டெல்லி: இந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவராக மிதுன் மன்ஹாஸ் பொறுப்பேற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்தவரான மிதுன் மன்ஹாஸ், ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி அணிக்காக விளையாடிய வீரர் ஆவார்.
துலீப் டிராபிக்கான வட மண்டல ஒருங்கிணைப்பாளராகவும் இவர் பணியாற்றியுள்ளார். தற்போது, ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் சங்கத்தின் (JKCA) நிர்வாகியாக இருக்கிறார்.
மன்ஹாஸ் இந்திய அணிக்காக விளையாடியதில்லை. ஆனால் முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் நிறைய விளையாடியுள்ளார். டெல்லி டேர்டெவில்ஸ், புனே வாரியர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய மூன்று ஐபிஎல் அணிகளுக்காக விளையாடியுள்ளார். மேலும், 157 முதல் தர போட்டிகளில், 9,714 ரன்கள் குவித்துள்ளார்.

தற்போது ரோஜர் பின்னி பிசிசிஐ தலைவராக இருக்கிறார். இவருக்குப் பதில் தற்போது மன்ஹாஸ் தலைவராகவுள்ளார். முன்னாள் இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், முன்னாள் இந்திய கேப்டன் சவுரவ் கங்குலி, முன்னாள் இந்திய வீரர் கிரண் மோர் ஆகியோரும் பிசிசிஐ நிர்வாக பதவிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனராம்.
ரோஜப் பின்னியைப் போலவே, ஐபிஎல்லின் தலைவர் பதவியும் விரைவில் காலியாகவுள்ளது. தற்போது ஐபிஎல் தலைவராக அருண் தூமல் இருக்கிறார். அவரது இடத்துக்கும் புதியவர் நியமிக்கப்படவுள்ளார்.
இதேபோல இன்னும் சில மாற்றங்களும் இடம் பெறவுள்ளது. தற்போது அஜீத் அகர்கர் தலைமையிலான தேர்வுக் குழுவில் இடம் பெற்றுள்ள எஸ். ஷரத் அதிலிருந்து நீக்கப்பட்டு, இளையோர் தேர்வுக் குழு தலைவராக மாற்றப்படவுள்ளார். ஷரத் இடத்தில் பிரக்யான் ஓஜா நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
படிப்புதான் ஒரு பெண்ணுக்கு உண்மையான அணிகலன் - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்!
பாஜக.,வில் அண்ணாமலைக்கு புதிய பொறுப்பு? - பின்னணியில் நடந்தது என்ன?
திமுக பணத்தை நம்பி உள்ளது, அங்கு உழைக்க ஆளில்லை; இளைஞர்கள் நினைத்தால் ஆட்சியையே மாற்றலாம்: அன்புமணி
பறவைக் காய்ச்சல் பரவல்... ஹாஃப்பாயில் சாப்பிடாதீங்க: எச்சரிகை விடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
தமிழகத்தில் பிப்., 13ம் தேதி லேசான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!
என்றும் என் மனைவி சீதா தான்....நான் பிரிந்ததை நினைத்து என்னைக்கும் வருத்தப்பட்டதே இல்லை: பார்த்திபன்
சபாநாயகர் ஓம் பிர்லாவிற்கு எதிராக 100 எம்.பி.,க்களிடம் கையெழுத்து பெற்ற காங்கிரஸ்
பாகிஸ்தானின் பல்டி அரசியல்.. ஐசிசி-யின் அதிரடி கடிதத்தால் அடிபணிந்த பிசிபி!
தேர்வுகளை நடத்த தெரியாதவர் தமிழ்நாட்டுக்கு முதல்வராக வாய்த்திருப்பது சாபக்கேடு: எடப்பாடி பழனிச்சாமி
{{comments.comment}}