சென்னை: அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 4000 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் காலியாக உள்ள 4000 உதவிப் பேராசிரியர்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இந்த இடங்களை போட்டித் தேர்வுகள் மூலம் நிரப்ப தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருந்தது. அதன்படி மார்ச் 28 முதல் ஏப்ரல் 29 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறபட்டன. இதற்கான எழுத்து தேர்வு ஆகஸ்ட் 4ம் தேதி நடைபெறும் எனவும் அறிவித்திருந்தது. இதன் காரணமாக ஏராளமானோர் இந்த பணிக்கு விண்ணப்பித்து இருந்தனர்.
இந்நிலையில், விண்ணப்பதாரர்களிடமிருந்து பெறப்பட்ட பல்வேறு கோரிக்கைகளின் அடிப்படையில் உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் மே 15ம் தேதி மாலை 5 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எழுத்து தேர்வு முன்னர் அறிவித்தது போன்றே ஆகஸ்ட் 4ம் தேதி நடைபெற உள்ளது. இந்த அறிவிப்பு ஆசிரியர் பணிக்காக விண்ணப்பிக்காமல் காத்திருப்போருக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரசுக் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர்களாகப் பணிபுரிய போட்டி எழுத்துத் தேர்வுக்கு 200 மதிப்பெண்கள், நேர்முகத்தேர்வுக்கு 300 மதிப்பெண்கள் என்கிற அடிப்படையில் தேர்வு முறை நடத்தப்படவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
2019ம் ஆண்டு உதவி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பித்தவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கத் தேவையில்லை. அவர்களின் முந்தைய விண்ணப்பங்கள் இந்த தேர்வுக்கு பரிசீலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணி: உதவிப் பேராசிரியர்
காலியிடங்கள்: 3,921 நடப்பு காலிப் பணியிடங்கள், 79 பின்னடைவு காலிப் பணியிடங்கள் என மொத்தம் 4,000 காலி பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.
சம்பளம்: மாதம் ரூ.57,700- 1,82,400
கூடுதல் விவரங்களை www.trb.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று தெரிந்து கொள்ளலாம்.
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}