திமுக ஆட்சியில் நின்றாலும் வரி.. உட்கார்ந்தாலும் வரி... சொல்கிறார் முன்னாள் அமைச்சர் டி ஜெயக்குமார

Oct 08, 2024,05:10 PM IST

சென்னை: திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து நின்றாலும் வரி, உட்கார்ந்தாலும் வரி போடுகிறார்கள். மக்களை துன்புறுத்தி அரசு கருவூலத்தை நிரப்பும் வேலையை செய்கின்றனர் என்று முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் கூறியுள்ளார்.


திமுக அரசை கண்டித்து, சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பத்திர பதிவு கட்டண உயர்வு, குடிநீர் கட்டண உயர்வு மற்றும் சட்ட ஒழுங்கு சீர்கேடு ஆகியவை தமிழகத்தில் ஏற்படுவதாகக் கூறி தமிழ்நாடு முழுவதும் அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம் இன்று நடைபெறும் என்று ஏற்கனவே அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி அறிவித்திருந்தார்.




அதன்படி மாநிலம் முழுவதிலும் அனைத்து மாவட்டங்களிலும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள்,  மாவட்ட செயலாளர்கள் மற்றும் தொண்டர்கள் இன்று மனித சங்கிலி போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் திமுக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.


சென்னையில் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்ட அதிமுக முன்னாள் அமைச்சர் டி ஜெயக்குமார் பேசும்போது திமுக அரசை கடுமையாக விமர்சித்துப் பேசினார். அவர் கூறியதாவது: வரி விஷயத்தில் சென்னை மாநகராட்சி தூங்கிக் கொண்டிருக்கிறது. மக்களை துன்புறுத்தி அரசு கருவூலத்தை நிரப்பும் வேலையை செய்கின்றனர். திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து நின்றாலும் வரி, உட்கார்ந்தாலும் வரி போடுகிறார்கள். 


வரி விஷயத்தில் சென்னை மாநகராட்சி தூங்கிக் கொண்டிருக்கிறது. விமான சாகச நிகழ்ச்சியின் போது பரிதாபமாக 5 பேர் உயிரிழந்தனர். 5 பேர் இறப்புக்கு வருத்தப்பட வேண்டிய நேரத்தில் கலைஞர் நினைவு பூங்காவை திறந்து வைக்கின்றனர் என்றார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்


சமீபத்திய செய்திகள்

news

எந்த ஷா வந்தாலென்ன?.. தமிழ்நாடு என்றைக்குமே டெல்லிக்கு Out of Control தான்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

கூட்டணி குறித்த முடிவுக்கு இபிஎஸ்சுக்கே அதிகாரம்..அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்

news

2026 சட்டசபைத் தேர்தலுக்கு முன் கூட்டணி விரிவாக்கம்.. ராஜ்யசபா தேர்தலை உற்று நோக்கும் தி.மு.க

news

விஜய்யின் பேச்சு அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது:புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்

news

தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 7 நாட்கள் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

news

அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கும் பொங்கல் பரிசு: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

news

ஆஸ்திரேலியாவில்.. 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகத் தடை.. எந்தெந்த செயலிகளுக்கு ஆப்பு?

news

தவெகவுடன் கூட்டணி வருமா?.. பதிலளிக்காமல் தவிர்த்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

news

12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வரும் அப்பாஸ்.. படம் பேரு என்ன தெரியுமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்