சென்னை: தவெக தலைவர் விஜய்யுடன் கூட்டணி குறித்து செய்தியாளர்கள் எழுப்பி சேள்விக்கு முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் பதிலளித்துள்ளார்.
தியாகி மாவீரன் பூலித்தேவன் பிறந்த நாளையொட்டி அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு சார்பில் கழக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் தென்காசி மாவட்டம் நெற்கட்டும் சேவலில் உள்ள பூலித்தேவன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசுகையில்,
அதிமுகவில் இருந்து பிரிந்திருக்கும் அனைத்து சக்திகளும் ஒன்றிணைய வேண்டும் என சசிகலா வெளியிட்ட அறிக்கையை நான் மனதார வரவேற்கிறேன். சசிகலாவுக்கு வலுசேர்க்கும் வகையில் அதிமுகவை ஒன்றிணைக்கும் பணியில் நான் ஈடுபடுகிறேன். எடப்பாடி பழனிச்சாமி முதுகில் குத்திவிட்டதாக பிரேமலதா விஜயகாந்த கூறியதிலேயே பதில் இருக்கிறது.
விஜய் தற்போது தான் அரசியல் இயக்கத்தை ஆரம்பித்திருக்கிறார். தேர்தலின் நின்று வென்று இலக்கை எப்படி அடைகிறார், எவ்வாறு செயல்படுகிறார் என்பதை எல்லாம் பார்க்க வேண்டும். அவருடைய இயக்கத்திற்கு என்னுடைய வாழ்த்துக்கள். இதுவரை யாரும் என்னுடன் கூட்டணிக்காக பேசவில்லை. எதிர்காலத்தில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
தூய்மை பணியாளர்களுக்கு 3 வேளை இலவச உணவு : தமிழ்நாடு அரசு
Tamil Nadu heavy Rain alert: 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: வானிலை மையம் தகவல்!
எங்கெங்கும் ஜில் ஜில் மழை.. பிரச்சினைகளும் கூடவே களை கட்டுது.. எப்படி சமாளிக்கலாம்??
திண்ணையில் இல்லை நண்பா... பல நாட்கள் ரோட்டில் இருந்தவன் நான்: நடிகர் சூரியின் நச் பதில்!
மேலும் பல அற்புதமான படங்களைத் தர வேண்டும்.. மாரி செல்வராஜுக்கு அண்ணாமலை பாராட்டு
ரூ.78,000 கோடி சாலை நிதி எங்கே?..மலைக்கிராமங்களுக்கு உடனடியாக சாலை, பாலம் அமைக்க வேண்டும்: அண்ணாமலை
சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த திமுக முன்வர வேண்டும்: அன்புமணி ராமதாஸ்!
பிரபல பின்னணி பாடகரும், தேவாவின் சகோதருமான சபேஷ் காலமானார்
தொடர்ந்து குறைந்து வரும் தங்கம் விலை... இன்றைக்கு எவ்வளவு குறைவு தெரியுமா?
{{comments.comment}}