டெல்லி: இந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவராக மிதுன் மன்ஹாஸ் பொறுப்பேற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்தவரான மிதுன் மன்ஹாஸ், ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி அணிக்காக விளையாடிய வீரர் ஆவார்.
துலீப் டிராபிக்கான வட மண்டல ஒருங்கிணைப்பாளராகவும் இவர் பணியாற்றியுள்ளார். தற்போது, ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் சங்கத்தின் (JKCA) நிர்வாகியாக இருக்கிறார்.
மன்ஹாஸ் இந்திய அணிக்காக விளையாடியதில்லை. ஆனால் முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் நிறைய விளையாடியுள்ளார். டெல்லி டேர்டெவில்ஸ், புனே வாரியர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய மூன்று ஐபிஎல் அணிகளுக்காக விளையாடியுள்ளார். மேலும், 157 முதல் தர போட்டிகளில், 9,714 ரன்கள் குவித்துள்ளார்.
தற்போது ரோஜர் பின்னி பிசிசிஐ தலைவராக இருக்கிறார். இவருக்குப் பதில் தற்போது மன்ஹாஸ் தலைவராகவுள்ளார். முன்னாள் இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், முன்னாள் இந்திய கேப்டன் சவுரவ் கங்குலி, முன்னாள் இந்திய வீரர் கிரண் மோர் ஆகியோரும் பிசிசிஐ நிர்வாக பதவிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனராம்.
ரோஜப் பின்னியைப் போலவே, ஐபிஎல்லின் தலைவர் பதவியும் விரைவில் காலியாகவுள்ளது. தற்போது ஐபிஎல் தலைவராக அருண் தூமல் இருக்கிறார். அவரது இடத்துக்கும் புதியவர் நியமிக்கப்படவுள்ளார்.
இதேபோல இன்னும் சில மாற்றங்களும் இடம் பெறவுள்ளது. தற்போது அஜீத் அகர்கர் தலைமையிலான தேர்வுக் குழுவில் இடம் பெற்றுள்ள எஸ். ஷரத் அதிலிருந்து நீக்கப்பட்டு, இளையோர் தேர்வுக் குழு தலைவராக மாற்றப்படவுள்ளார். ஷரத் இடத்தில் பிரக்யான் ஓஜா நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆர்.என். ரவி, அண்ணாமலை இடத்தைப் பிடிக்க முடிவு செய்து விட்டார் விஜய்.. விசிக கடும் தாக்கு
பிரதமர் நரேந்திர மோடி.. இன்று மாலை 5 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்
BCCI தலைவராகிறார் மிதுன் மன்ஹாஸ்.. காஷ்மீரைச் சேர்ந்தவர்.. சிஎஸ்கே அணிக்காக விளையாடியவர்
H-1B விசா குழப்பம்.. புதிதாக விண்ணப்பிப்பவர்களுக்குத்தான் கட்டண உயர்வு.. அமெரிக்க அரசு விளக்கம்
என்னை மிரட்டிப் பார்க்கிறீர்களா?.. நாகை கூட்டத்தில்.. முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு விஜய் கேள்வி
நாகை மருந்துவமனைக்கு சென்று விஜய்யை பார்க்க சொல்லுங்கள்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தமிழகத்தைத் தலைகுனிய விடமாட்டேன் என்று போலியாக சூளுரைக்கும் முதல்வர் ஸ்டாலின்: நயினார் நாகேந்திரன்
செம்பரம்பாக்கம் குடிநீர் வழங்கும் திட்டம்... முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
திமுக ஆட்சியில்.. திருவாரூர் கருவாடாக காய்ந்து கிடக்கிறது.. தவெக தலைவர் விஜய்
{{comments.comment}}