ஊட்டி: ஊட்டியில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் அரசு சார்பில் மலர் கண்காட்சி மற்றும் நாய்கள் கண்காட்சி மே 10ம் தேதி தொடங்கவுள்ளது.
தமிழ்நாட்டில் சமீபகாலமாக வெயில் சக்கை போடு போட்டு வருகிறது. இதனை மக்கள் சமாளிக்க முடியாமல் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இந்த நிலையில் ஊட்டியில் தற்போது நல்ல சீதோசனம் நிலை நிலவி வருகிறது. இதனால் அங்கு சுற்றுலா பயணிகள் பெருமளவில் கூட்டம் கூட்டமாக படையெடுத்து வருவதால் ஊட்டியில் கோடை சீசன் களைகட்ட ஆரம்பித்துள்ளது.
ஊட்டியில் ஒவ்வொரு வருடமும் மக்களைக் கவரும் வகையில் அரசு சார்பில் மலர் கண்காட்சியும் தேசிய நாய்கள் கண்காட்சியும் நடைபெறும். கோடை காலத்தில் நல்ல குளுமையான சீசனை அனுபவிப்பது மட்டுமல்லாமல் அங்கு நடைபெறும் மலர் கண்காட்சியையும், நாய்கள் கண்காட்சியையும் காண ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டுவார்கள்.

அந்த வகையில் இந்த வருடம் மக்கள் கண்டு ரசிக்க ஏற்ற வகையில் தாவரவியல் பூங்கா மற்றும் ரோஜா பூங்காவில் மே 10 முதல் பத்து நாட்கள் வரை மலர் கண்காட்சி நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது 126 ஆவது மலர் கண்காட்சியாகும். இந்த மலர்க்காட்சியை மக்கள் கண்டு களிக்க பிரம்மாண்ட ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
அதேபோல, மே 10 முதல் தேசிய நாய்கள் கண்காட்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மே 10ம் தேதி தொடங்கி மூன்று நாட்கள் நடைபெற உள்ளது. இது 134 வது கண்காட்சியாகும். கண்காட்சியை காண வரும் மக்கள் கூட்டத்தை சமாளிக்க தகுந்த நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் எடுத்துள்ளது.
Tamil Nadu Assembly elections: தமிழ்நாட்டில் 84.29% வாக்குப் பதிவு.. கரூர் மாவட்டத்தில்தான் உச்சம்!
தமிழ்நாடு முழுக்க வாக்குப் பதிவு விகிதம் அதிகரிக்க என்ன காரணம்.. சென்னையும் கலக்குதே!
வாக்குப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் அதிகரிங்க.. தேர்தல் ஆணையத்துக்கு விஜய் கோரிக்கை
முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, விஜய், ரஜினி, கமல், அஜீத் ஓட்டுப் போட்டாச்சு!
சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்வு? - வதந்தி என.. மத்திய அரசு விளக்கம்!
விதைக்குள் காடு விரும்பி அதை நாடு!
நெருங்குதலும் விலகலும்
Dr Latha poems: அமைதியே என் ஆயுதம்.. நான் என உறுதி கொள்!
English Language Day: வில்லியம் ஷேக்ஸ்பியரை நினைவு கூர்ந்து Thanks சொல்வோம்!
{{comments.comment}}