சென்னை: புள்ளி விவரம் கொடுக்கும் ஐபிஎல் அதிகாரிபோல் தான் இருக்கிறார் அண்ணாமலை. தோற்றுக்கொண்டே இருக்கும் பெங்களூரு அணிபோலதான் தமிழ்நாட்டில் பாஜக இருக்கிறது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நக்கலாக கூறியுள்ளார்.
அதிமுக - பாஜக இடையே வாக்குவாதம் மீண்டும் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. உன்னால நான் கெட்டேன்.. என்னால நீ கெட்ட என்பது போல இரு தரப்பும் மாறி மாறி புகார் கூறிக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் சென்னையில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் இன்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
தேர்தலில் வெற்றி தோல்வி மாறி மாறி தான் வரும். அண்ணாமலையை பொருத்த வரை ஒரு புள்ளி ராஜா ஆயிட்டார். அண்ணாமலையின் பேச்சுகள் ஒருகட்சியின் மாநில தலைவர் பேச்சு போல இல்லை. தமிழ்நாட்டுக்கு மோடியை எட்டு முறை அழைத்து வந்தும் ஒரு சீட் கூட வெற்றி பெற முடியவில்லை. 2014ல் வாங்கிய வாக்குகளை விட தற்போது பாஜக குறைவான வாக்குகளையே பெற்றுள்ளது.
இதை அண்ணாமலையை சொல்ல சொல்லுங்க பார்ப்போம். இது எல்லாம் சொல்ல மாட்டாரு. இது என்ன சொல்ல மறந்த கதையா. 10 வருசத்துல ஒட்டு சதவீதம் குறைந்திருக்கு. பாஜக தமிழ்நாட்டில் பெங்களூரு அணிபோல தான் தோற்றுக்கொண்டே தான் இருப்பார்கள். நாங்க சென்னை சூப்பர் கிங்ஸ் போல. 30 வருடம் ஆண்டு பல வெற்றிகளை பெற்றுள்ளோம்.
இனி வரும் தேர்தலில் பல வெற்றிகளை குவிக்கப் போகிறோம். இது வரலாற்று சாதனையாகும். எங்களை பற்றி பேச என்ன முகாந்திரம் இருக்கு. அதவிட்டுட்டு, சாதி, இனம், மதம் பற்றி பேசி என்ன செய்யப் போறீங்க. வடக்குல வச்சாம் பாரு ஆப்பு. இன்னைக்கு 2 பேரு தான் கிங் மேக்கர். ஒன்னு சந்திரபாபு நாயுடு, மற்றொன்று நிதிஷ்குமார்.அங்கயாவது ஒன்று ரெண்டு கிடைத்திருக்கு. இங்க தமிழ்நாட்டில பாஜகவால் கால் ஊன்றவில்லை. புள்ளி விபரத்தை வைத்துக் கொண்டு ஒன்னும் செய்ய முடியாது என்று தெரிவித்துள்ளார்.
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
மறைந்த போப் ஆண்டவர் உடலுக்கு.. ஜனாதிபதி முர்மு இன்று அஞ்சலி.. குவியும் உலக தலைவர்கள்..!
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
கடந்த 3 நாட்களாக சரிந்து வரும் தங்கம் விலை... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
பட்டாசு வெடித்து.. உயிரிழந்தவர் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் நிதி உதவி.. முதல்வர் மு க ஸ்டாலின்!
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
தவெகவின் பூத் கமிட்டி மாநாட்டில்.. கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டார்.. விஜய்!
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
{{comments.comment}}