சுற்றுலா பயணிகளே.. ஊட்டியில்.. மே 10 முதல்.. மலர் கண்காட்சி,  நாய்கள் கண்காட்சி.. Don't miss it!

May 04, 2024,02:48 PM IST

ஊட்டி:  ஊட்டியில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் அரசு சார்பில் மலர் கண்காட்சி மற்றும் நாய்கள் கண்காட்சி மே 10ம் தேதி தொடங்கவுள்ளது.


தமிழ்நாட்டில் சமீபகாலமாக வெயில் சக்கை போடு போட்டு வருகிறது. இதனை மக்கள் சமாளிக்க முடியாமல் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இந்த நிலையில் ஊட்டியில் தற்போது நல்ல சீதோசனம் நிலை நிலவி வருகிறது. இதனால் அங்கு சுற்றுலா பயணிகள் பெருமளவில்  கூட்டம் கூட்டமாக படையெடுத்து வருவதால் ஊட்டியில் கோடை சீசன் களைகட்ட ஆரம்பித்துள்ளது.


ஊட்டியில் ஒவ்வொரு வருடமும் மக்களைக் கவரும் வகையில் அரசு சார்பில் மலர் கண்காட்சியும் தேசிய நாய்கள் கண்காட்சியும் நடைபெறும். கோடை காலத்தில் நல்ல குளுமையான சீசனை அனுபவிப்பது மட்டுமல்லாமல் அங்கு நடைபெறும் மலர் கண்காட்சியையும், நாய்கள் கண்காட்சியையும் காண ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டுவார்கள்.




அந்த வகையில் இந்த வருடம் மக்கள் கண்டு ரசிக்க ஏற்ற வகையில் தாவரவியல் பூங்கா மற்றும் ரோஜா பூங்காவில் மே 10 முதல் பத்து நாட்கள் வரை மலர் கண்காட்சி நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது 126 ஆவது மலர் கண்காட்சியாகும். இந்த மலர்க்காட்சியை  மக்கள் கண்டு களிக்க பிரம்மாண்ட ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.


அதேபோல, மே 10 முதல் தேசிய நாய்கள் கண்காட்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மே 10ம் தேதி தொடங்கி மூன்று நாட்கள்  நடைபெற உள்ளது. இது 134 வது கண்காட்சியாகும். கண்காட்சியை காண வரும் மக்கள் கூட்டத்தை சமாளிக்க தகுந்த நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் எடுத்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!

news

கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!

news

23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்

news

அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!

news

ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!

news

ஆந்திராவில் பேருந்து விபத்து..20 பேர் பலி..11 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:மாவட்ட ஆட்சியர் தகவல்!

news

விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சி.. அடுத்தடுத்து டக் அவுட் ஆனால்.. ரவி சாஸ்திரி வார்னிங்!

news

தமிழ்நாட்டில் நாளை.. அரசு அலுவலகங்கள்.. பள்ளிகள் இயங்கும்.. மாநில அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்