டெல்லி: ஆந்திர மாநில சட்டசபைக்கும், நாடு முழுவதும் 9 மாநிலங்களில் 96 மக்களவைத் தொகுதிகளுக்கும் நாளை தேர்தல் நடைபெறவுள்ளது. இதையடுத்து பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
7 கட்டமாக நடத்தப்பட்டு வரும் லோக்சபா தேர்தலில் நாளை 4வது கட்ட தேர்தல் நடைபெறவுள்ளது. 9 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 96 தொகுதிகளுக்கு நாளை தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலையுடன் முடிவடைந்து விட்டது.
ஆந்திர மாநிலத்தில் 25 தொகுதிகள், தெலங்கானாவில் 17, உத்தரப் பிரதேசம் 13, மகாராஷ்டிரா 11, மேற்கு வங்காளம் 8, மத்தியப் பிரதேசம் 8, பீகார் 5, ஜார்க்கண்ட், ஒடிஷாவில், ஜம்மு காஷ்மீரில் தலா ஒரு தொகுதியில் தேர்தல் நடைபெறவுள்ளது. இதுதவிர ஆந்திர மாநில சட்டசபைக்கும் நாளை தேர்தல் நடைபெறவுள்ளது.
சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், திரினமூல் காங்கிரஸ் கட்சியின் மஹுவா மொய்த்ரா, முன்னாள் கிரிக்கெட் வீரர் யூசுப் பதான், ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஒய்.எஸ். ஷர்மிளா, முன்னாள் நடிகர் சத்ருகன் சின்ஹா, அசாதுதீன் ஓவைசி உள்ளிட்டோர் போட்டியிடும் தொகுதிகளில் நாளைதான் வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}