பெண்ணாகிப் போனதாலே இக்கொடுமைகளை சந்தித்தாக வேண்டுமென சாபக்கேடா?

Mar 06, 2024,02:33 PM IST

புதுச்சேரி: புதுச்சேரி சம்பவம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் சந்திரபிரியங்கா வேதனை வெளியிட்டுள்ளார்.


மனித வகையிலேயே சேர்க்க முடியாத மிகக் கொடூரமான அக்கிரமத்தை சில கயவர்கள் புதுச்சேரியில் அரங்கேற்றியுள்ளனர். 9 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளது அந்தக் கும்பல். அந்த முயற்சியின்போது அந்தச் சிறுமியை கொடூரமாக கொலை செய்து மூட்டையில் போட்டு கட்டி சாக்கடையில் போட்டு விட்டு தப்பியுள்ளனர்.


டெல்லியில் நடந்த கொடூர பாலியல் பலாத்கார சம்பவங்களை மிஞ்சும் கொடுமையாக நம்ம புதுச்சேரியில் நடந்துள்ள இந்த சம்பவம் அனைவரையும் பதற வைத்துள்ளது. இந்த கயவர்களை நிற்க வைத்து சுட வேண்டும் என்று அங்குள்ள மக்கள் கொதித்துப் போயுள்ளனர்.




இந்த சம்பவம் குறித்து முன்னாள் அமைச்சரும், நெடுங்காடு எம்எல்ஏவுமான சந்திரபிரியங்கா வேதனை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் போட்டுள்ள டிவீட்:


பெண்ணாகிப் போனதாலே இக்கொடுமைகளை சந்தித்தாக வேண்டுமென சாபக்கேடா?


தேசிய பெண் குழந்தைகள் தினம்.. உலக மகளிர் தினம்.. சிறுமிக்கு நேர்ந்த ஜீரணிக்க முடியாத கொடுமை அனைத்தையும் கேள்விக்குறியாக்குகிறது...  மனிதமும், மனச்சாட்சியும், சமூகப் பொறுப்பும் எங்கே சென்றது. இப்படியொரு கொடுமை இனியும் நடக்கக் கூடாது.


குழந்தைகளை தெய்வமாகப் பார்க்க வேண்டிய மனிதம் போதை வெறியில் மிருகமாக மாறுகிறதெனில் சட்டம் தன் சாட்டையை கடுமையாக சுழற்ற வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. இந்தக் கொடூர சம்பவத்தில் அரசு மிகக்கடுமையான நடவடிக்கை எடுத்து பெண்களுக்கு அனைத்துவிதமான பாதுகாப்பினையும் உறுதி செய்ய வேண்டும்.


குழந்தையை இழந்துவாடும் பெற்றோருக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை. கனத்த மனதோடும் கண்ணீரோடும் அன்பு மகளின் ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன் என்று கூறியுள்ளார் சந்திரபிரியங்கா.

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்