"சூப்பரா இருக்கு சு.வெங்கடேசன்"..  மதுரை எம்.பிக்குப் போனைப் போட்ட செல்லூர் ராஜு!

Jan 29, 2024,06:06 PM IST
மதுரை: தமிழ்ச் சமுதாய நாகரீகத்தின் தொட்டிலாக கீழடி  விளங்குவது போல, அரசியல் நாகரீகத்திற்கு மதுரை பிள்ளையார் சுழி போட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி.  சு. வெங்கடேசனைப் பாராட்டிப் பேசியுள்ளார் அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு.

மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள்  ஒருவருக்கொருவர் பேசிக் கொள்வதோ, சிரித்துக் கொள்வதோ, ஏன் பாராட்டிக் கொள்வதோ வெகு வெகு ஆபூர்வம் தமிழ்நாட்டில்.  குறிப்பாக ஜெயலலிதா, கருணாநிதி இருந்தவரை மாற்றுக் கட்சியினருடன் பேசிக் கொள்வதே மிகப் பெரிய ஆச்சரியமாக இருக்கும். 





ஆனால் இது காலப் போக்கில் மாற ஆரம்பித்தது. ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது
ஜெயலலிதாவைச் சந்தித்து மு.க.ஸ்டாலின் நிவாரண உதவியை வழங்கி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். அதேபோல எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக இருந்தபோதும் அவரை சந்தித்தார். ஈகோ இல்லாமல் அவர் இந்தத் தலைவர்களைச் சந்தித்தார்.


அதேபோல கருணாநிதி உடல் நலம் சரியில்லாமல் இருந்தபோது அப்போது முதல்வராக இருந்த எடப்பாடி பழனிச்சாமியும், ஓ.பி.எஸ்ஸும், மருத்துவமனைக்கு வந்து ஸ்டாலினிடம் நலம் விசாரித்த சம்பவமும் நடந்தது.  ஆனாலும் பெரும்பாலும் தமிழ்நாட்டில் இதுபோன்ற மாற்றுக் கட்சித் தலைவர்கள் சந்தித்துக் கொள்வது வெகு வெகு அபூர்வமானது.. அதிலும் பாராட்டிப் பேசுவது என்பதெல்லாம் ஆச்சரியமானது.





இந்த நிலையில் மதுரை எம்.பி சு. வெங்கடேசனை பாராட்டிப் பேசியுள்ளார் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு. மதுரை வண்டியூர் மாரியம்மன் கோவில் தெப்பக்குளத்தைச் சுற்றிலும் நான்கு இடங்களில் உயர் மட்ட மின்கோபுரம் அமைத்துக் கொடுத்துள்ளார் சு. வெங்கடேசன். சமீபத்தில் இந்த மின்விளக்குகளை அவர் தொடங்கி வைத்தார். இந்த விளக்குகள் பொருத்தப்பட்ட பிறகு தெப்பக்குளமே ஜோராக மாறிப் போயிருக்கிறது. பளிச்சென வெளிச்சத்துடன் அந்த இடம் சூப்பராக காட்சி தருகிறது.


இந்தப் பணிக்காகத்தான் செல்லூர் ராஜு, சு. வெங்கடேசனை போனில் அழைத்துப் பாராட்டியுள்ளார். இதுகுறித்து சு. வெங்கடேசன் போட்டுள்ள டிவீட்டில், நேற்று மாலை அண்ணன் செல்லூர் ராஜு அவர்கள் தொலைபேசியில் அழைத்தார்.   வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளத்தை சுற்றி உயர்மின் கோபுரம் அமைத்துள்ளது மிக சிறப்பாக இருக்கிறது. என்று சொல்லி வாழ்த்துகளை தெரிவித்தார். 





அவருக்கு எனது நன்றியைத் தெரிவித்தேன். எதிரெதிர் அரசியல் முகாம்களில் இருந்தாலும் நல்லதைப் பாராட்டும் அரசியல் நெறியை என்றும் காப்போம் என்று கூறியுள்ளார் சு. வெங்கடேசன்.


தமிழ் நாகரீகம் தந்த மதுரையில் தற்போது அரசியல் நாகரீகமும் கொடி கட்டிப் பறப்பது சந்தோஷமானதே.. தொடரட்டும்! 

சமீபத்திய செய்திகள்

news

நிறைவேற்றாத திட்டத்துக்கு எப்படி நிதி தருவது: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி!

news

கருகிய மலர்.. வாடாத வாசம்.. அவள்.. Burnt flower!

news

கூட்டணியை விடுங்க...அதிமுக.,விற்கு இரட்டை இலை சின்னம் சிக்கல் இல்லாமல் கிடைக்குமா?

news

மதுராந்தகத்தில் பாஜகவின் ஜல்லிக்கட்டு.. பிரதமர் மோடியின் வருகையும் 2026 தேர்தல் கணக்கும்!

news

நாளை மக்கள் நீதி மய்யம் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு கூட்டம்: கமலஹாசன் அறிவிப்பு

news

தைப்பூசத் திருவிழா.. சென்னிமலையில் கோலாகலம்.. நாளை கொடியேற்றம்

news

பிரதமர் மோடியின் X தளப் பதிவை சுட்டிக்காட்டி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேள்வி!

news

100 நாள் வேலைத் திட்ட பெயர் மாற்றத்திற்கு எதிராக சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனித்தீர்மானம்

news

ஊழல் திமுக அரசுக்கு விடை கொடுக்கும் காலம் வந்துவிட்டது: பிரதமர் மோடி பதிவு!

அதிகம் பார்க்கும் செய்திகள்