திருப்பதி: திருப்பதியில் கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிழந்த நிலையில், இதற்கு காரணமானவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ரோஜா கூறியுள்ளார்.
திருப்பதியில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நாளை முதல் 10 நாட்கள் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சொர்க்கவாசல் திறக்கப்படும். இந்த 10 நாட்களும் ஏழுமலையானை வழிபாடு செய்து சொர்க்கவாசல் திறப்பை பார்ப்பதற்கு தேவையான டிக்கெட்டுகளை ரூ.300 விலையில் ஏற்கனவே தேவஸ்தனம் ஆன்லைனின் விற்பனை செய்தது. இதனையடுத்து இம்மாதம் 10,11 மற்றும் 12 ஆகிய நாட்களுக்கான இலவச தரிசன டோக்கன்களை நேற்று இரவு தேவஸ்தனம் வழங்க துவங்கியது. இந்த இலவச டோக்கன்கள் திருப்பதியில் அமைக்கப்பட்டுள்ள எட்டு கவுண்டர்கள் மற்றும் திருப்பதி மலையில் அமைக்கப்பட்ட ஒரு கவுண்டர்களிலும் விநியோகம் செய்யப்பட்டது.
இலவச தரிசன டோக்கன் மற்றும் தரிசன டிக்கெட் இல்லாதவர்களுக்கு இந்த 10 நாட்களும் அனுமதி கிடையாது என்பதால், எப்படியாவது வைகுண்ட ஏகாதசி நாள் அன்று ஏழுமலையானை வழிபட்டு சொர்க்கவாசல் பிரவேசம் செய்ய வேண்டும் என்ற ஆவலில் இலவச டோக்கன்களை வாங்க மக்கள் முண்டியடித்தனர். இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில், ஆந்திர மாநில முன்னாள் அமைச்சரும் நடிகையுமான ரோஜா விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், திருப்பதியில் ஒவ்வொரு ஆண்டும் வைகுண்ட ஏகாதசிக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். அதற்கான ஏற்பாடுகுளும் செய்யப்படும். ஆனால், வரலாற்றில் இதுவரையில் நடக்காத வகையில் இந்தாண்டு 6 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு முதல்வர் சந்திரபாபு மற்றும் உள்துறை அமைச்சர், செயல்அதிகாரிகள், எஸ்பி உள்ளிட்ட அனைவரும் பொறுப்பு ஏற்க வேண்டும்.
அதிகாரிகளையும், அறங்காவலர்களையும் யார் நியமித்தது. சேவை செய்யும் எண்ணம் யாருக்கும் இல்லை. பக்தர்களுக்கு குறைந்த பட்ச வசதிகள் கூட இல்லை. இது அலட்சியத்தால் நடந்த மரணங்கள் அல்ல. ஆந்திர அரசின் கொலைகள். லட்டு விவகாரத்தில் பரிகார தீட்சை செய்த துணை முதல்வர் பவன் கல்யாண், இந்த சம்பவத்திற்கும் தீட்சை செய்வாரா? அல்லது சந்திரபாபு நாயுடுவை ராஜினாமா செய்ய வைப்பாரா?
புஷ்பா 2 கூட்ட நெரிசல் விவகாரத்தில் நடிகர் அல்லு அர்ஜூனை கைது செய்ததைப் போல, திருப்பதி கூட்ட நெரிசல் சம்பவத்திலும் இதற்கு காரணமானவர்கள் கைது செய்யப்பட வேண்டும் என்று கூறியுள்ளார். இந்த வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
ஜூலை 9ம் தேதி வரை தமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்: வானிலை ஆய்வு மையம்
ஏங்கே... கூமாபட்டியை விடுங்க.. குக்கரில் சமைத்த உணவை சாப்பிட்டால் இப்படி ஒரு ஆபத்து வருமா?
தலாய் லாமாவின் வாரிசை தீர்மானிக்க சீனாவுக்கு அதிகாரம் இல்லை.. இந்தியா பதிலடி
திருப்புவனம் அஜித்குமார் கொலை வழக்கு: சத்தீஸ்வரனுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு
ஸ்பெயினில் நடந்த கார் விபத்து.. போர்ச்சுகல் கால்பந்து வீரர் டியாகோ ஜோடா மரணம்.. ரசிகர்கள் சோகம்
ஒரு நாள் முதல்வர்.. அது படத்தில்... ஒரு நாள் பிரதமர் இது நிஜத்தில்.. தாய்லாந்தில் அசத்தல்!
ஆசிய கோப்பை கிரிக்கெட் 2025.. எல்லாம் கரெக்டாக இருந்தால்.. 3 முறை பாகிஸ்தானுடன் மோதலாம்!
எம்எல்ஏ அருளை நீக்கும் அதிகாரம் அன்புமணிக்கு இல்லை: டாக்டர் ராமதாஸ்!
பிளாஸ்டிக் இல்லாத உலகம் அமைப்போம்.. இன்று International Plastic Bag Free Day!
{{comments.comment}}