நாம் ஒவ்வொருவரும் பொறுப்புடன் செயல்பட்டால் திரையுலகம் இன்னும் உயரும்.. நடிகர் சூரி வேண்டுகோள்!

May 24, 2025,12:18 PM IST

சென்னை: திருட்டு பதிவிறக்கம் செய்யாதீர்கள். திரைப்படங்களை சரியான வழியில் பார்த்து அதை உருவாக்கியவர்களின் உழைப்புக்கு மரியாதை கொடுங்கள். உங்கள் ஆதரவு தான் ஒரு படைப்பாளிக்கு மிகப்பெரிய விருது. நாம் ஒவ்வொருவரும் வரும் மாற்றத்திற்கான பொறுப்புடன் செயல்பட்டால் திரையுலகம் இன்னும் உயரலாம் என நடிகர் சூரி கூறியுள்ளார்.



இயக்குநர் பிரஷாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில், சூரி நடிப்பில் உருவாகி கடந்த வாரம்8 வெளிவந்த திரைப்படம் மாமன். இப்படம் வெளியாகி  மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. குடும்பம் பின்னணியை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள  இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும்,  சாதனை படைத்து வருகிறது. கடந்த 8 நாட்களில் உலகளவில்  பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனில் ரூ. 24 கோடி வசூலித்துள்ளது.


இந்த நிலையில் மாமன் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் சூரி தனது ட்விட்டர் பக்கத்தில் மக்களுக்கு வேண்டுகோள் எடுத்து ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறுகையில், 




ஒரு திரைப்படம் என்பது வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல. அது பலரின் கனவுகளுக்கும், உயிரோட்டமான உழைப்புகளுக்கும் சேர்ந்த ஒன்று. 


இந்த உரை என் திரைப்படத்திற்காக மட்டுமல்ல. ஒவ்வொரு படத்திற்கும் பின்னால் நூற்றுக்கும் மேற்பட்டோரின் பணி, தியாகம், நம்பிக்கை, மற்றும் அக்கறை இருக்கின்றன. 


ஒரு படம் உருவாகிறது என்றால் அது ஒரு குழந்தை பிறப்பதை போல கதையிலிருந்து தொடங்கி படப்பிடிப்பு, பின்னணி, வேலை, தொகுப்பு, இசை, விளம்பரங்கள், என ஒவ்வொரு கட்டமும் உணர்வுகள் கலந்து மாறாத உறுதியுடன் கட்டி எழுப்பப்படுகிறது. 


ஒரு படம் வென்றாலும், தோற்றாலும் அது ஒரு பயணம். அந்த பயணத்தில் வலிகள், மகிழ்ச்சிகள், நம்பிக்கைகள், அனைத்தும் கலந்திருக்கின்றன. இவ்வளவு முயற்சிக்குப் பிறகு சிலர் இணையத்தில் திருட்டுத்தனமாக பதிவிறக்கம் செய்து பார்த்துவிட்டு அதை பெருமையாக பகிரும் போது அது நம் உள்ளத்தை சிதைக்கிறது. அந்த ஒரு வியூ க்காக யாரோ ஒருவரின் வருடங்கள் கொண்ட உழைப்பை களைத்து விடுகிறோம். 


திரைப்படங்கள் மக்களை மகிழ்விப்பதற்காக மட்டுமல்ல. சில நேரங்களில் சமூகத்தில் முக்கியமான கருத்துக்களை எடுத்துரைக்கும்  வழிமுறையாகவும் உருவாகின்றன. சில படம் யாரோ ஒருவரின் வாழ்க்கையின் பிரதிபலிப்பு. 


இத்தனை தன்னலமில்லாத உழைப்பை மதிக்காமல் திருட்டு பதிவிறக்கம் செய்வது சட்ட விரோதம் மட்டுமல்ல; மனிதநேயத்தையும் கைவிடும் செயல். எனவே, என் பணிவான வேண்டுகோள். 


திருட்டு பதிவிறக்கம் செய்யாதீர்கள் திரைப்படங்களை சரியான வழியில் பார்த்து அதை உருவாக்கியவர்களின் உழைப்புக்கு மரியாதை கொடுங்கள். உங்கள் ஆதரவு தான் ஒரு படைப்பாளிக்கு மிகப்பெரிய விருது. நாம் ஒவ்வொருவரும் வரும் மாற்றத்திற்கான பொறுப்புடன் செயல்பட்டால் திரையுலகம் இன்னும் உயரலாம் என பதிவிட்டுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அதிமுக.,வுக்கு பெரும்பான்மை...என்டிஏ 210 இடங்களில் வெற்றி...எடப்பாடி பழனிச்சாமி உறுதி

news

பிரமிக்க வைக்கும் பிரண்டை துவையல்.. வரலாறு கூறும் சமையல் (பகுதி 3)

news

வசந்த நவராத்திரி!

news

அண்ணன் எடப்பாடி கே.பழனிச்சாமி...டிடிவி தினகரன் பேச்சால் ஆர்ப்பரித்த தொண்டர்கள்

news

ஆங்கிலேயர்களின் கண்ணில் விரலை விட்டு ஆட்டிய.. நாயகன்.. சுபாஷ் சந்திர போஸ்!

news

உங்க வாழ்க்கையே ஆதாரமாகட்டும்.. Let Your Life Be the Proof

news

நாளை 7 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!

news

மதுராந்தகத்தில் பாஜகவின் ஜல்லிக்கட்டு.. பிரதமர் மோடியின் வருகையும் 2026 தேர்தல் கணக்கும்!

news

NDA கூட்ட மேடையில் 'மாம்பழம்' சின்னம்: பிரதமர் மோடி முன்னிலையில் விதிமீறல் என ராமதாஸ் கடும் கண்டனம்

அதிகம் பார்க்கும் செய்திகள்