கம்பம்: தேனி மாவட்டம் வண்ணாத்திப்பாறைப் பகுதி வழியாக காட்டுக்குள் நுழைந்த முதியவர் ஈஸ்வரன் என்பவர் வனத்துறையினரின் துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியானார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியும் பரபரப்பும் நிலவுகிறது.
வனத்துறை துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். வயலில் காவல் காப்பதற்காக போனவர் ஈஸ்வரன் என்று உறவினர்கள் கூறியுள்ளனர். ஆனால் வனத்துக்குள் அத்துமீறி நுழைந்ததாகவும், வனத்துறையினர் தடுத்து நிறுத்தியபோது அரிவாளால் தாக்க வந்ததாகவும், இதனால்தான் சுடப்பட்டதாகவும், வனத்துறை தரப்பில் கூறப்படுகிறது.

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள குள்ளப்பகவுண்டன் பட்டியைச் சேர்ந்தவர்தான் ஈஸ்வரன். வண்ணாத்திப்பாறைப் பகுதியில் இவர் காட்டுக்குள் நுழைந்ததாக கூறப்படுகிறது. அவரை தடுத்து நிறுத்த முயன்றபோது ஏற்பட்ட மோதலில்தான் வனத்துறையினர் சுட்டதாக சொல்லப்படுகிறது. இருப்பினும் உண்மையில் என்ன நடந்தது என்பது இதுவரை அதிகாரப்பூர்வமாக தெரியவில்லை.
கொல்லப்பட்ட ஈஸ்வரனின் உடல் கம்பம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. அங்கு பிரேதப் பரிசோதனை நடந்து வருகிறது.
ஒரு முதியவர் எப்படி வனத்துறையினரை எதிர்க்க முடியும்.. அதுவும் துப்பாக்கிகளுடன் வனத்துறையினர் இருக்கும்போது எதிர்க்கும் தைரியம் எப்படி வரும்.. சாதாரணமான முறையில் ஈஸ்வரனை தடுத்து அனுப்பியிருக்கலாமே.. அதை விடுத்து சுடும் அளவுக்கு நிலைமை போனது ஏன் என்று தெரியவில்லை. இந்த சம்பவத்தால் பதட்டம் நிலவுவதால் அப்பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
2026 சட்டசபைத் தேர்தலில் புதுச்சேரி மாநிலத்திலும் தவெக கொடி பறக்கும்...விஜய் அதிரடி பேச்சு
நாகப்பட்டினத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!
சென்னையில் நாளை கூடுகிறது.. அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு.. முக்கிய முடிவு எடுக்கப்படுமா?
எனது கையெழுத்தை போலியாக போட்டுள்ளனர்: அன்புமணி மீது ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!
TVK Vijay.. விஜய்யின் தமிழ்நாடு பிரச்சார பேச்சு Vs புதுச்சேரி பேச்சு... எது பெஸ்ட்?
லக்னோவில் நடந்த ஸ்கவுட் நிகழ்ச்சியில்.. ஜொலித்த தமிழ்நாடு மாணவி!
Most Searched Athlete: அதிரடி காட்டிய இந்திய வீரர் அபிஷேக் ஷர்மா.. பாகிஸ்தானில் காட்டிய எழுச்சி
எடப்பாடியார் அதிரடி.. கேஏ செங்கோட்டையனின் அண்ணன் மகனை இழுத்த அதிமுக!
முதல் மாதத்தில் உடையவனே தஞ்சம்.. பத்தாம் மாதத்தில் அழகான குழந்தை.. தாய்மையின் பேரழகு!
{{comments.comment}}