சஞ்சு சாம்சனை பேசாம கேப்டனாக்குங்கப்பா.. செமயா சூப்பரா இருக்கும்.. சொல்கிறார் ஸ்ரீகாந்த்!

Aug 10, 2025,10:30 AM IST

சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சஞ்சு சாம்சனை கேப்டனாக்கலாம் என்று முன்னாள் இந்திய அணி கேப்டன் கே.ஸ்ரீகாந்த் கூறியுள்ளார்.


சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் ராயல்ஸை விட்டு விலகப் போவதாக ஒரு செய்தியும், அதேபோல சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலிருந்து ஆர்.அஸ்வின் விலகப் போவதாக இன்னொரு செய்தியும் உலா வருகிறது.  இவை எதுவும் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.


இந்த நிலையில், ஸ்ரீகாந்த், சஞ்சு சாம்சனை எம்.எஸ். தோனிக்கு சரியான மாற்றாக கூறுகிரார். இதுகுறித்து தனது யூடியூப் சேனலான சீக்கி சீக்காவில் அவர் கூறுகையில், உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், சஞ்சு ஒரு சிறந்த வீரர், மேலும் அவர் சென்னையில் மிகவும் பிரபலமானவர். அவருக்கு சென்னையில் ஒரு நல்ல பிராண்ட் மதிப்பு உள்ளது. அவர் ராஜஸ்தான் ராயல்ஸை விட்டு விலகி சென்னைக்கு வர விரும்பினால், நான் அவரைத்தான் கேப்டனாக முதலில் தேர்வு செய்வேன்.




தோனி அதிகபட்சமாக இந்த சீசனில் விளையாடலாம், அடுத்த ஆண்டு இல்லை, எனவே தோனிக்குப் பதிலாக சஞ்சு சரியான மாற்றாக இருப்பார், இந்த மாற்றம் சீராக இருக்கும். அதேசமயம், ருதுராஜ் கெய்க்வாட்டிடம் கேப்டன் பதவி கொடுக்கப்பட்டால், அவரை அதில் தொடர்ந்து செயல்பட வேண்டும். பாதியில் மாற்றக் கூடாது என்றார் ஸ்ரீகாந்த்.


சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அசைக்க முடியாத சொத்தாக இருக்கிறார் தோனி. வெற்றிகரமான கேப்டனாகவும் இருந்திருக்கிறார். அவரது தலைமையில்தான் சென்னை அணி 5 முறை கோப்பையை வென்றுள்ளது. ஐபிஎல் வரலாற்றில் ஆறாவது அதிக ரன் எடுத்த வீரராகவும் திகழ்கிறார். 278 போட்டிகளில் 38.30 சராசரியுடன் 5439 ரன்கள் எடுத்துள்ளார் தோனி. இதில் 24 அரை சதங்கள் அடங்கும். அவரது ஸ்டிரைக் ரேட் 137 க்கு மேல் உள்ளது.


ஐந்து ஐபிஎல் பட்டங்கள் தவிர, அவர் சிஎஸ்கேவுடன் இரண்டு சாம்பியன்ஸ் லீக் டி20 பட்டங்களையும் வென்றுள்ளார். இதனால், தோனியின் புகழ் மற்றும் பிராண்ட் மதிப்பு காரணமாகவே இந்த அணி விளையாட்டு உலகில் மிகவும் பிரபலமான அணிகளில் ஒன்றாக மாறியுள்ளது. தோனி களமிறங்கும் போது ரசிகர்கள் கூட்டம் அவரைப் பின்தொடர்கிறது, மேலும் பல்வேறு ரசிகர் மன்றங்கள் ஒரே குரலில் 'தோனி' 'தோனி' என்று கோஷமிடுகின்றன.


அவர் சமீபகாலமாக விக்கெட் கீப்பிங்கில் அசத்தி வருகிறார். இந்த ஆண்டு சீசனில் சில நல்ல ஸ்கோரையும் அவர் எடுத்திருந்தார் என்பது நினைவிருக்கலாம். ஆனால் தோனிக்குப் பிறகு சிஎஸ்கே நிர்வாகம் கண்டெடுத்த ருதுராஜ் கெய்க்வாட், இன்னும் வெற்றிகரமான கேப்டனாக உருமாறவில்லை என்பது  ரசிகர்களுக்கு ஏமாற்றம்தான்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாட்டு மக்களின் ஒரே சின்னம் விசில்.. தவெகவுக்கு முதல் வெற்றி.. விசில் போடுவோம் - விஜய்

news

திருச்சி, பெரம்பலூர்உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் கொடுத்த தகவல்

news

விசில் கொடுத்தாச்சு.. கப்பு முக்கியம் பிகிலு.. மாமல்லபுரத்தில் ஆலோசனை.. ஆயத்தமாகும் விஜய்!

news

திமுக ஆட்சியில் கஞ்சா மயமான தமிழ்நாடு.. பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தாக்கு!

news

NDA கூட்டணியைப் பார்த்து செல்வப்பெருந்தகைக்கு குளிர் ஜூரம் ஏற்பட்டுள்ளது: அண்ணாமலை

news

2026 தேர்தலுக்கான விசில் ஒலித்தது-தவெக சின்னம் குறித்து பிரவீன் சக்ரவர்த்தி நெகிழ்ச்சி பதிவு!

news

திருப்பூரில் பரபரப்பு... கவிஞர் வைரமுத்து பங்கேற்ற நிகழ்ச்சியில் காலணி வீச்சு

news

தவெகவுக்கு விசில் சின்னம்: தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு!

news

மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் ஆட்சி..தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி: எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டம்

அதிகம் பார்க்கும் செய்திகள்