கம்பம்: தேனி மாவட்டம் வண்ணாத்திப்பாறைப் பகுதி வழியாக காட்டுக்குள் நுழைந்த முதியவர் ஈஸ்வரன் என்பவர் வனத்துறையினரின் துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியானார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியும் பரபரப்பும் நிலவுகிறது.
வனத்துறை துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். வயலில் காவல் காப்பதற்காக போனவர் ஈஸ்வரன் என்று உறவினர்கள் கூறியுள்ளனர். ஆனால் வனத்துக்குள் அத்துமீறி நுழைந்ததாகவும், வனத்துறையினர் தடுத்து நிறுத்தியபோது அரிவாளால் தாக்க வந்ததாகவும், இதனால்தான் சுடப்பட்டதாகவும், வனத்துறை தரப்பில் கூறப்படுகிறது.
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள குள்ளப்பகவுண்டன் பட்டியைச் சேர்ந்தவர்தான் ஈஸ்வரன். வண்ணாத்திப்பாறைப் பகுதியில் இவர் காட்டுக்குள் நுழைந்ததாக கூறப்படுகிறது. அவரை தடுத்து நிறுத்த முயன்றபோது ஏற்பட்ட மோதலில்தான் வனத்துறையினர் சுட்டதாக சொல்லப்படுகிறது. இருப்பினும் உண்மையில் என்ன நடந்தது என்பது இதுவரை அதிகாரப்பூர்வமாக தெரியவில்லை.
கொல்லப்பட்ட ஈஸ்வரனின் உடல் கம்பம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. அங்கு பிரேதப் பரிசோதனை நடந்து வருகிறது.
ஒரு முதியவர் எப்படி வனத்துறையினரை எதிர்க்க முடியும்.. அதுவும் துப்பாக்கிகளுடன் வனத்துறையினர் இருக்கும்போது எதிர்க்கும் தைரியம் எப்படி வரும்.. சாதாரணமான முறையில் ஈஸ்வரனை தடுத்து அனுப்பியிருக்கலாமே.. அதை விடுத்து சுடும் அளவுக்கு நிலைமை போனது ஏன் என்று தெரியவில்லை. இந்த சம்பவத்தால் பதட்டம் நிலவுவதால் அப்பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}