கம்பம்: தேனி மாவட்டம் வண்ணாத்திப்பாறைப் பகுதி வழியாக காட்டுக்குள் நுழைந்த முதியவர் ஈஸ்வரன் என்பவர் வனத்துறையினரின் துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியானார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியும் பரபரப்பும் நிலவுகிறது.
வனத்துறை துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். வயலில் காவல் காப்பதற்காக போனவர் ஈஸ்வரன் என்று உறவினர்கள் கூறியுள்ளனர். ஆனால் வனத்துக்குள் அத்துமீறி நுழைந்ததாகவும், வனத்துறையினர் தடுத்து நிறுத்தியபோது அரிவாளால் தாக்க வந்ததாகவும், இதனால்தான் சுடப்பட்டதாகவும், வனத்துறை தரப்பில் கூறப்படுகிறது.
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள குள்ளப்பகவுண்டன் பட்டியைச் சேர்ந்தவர்தான் ஈஸ்வரன். வண்ணாத்திப்பாறைப் பகுதியில் இவர் காட்டுக்குள் நுழைந்ததாக கூறப்படுகிறது. அவரை தடுத்து நிறுத்த முயன்றபோது ஏற்பட்ட மோதலில்தான் வனத்துறையினர் சுட்டதாக சொல்லப்படுகிறது. இருப்பினும் உண்மையில் என்ன நடந்தது என்பது இதுவரை அதிகாரப்பூர்வமாக தெரியவில்லை.
கொல்லப்பட்ட ஈஸ்வரனின் உடல் கம்பம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. அங்கு பிரேதப் பரிசோதனை நடந்து வருகிறது.
ஒரு முதியவர் எப்படி வனத்துறையினரை எதிர்க்க முடியும்.. அதுவும் துப்பாக்கிகளுடன் வனத்துறையினர் இருக்கும்போது எதிர்க்கும் தைரியம் எப்படி வரும்.. சாதாரணமான முறையில் ஈஸ்வரனை தடுத்து அனுப்பியிருக்கலாமே.. அதை விடுத்து சுடும் அளவுக்கு நிலைமை போனது ஏன் என்று தெரியவில்லை. இந்த சம்பவத்தால் பதட்டம் நிலவுவதால் அப்பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
நேபாளத்தில் போராட்டக்காரர்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு: 14 பேர் பலி
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
தாய்!!!
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
{{comments.comment}}