பெண்ணாகிப் போனதாலே இக்கொடுமைகளை சந்தித்தாக வேண்டுமென சாபக்கேடா?

Mar 06, 2024,02:33 PM IST

புதுச்சேரி: புதுச்சேரி சம்பவம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் சந்திரபிரியங்கா வேதனை வெளியிட்டுள்ளார்.


மனித வகையிலேயே சேர்க்க முடியாத மிகக் கொடூரமான அக்கிரமத்தை சில கயவர்கள் புதுச்சேரியில் அரங்கேற்றியுள்ளனர். 9 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளது அந்தக் கும்பல். அந்த முயற்சியின்போது அந்தச் சிறுமியை கொடூரமாக கொலை செய்து மூட்டையில் போட்டு கட்டி சாக்கடையில் போட்டு விட்டு தப்பியுள்ளனர்.


டெல்லியில் நடந்த கொடூர பாலியல் பலாத்கார சம்பவங்களை மிஞ்சும் கொடுமையாக நம்ம புதுச்சேரியில் நடந்துள்ள இந்த சம்பவம் அனைவரையும் பதற வைத்துள்ளது. இந்த கயவர்களை நிற்க வைத்து சுட வேண்டும் என்று அங்குள்ள மக்கள் கொதித்துப் போயுள்ளனர்.




இந்த சம்பவம் குறித்து முன்னாள் அமைச்சரும், நெடுங்காடு எம்எல்ஏவுமான சந்திரபிரியங்கா வேதனை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் போட்டுள்ள டிவீட்:


பெண்ணாகிப் போனதாலே இக்கொடுமைகளை சந்தித்தாக வேண்டுமென சாபக்கேடா?


தேசிய பெண் குழந்தைகள் தினம்.. உலக மகளிர் தினம்.. சிறுமிக்கு நேர்ந்த ஜீரணிக்க முடியாத கொடுமை அனைத்தையும் கேள்விக்குறியாக்குகிறது...  மனிதமும், மனச்சாட்சியும், சமூகப் பொறுப்பும் எங்கே சென்றது. இப்படியொரு கொடுமை இனியும் நடக்கக் கூடாது.


குழந்தைகளை தெய்வமாகப் பார்க்க வேண்டிய மனிதம் போதை வெறியில் மிருகமாக மாறுகிறதெனில் சட்டம் தன் சாட்டையை கடுமையாக சுழற்ற வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. இந்தக் கொடூர சம்பவத்தில் அரசு மிகக்கடுமையான நடவடிக்கை எடுத்து பெண்களுக்கு அனைத்துவிதமான பாதுகாப்பினையும் உறுதி செய்ய வேண்டும்.


குழந்தையை இழந்துவாடும் பெற்றோருக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை. கனத்த மனதோடும் கண்ணீரோடும் அன்பு மகளின் ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன் என்று கூறியுள்ளார் சந்திரபிரியங்கா.

சமீபத்திய செய்திகள்

news

RIP Bharathiraja: பாசத்திற்குரிய பாரதிராஜா.. காலமானார் இயக்குநர் இமயம்.. கண்ணீரில் தமிழ் சினிமா

news

RIP Bharathiraja: இயக்குனர் பாரதிராஜாவின் இறுதிச்சடங்கு.. நாளை அரசு மரியாதையுடன் நல்லடக்கம்!

news

தவெக எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் அவசரக் கூட்டம்.. நாளை கூடுகிறது

news

இந்தியாவின் மிக நீண்ட கால பிரதமர்.. நரேந்திர மோடி சாதனை.. உலகத் தலைவர்கள் வாழ்த்து!

news

இயக்குனர் இமயம் பாரதிராஜா.. அந்த முட்டத்து கடல் அலைகள் கடற்கரை மணல்கள் கண்ணீர் விடுகிறது!

news

பாஜகவிலிருந்து விலகினார் அமர் பிரசாத் ரெட்டி...தலைமை மீது பகீர் குற்றச்சாட்டு

news

சிந்தனைச் சிதறல்.. நின்ற இடத்திலேயே வெல்வது எப்படி?

news

பரம ஏகாதசி.. 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் ஏகாதசி.. பாவங்கள் நீங்கும்

news

Kalaiyarasi Muthuvel Poem: அமிலம் கொட்டினாலும் ஆழ்துளையிட்டாலும்!

அதிகம் பார்க்கும் செய்திகள்