சஞ்சு சாம்சனை பேசாம கேப்டனாக்குங்கப்பா.. செமயா சூப்பரா இருக்கும்.. சொல்கிறார் ஸ்ரீகாந்த்!

Aug 10, 2025,10:30 AM IST

சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சஞ்சு சாம்சனை கேப்டனாக்கலாம் என்று முன்னாள் இந்திய அணி கேப்டன் கே.ஸ்ரீகாந்த் கூறியுள்ளார்.


சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் ராயல்ஸை விட்டு விலகப் போவதாக ஒரு செய்தியும், அதேபோல சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலிருந்து ஆர்.அஸ்வின் விலகப் போவதாக இன்னொரு செய்தியும் உலா வருகிறது.  இவை எதுவும் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.


இந்த நிலையில், ஸ்ரீகாந்த், சஞ்சு சாம்சனை எம்.எஸ். தோனிக்கு சரியான மாற்றாக கூறுகிரார். இதுகுறித்து தனது யூடியூப் சேனலான சீக்கி சீக்காவில் அவர் கூறுகையில், உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், சஞ்சு ஒரு சிறந்த வீரர், மேலும் அவர் சென்னையில் மிகவும் பிரபலமானவர். அவருக்கு சென்னையில் ஒரு நல்ல பிராண்ட் மதிப்பு உள்ளது. அவர் ராஜஸ்தான் ராயல்ஸை விட்டு விலகி சென்னைக்கு வர விரும்பினால், நான் அவரைத்தான் கேப்டனாக முதலில் தேர்வு செய்வேன்.




தோனி அதிகபட்சமாக இந்த சீசனில் விளையாடலாம், அடுத்த ஆண்டு இல்லை, எனவே தோனிக்குப் பதிலாக சஞ்சு சரியான மாற்றாக இருப்பார், இந்த மாற்றம் சீராக இருக்கும். அதேசமயம், ருதுராஜ் கெய்க்வாட்டிடம் கேப்டன் பதவி கொடுக்கப்பட்டால், அவரை அதில் தொடர்ந்து செயல்பட வேண்டும். பாதியில் மாற்றக் கூடாது என்றார் ஸ்ரீகாந்த்.


சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அசைக்க முடியாத சொத்தாக இருக்கிறார் தோனி. வெற்றிகரமான கேப்டனாகவும் இருந்திருக்கிறார். அவரது தலைமையில்தான் சென்னை அணி 5 முறை கோப்பையை வென்றுள்ளது. ஐபிஎல் வரலாற்றில் ஆறாவது அதிக ரன் எடுத்த வீரராகவும் திகழ்கிறார். 278 போட்டிகளில் 38.30 சராசரியுடன் 5439 ரன்கள் எடுத்துள்ளார் தோனி. இதில் 24 அரை சதங்கள் அடங்கும். அவரது ஸ்டிரைக் ரேட் 137 க்கு மேல் உள்ளது.


ஐந்து ஐபிஎல் பட்டங்கள் தவிர, அவர் சிஎஸ்கேவுடன் இரண்டு சாம்பியன்ஸ் லீக் டி20 பட்டங்களையும் வென்றுள்ளார். இதனால், தோனியின் புகழ் மற்றும் பிராண்ட் மதிப்பு காரணமாகவே இந்த அணி விளையாட்டு உலகில் மிகவும் பிரபலமான அணிகளில் ஒன்றாக மாறியுள்ளது. தோனி களமிறங்கும் போது ரசிகர்கள் கூட்டம் அவரைப் பின்தொடர்கிறது, மேலும் பல்வேறு ரசிகர் மன்றங்கள் ஒரே குரலில் 'தோனி' 'தோனி' என்று கோஷமிடுகின்றன.


அவர் சமீபகாலமாக விக்கெட் கீப்பிங்கில் அசத்தி வருகிறார். இந்த ஆண்டு சீசனில் சில நல்ல ஸ்கோரையும் அவர் எடுத்திருந்தார் என்பது நினைவிருக்கலாம். ஆனால் தோனிக்குப் பிறகு சிஎஸ்கே நிர்வாகம் கண்டெடுத்த ருதுராஜ் கெய்க்வாட், இன்னும் வெற்றிகரமான கேப்டனாக உருமாறவில்லை என்பது  ரசிகர்களுக்கு ஏமாற்றம்தான்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Tamil Nadu Assembly elections: தமிழ்நாட்டில் 84.29% வாக்குப் பதிவு.. கரூர் மாவட்டத்தில்தான் உச்சம்!

news

தமிழ்நாடு முழுக்க வாக்குப் பதிவு விகிதம் அதிகரிக்க என்ன காரணம்.. சென்னையும் கலக்குதே!

news

வாக்குப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் அதிகரிங்க.. தேர்தல் ஆணையத்துக்கு விஜய் கோரிக்கை

news

முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, விஜய், ரஜினி, கமல், அஜீத் ஓட்டுப் போட்டாச்சு!

news

சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்வு? - வதந்தி என.. மத்திய அரசு விளக்கம்!

news

விதைக்குள் காடு விரும்பி அதை நாடு!

news

நெருங்குதலும் விலகலும்

news

Dr Latha poems: அமைதியே என் ஆயுதம்.. நான் என உறுதி கொள்!

news

English Language Day: வில்லியம் ஷேக்ஸ்பியரை நினைவு கூர்ந்து Thanks சொல்வோம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்