- மஞ்சுளாதேவி
சென்னை: வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதில் தாமதம் ஏற்பட்டு வந்த நிலையில் தற்போது அது உருவாகி விட்டதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. முன்னதாக அடுத்த 24 மணி நேரத்தில் உருவாக கூடும் என எதிர்பார்க்கப்பட்டது.
தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் இந்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது தொடர்ந்து, மேற்கு வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து வருகிற 29ஆம் தேதி தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். அதைத் தொடர்ந்து டிசம்பர் 1ம் தேதி இது புயலாக மாறும்.

மேலும் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் 7 நாட்கள் அதாவது டிசம்பர் 2 தேதி வரை தமிழக கடலோர பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரை மழையை எதிர்ப்பார்க்கலாம்.
அந்தமான் தீவுகளில் இன்று முதல் 5 நாட்கள் கனமழையும் ,நாளை மற்றும் நாளை மறுநாள் மிக கனமழையும் பெய்யக்கூடும் என அறிவித்துள்ளது.
இன்று மழை நிலவரம்:
கடலூர், தஞ்சை, ராமநாதபுரம், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய ஏழு மாவட்டங்களில் இன்று கன மழை பெய்யக்கூடும்.
சென்னையைப் பொறுத்தவரை ,சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் அறிவித்துள்ளது. மிதமான மழை அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் கூட சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை விடுக்கப்படவில்லை. அதேசமயம், நேற்று இரவு முழுவதும் சென்னை மற்றும் புறநகர்களில் விட்டு விட்டு மழை பெய்தபடி இருந்தது.
SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்
ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்
ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!
12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
{{comments.comment}}