களின் விளக்கமும், செல்லும் வழிகளும்!
நவதானிய லட்டு.. கர்ப்பிணிப் பெண்களுக்கு சூப்பரான உணவு.. ரத்தம் ஊறுமாம்!
சுண்டலான்னு.. கிண்டலா கேட்காதீங்க பாஸ் .. புரதங்களின் அரசன்.. குழந்தைகளின் சிறந்த snacks!
{{comments.comment}}