வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.. டிசம்பர் 1ம் தேதி புயலாக மாறும்.. செம மழை இருக்கு!

Nov 27, 2023,07:46 PM IST


- மஞ்சுளாதேவி


சென்னை: வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதில் தாமதம் ஏற்பட்டு வந்த நிலையில் தற்போது  அது உருவாகி விட்டதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. முன்னதாக அடுத்த 24 மணி நேரத்தில் உருவாக கூடும் என எதிர்பார்க்கப்பட்டது. 


தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் இந்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது தொடர்ந்து, மேற்கு வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து வருகிற 29ஆம் தேதி தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்.  அதைத் தொடர்ந்து டிசம்பர் 1ம் தேதி இது புயலாக மாறும்.




மேலும் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் 7 நாட்கள் அதாவது டிசம்பர் 2 தேதி வரை தமிழக கடலோர பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரை மழையை எதிர்ப்பார்க்கலாம்.


அந்தமான் தீவுகளில் இன்று முதல் 5 நாட்கள் கனமழையும் ,நாளை மற்றும் நாளை மறுநாள் மிக கனமழையும் பெய்யக்கூடும் என அறிவித்துள்ளது.


இன்று மழை நிலவரம்:


கடலூர், தஞ்சை, ராமநாதபுரம், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய ஏழு மாவட்டங்களில்  இன்று கன மழை பெய்யக்கூடும்.


சென்னையைப் பொறுத்தவரை ,சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் அறிவித்துள்ளது. மிதமான மழை அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் கூட சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை விடுக்கப்படவில்லை. அதேசமயம், நேற்று இரவு முழுவதும் சென்னை மற்றும் புறநகர்களில் விட்டு விட்டு மழை பெய்தபடி இருந்தது.

சமீபத்திய செய்திகள்

news

சென்னை வாக்குப்பதிவில் சுவாரஸ்யம்.. சதவீதம் உயர்வு.. ஆனால் ஓட்டுப் போட்டவர்கள் குறைவுதான்!

news

Chettinadu Kitchen: அடித்துத் தாக்கும் வெயிலுக்கு..அதிரடி தேங்காய் பால் கஞ்சியும்..பருப்பு துவையலும்

news

Siva Puranam: பிரபஞ்சத்தின் ஜோதிலிங்கமான.. சிவபெருமான்.. சிவபுராணம் (2)

news

தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளியின் நிறைவு நாளை எப்படி கொண்டாடலாம்?

news

மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்.. கோலாகல ஏற்பாடுகள் தீவிரம்

news

Cards Playing: சீட்டு விளையாடலாமா? விளையாடக்கூடாதா?

news

கூண்டுக்குள் வளர்க்காதீர்கள்: இன்றைய பெற்றோருக்கான புதிய சவால்!

news

குழந்தைகளும் கைபேசியும்: பொம்மலாட்டம் வழி ஒரு விழிப்புணர்வு!

news

அன்பும், கருணையும் கலந்து உருவான உலகம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்