ஊட்டி: ஊட்டியில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் அரசு சார்பில் மலர் கண்காட்சி மற்றும் நாய்கள் கண்காட்சி மே 10ம் தேதி தொடங்கவுள்ளது.
தமிழ்நாட்டில் சமீபகாலமாக வெயில் சக்கை போடு போட்டு வருகிறது. இதனை மக்கள் சமாளிக்க முடியாமல் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இந்த நிலையில் ஊட்டியில் தற்போது நல்ல சீதோசனம் நிலை நிலவி வருகிறது. இதனால் அங்கு சுற்றுலா பயணிகள் பெருமளவில் கூட்டம் கூட்டமாக படையெடுத்து வருவதால் ஊட்டியில் கோடை சீசன் களைகட்ட ஆரம்பித்துள்ளது.
ஊட்டியில் ஒவ்வொரு வருடமும் மக்களைக் கவரும் வகையில் அரசு சார்பில் மலர் கண்காட்சியும் தேசிய நாய்கள் கண்காட்சியும் நடைபெறும். கோடை காலத்தில் நல்ல குளுமையான சீசனை அனுபவிப்பது மட்டுமல்லாமல் அங்கு நடைபெறும் மலர் கண்காட்சியையும், நாய்கள் கண்காட்சியையும் காண ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டுவார்கள்.
அந்த வகையில் இந்த வருடம் மக்கள் கண்டு ரசிக்க ஏற்ற வகையில் தாவரவியல் பூங்கா மற்றும் ரோஜா பூங்காவில் மே 10 முதல் பத்து நாட்கள் வரை மலர் கண்காட்சி நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது 126 ஆவது மலர் கண்காட்சியாகும். இந்த மலர்க்காட்சியை மக்கள் கண்டு களிக்க பிரம்மாண்ட ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
அதேபோல, மே 10 முதல் தேசிய நாய்கள் கண்காட்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மே 10ம் தேதி தொடங்கி மூன்று நாட்கள் நடைபெற உள்ளது. இது 134 வது கண்காட்சியாகும். கண்காட்சியை காண வரும் மக்கள் கூட்டத்தை சமாளிக்க தகுந்த நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் எடுத்துள்ளது.
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}