டெல்லி: ஆந்திர மாநில சட்டசபைக்கும், நாடு முழுவதும் 9 மாநிலங்களில் 96 மக்களவைத் தொகுதிகளுக்கும் நாளை தேர்தல் நடைபெறவுள்ளது. இதையடுத்து பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
7 கட்டமாக நடத்தப்பட்டு வரும் லோக்சபா தேர்தலில் நாளை 4வது கட்ட தேர்தல் நடைபெறவுள்ளது. 9 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 96 தொகுதிகளுக்கு நாளை தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலையுடன் முடிவடைந்து விட்டது.
ஆந்திர மாநிலத்தில் 25 தொகுதிகள், தெலங்கானாவில் 17, உத்தரப் பிரதேசம் 13, மகாராஷ்டிரா 11, மேற்கு வங்காளம் 8, மத்தியப் பிரதேசம் 8, பீகார் 5, ஜார்க்கண்ட், ஒடிஷாவில், ஜம்மு காஷ்மீரில் தலா ஒரு தொகுதியில் தேர்தல் நடைபெறவுள்ளது. இதுதவிர ஆந்திர மாநில சட்டசபைக்கும் நாளை தேர்தல் நடைபெறவுள்ளது.
சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், திரினமூல் காங்கிரஸ் கட்சியின் மஹுவா மொய்த்ரா, முன்னாள் கிரிக்கெட் வீரர் யூசுப் பதான், ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஒய்.எஸ். ஷர்மிளா, முன்னாள் நடிகர் சத்ருகன் சின்ஹா, அசாதுதீன் ஓவைசி உள்ளிட்டோர் போட்டியிடும் தொகுதிகளில் நாளைதான் வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.
இந்தியாவின் 15வது துணை ஜனாதிபதியாக சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வு.. 452 வாக்குகள் பெற்று வெற்றி
தவெக தலைவர் விஜய் சுற்றுப் பயணம்.. சனி, ஞாயிற்றை தேர்வு செய்ய இதுதான் காரணமா?
மக்களே அலர்ட்டா இருந்துக்கோங்க..இன்றும், நாளையும் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்
செங்கோட்டையன்-அமித்ஷா சந்திப்பு.. எடப்பாடி பழனிச்சாமிக்கு வைக்கப்படும் "செக்" ஆ?
மன அமைதிக்காக ஹரித்வாருக்குக் கிளம்பி.. டெல்லியில் அமித்ஷாவை சந்தித்த செங்கோட்டையன்!
Heart Attack: ராத்திரி நேரத்தில்தான் மாரடைப்பு அதிகமாக வருமா.. டாக்டர்கள் சொல்வது என்ன?
பீகார் சட்டசபைத் தேர்தல் களம்.. ஓவைசி வைக்கப் போகும் செக்.. இந்த முறை யாருக்கு?
நேபாளத்தில் வெடித்த பெரும் கலவரம்.. பின்வாங்கிய பிரதமர்.. நீங்கிய சமூக வலைதள தடை!
ஜிஎஸ்டி வரிக் குறைப்பால்.. அதிரடியாக விலையைக் குறைத்த ஆடி கார் நிறுவனம்.. 10% குறைந்தது
{{comments.comment}}