கிப்லி டிரெண்டில் கை கோர்த்தார் எடப்பாடி பழனிச்சாமி.. அசத்தல் புகைப்படங்களை ஷேர் செய்து மகிழ்ச்சி!

Mar 31, 2025,06:02 PM IST

சென்னை: உலகெங்கும் பரபரப்பாக பரவி வரும் கிப்லி டிரெண்ட், நம்ம அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியையும் விடவில்லை. அவரும் இந்த டிரெண்டில் இணைந்து படங்களை ஷேர் செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.


சமூக வலைதளத்தில் ஏதாவது ஒரு டிரெண்ட் வலம் வந்து கொண்டேதான் உள்ளது. அதுவும் இப்போது ஏஐ யுகமாச்சே.. ஏதாவது ஒன்று கிளம்பி வந்து கொண்டே இருக்கிறது. அந்த வகையில் வந்துள்ள புதிய டிரெண்ட்தான் கிப்லி ஆர்ட் படமாகும். இது ஏஐ தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டது. நமது புகைப்படத்தைக் கொடுத்து கிப்லி ஆர்ட்டில் வரைந்து தருமாறு கேட்டால் அது அனிமேஷன் ஸ்டைலில் நமது புகைப்படத்தை மாற்றித் தரும்.




நமது புகைப்படத்தை சாட்ஜிபிடியில் கொடுத்து, இந்தப் புகைப்படத்தை ஸ்டூடியோ கிப்லி வரைபடமாக மாற்றித் தருமாறு கேட்டால் போதும். அது டக்கென நமது படத்தை அனிமேஷன் மாடலுக்கு மாற்றி வரைந்து கொடுக்கும். சாட்ஜிபிடி மட்டுமல்லாமல் எலான் மஸ்க் அறிமுகப்படுத்தியுள்ள குரோக் மூலமும் கூட இதைப் பெறலாம். இது இலவச சேவை. எனவே மக்கள் புகுந்து விளையாடி வருகிறார்கள்.


அப்பா சாமிகளா எங்களைப் பார்த்தா உங்களுக்குப் பாவமா இல்லையா, எங்களுக்கும் ஓய்வு தேவைப்பா.. என்று இந்தத் தொழில்நுட்பத்தை உருவாக்கிய ஓபன் ஏஐ நிறுவனர் சாம்ஆல்ட்மேனே புலம்பும் அளவுக்கு மக்கள் இந்த தொழில்நுட்பத்தை சரமாரியாக பயன்படுத்திக் கொண்டுள்ளனர்.


இந்த நிலையில் முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமியும் இந்த டிரெண்ட்டில் இணைந்துள்ளார். தனது முக்கியமான சில புகைப்படங்களை இந்த ஆர்ட் மூலம் வரைந்து வாங்கி அதை தனது எக்ஸ் தளத்திலும் ஷேர் செய்து அசத்தியுள்ளார்.




விவசாயிகளுடன் இருப்பது, மருத்துவர்களுடன் இருப்பது, மழை வெள்ள பாதிப்பை முதல்வராக இருந்தபோது பார்வையிட்டது உள்ளிட்ட புகைப்படங்களை கிப்லி ஆர்ட் படங்களாக வெளியிட்டுள்ளார் எடப்பாடி பழனிச்சாமி.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

புதுவருட டைரி!

news

நீட் தேர்வு வாக்குறுதிகள் தோற்றுவிட்டன; மாநிலங்களை நம்ப வேண்டிய நேரம் இது.. மு.க.ஸ்டாலின்

news

இளைஞர்களின் எதிர்காலத்திற்கு மிகப்பெரிய தீங்கு விளைவித்தது மோடிதான்.. ராகுல் காந்தி

news

வினாத்தாள் கசிவு.. தண்டனைகளை விரைவுபடுத்த விரைவு நீதிமன்றங்கள்.. பிரதமர் மோடி

news

ஏகப்பட்ட பிரச்சினை: சுறுசுறுப்பு காட்டும் தமிழக அரசியல் கட்சிகள்.. அடுத்தடுத்து போராட்டம் அறிவிப்பு

news

ஆண் மகனை அவனாகவே வாழ விடுங்கள்!

news

நாகர்கோவில் சிறையில் கைதி கொலை: CBCID விசாரணைக்கு மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவு!

news

முதல்வரை மிரட்டிய வழக்கு: திமுக எம்எல்ஏ மார்கண்டேயனின் ஜாமீன் மனு தள்ளுபடி!

news

நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்: விரிவான விவாதம் நடத்த தயார் - மத்திய அரசு அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்