புதுச்சேரி: புதுச்சேரி சம்பவம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் சந்திரபிரியங்கா வேதனை வெளியிட்டுள்ளார்.
மனித வகையிலேயே சேர்க்க முடியாத மிகக் கொடூரமான அக்கிரமத்தை சில கயவர்கள் புதுச்சேரியில் அரங்கேற்றியுள்ளனர். 9 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளது அந்தக் கும்பல். அந்த முயற்சியின்போது அந்தச் சிறுமியை கொடூரமாக கொலை செய்து மூட்டையில் போட்டு கட்டி சாக்கடையில் போட்டு விட்டு தப்பியுள்ளனர்.
டெல்லியில் நடந்த கொடூர பாலியல் பலாத்கார சம்பவங்களை மிஞ்சும் கொடுமையாக நம்ம புதுச்சேரியில் நடந்துள்ள இந்த சம்பவம் அனைவரையும் பதற வைத்துள்ளது. இந்த கயவர்களை நிற்க வைத்து சுட வேண்டும் என்று அங்குள்ள மக்கள் கொதித்துப் போயுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து முன்னாள் அமைச்சரும், நெடுங்காடு எம்எல்ஏவுமான சந்திரபிரியங்கா வேதனை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் போட்டுள்ள டிவீட்:
பெண்ணாகிப் போனதாலே இக்கொடுமைகளை சந்தித்தாக வேண்டுமென சாபக்கேடா?
தேசிய பெண் குழந்தைகள் தினம்.. உலக மகளிர் தினம்.. சிறுமிக்கு நேர்ந்த ஜீரணிக்க முடியாத கொடுமை அனைத்தையும் கேள்விக்குறியாக்குகிறது... மனிதமும், மனச்சாட்சியும், சமூகப் பொறுப்பும் எங்கே சென்றது. இப்படியொரு கொடுமை இனியும் நடக்கக் கூடாது.
குழந்தைகளை தெய்வமாகப் பார்க்க வேண்டிய மனிதம் போதை வெறியில் மிருகமாக மாறுகிறதெனில் சட்டம் தன் சாட்டையை கடுமையாக சுழற்ற வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. இந்தக் கொடூர சம்பவத்தில் அரசு மிகக்கடுமையான நடவடிக்கை எடுத்து பெண்களுக்கு அனைத்துவிதமான பாதுகாப்பினையும் உறுதி செய்ய வேண்டும்.
குழந்தையை இழந்துவாடும் பெற்றோருக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை. கனத்த மனதோடும் கண்ணீரோடும் அன்பு மகளின் ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன் என்று கூறியுள்ளார் சந்திரபிரியங்கா.
என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!
தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?
பூனைக் கண்ணை மூடிக்கொண்டுவிட்டால் உலகம் இருண்டுவிடுமா என்ன? அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி!
பாமக ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு: அன்புமணி அறிவிப்பு!
ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி... உறங்கி கோட்டை விட்ட தமிழக அரசு: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!
குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக முதலில் தனது முதுகை திரும்பி பார்க்க வேண்டும் : அமைச்சர் சேகர்பாபு
டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க
11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்
ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு
{{comments.comment}}