சென்னை: தவெக தலைவர் விஜய்யுடன் கூட்டணி குறித்து செய்தியாளர்கள் எழுப்பி சேள்விக்கு முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் பதிலளித்துள்ளார்.
தியாகி மாவீரன் பூலித்தேவன் பிறந்த நாளையொட்டி அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு சார்பில் கழக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் தென்காசி மாவட்டம் நெற்கட்டும் சேவலில் உள்ள பூலித்தேவன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசுகையில்,
அதிமுகவில் இருந்து பிரிந்திருக்கும் அனைத்து சக்திகளும் ஒன்றிணைய வேண்டும் என சசிகலா வெளியிட்ட அறிக்கையை நான் மனதார வரவேற்கிறேன். சசிகலாவுக்கு வலுசேர்க்கும் வகையில் அதிமுகவை ஒன்றிணைக்கும் பணியில் நான் ஈடுபடுகிறேன். எடப்பாடி பழனிச்சாமி முதுகில் குத்திவிட்டதாக பிரேமலதா விஜயகாந்த கூறியதிலேயே பதில் இருக்கிறது.

விஜய் தற்போது தான் அரசியல் இயக்கத்தை ஆரம்பித்திருக்கிறார். தேர்தலின் நின்று வென்று இலக்கை எப்படி அடைகிறார், எவ்வாறு செயல்படுகிறார் என்பதை எல்லாம் பார்க்க வேண்டும். அவருடைய இயக்கத்திற்கு என்னுடைய வாழ்த்துக்கள். இதுவரை யாரும் என்னுடன் கூட்டணிக்காக பேசவில்லை. எதிர்காலத்தில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
கல்வி எனும் ஆயுதத்தால் அனைத்தையும் தகர்த்தெறிந்த அறிவுச்சூரியன்தான் அம்பேத்கர்:முதல்வர் முக ஸ்டாலின்
எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும்?. நயினார் நாகேந்திரனுக்கு கனிமொழி கேள்வி!
உலகமே உற்றுப் பார்த்த மோடி - புடின் சந்திப்பு.. அசைந்து கொடுக்குமா அமெரிக்கா?
திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை நேரில் பார்த்தால்.. 21 தலைமுறைக்கு முக்தி கிடைக்குமாம்!
Festival Trains annoounced.. சொந்த ஊருக்குப் போக கவலையில்லை.. ஸ்பெஷல் ரயில்கள் அறிவிப்பு!
11ம் வகுப்பு மாணவர்கள் தாக்கியதில்... +2ம் வகுப்பு மாணவன் பலி... 15 மாணவர்கள் கைது!
கீரை சாப்பிடாத குழந்தைகளும் விரும்பி உண்ணும் கீரை தொக்கு.. லஞ்சுக்கு சூப்பர் ரெசிப்பி!
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் கும்பாபிஷேகம்.. 149 பள்ளிகளுக்கு 8ம் தேதி விடுமுறை
இடியாப்பம்.. நீல கலர் ஜிங்குச்சா.. கலர் கலரா இடியாப்பம் செஞ்சு சாப்பிடலாமா?
{{comments.comment}}