டெல்லி: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது இரண்டாம் கட்ட பாத யாத்திரையை ஜனவரி 14ஆம் தேதி தொடங்கி மார்ச் 20இல் நிறைவு செய்கிறார். இந்த யாத்திரைக்கு "பாரத் நியாய யாத்திரை" என பெயரிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் 7ஆம் தேதி கன்னியாகுமரியிலிருந்து தொடங்கி காஷ்மீர் வரை பாரத் ஜோடோ யாத்திரையை நடத்தினார் ராகுல் காந்தி. இது நாடு முழுவதும் மிகப் பெரிய பேசு பொருளாக மாறியது. இந்த யாத்திரையானது 2023ம் ஆண்டு ஜனவரி 30ம் தேதி முடிவடைந்தது. காங்கிரஸ் கட்சிக்கு பல மாநிலங்களில் செல்வாக்கை வலுப்படுத்த உதவியது.
பாரத் நியாய யாத்திரை

இந்நிலையில் ராகுல் காந்தி 2வது கட்டமாக இன்னொரு யாத்திரையை அடுத்த ஆண்டு ஜனவரி 14ம் தேதி தொடங்கவுள்ளார். இதற்கு பாரத் நியாய யாத்திரை என்று பெயரிடப்பட்டுள்ளது. இது மணிப்பூரில் தொடங்கி மும்பையில் முடியும். இது குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே. சி வேணுகோபால் கூறியதாவது:
இரண்டாம் கட்ட யாத்திரை மணிபூரிலிருந்து தொடங்கி நாகலாந்து, அசாம், மேகாலயா, மேற்கு வங்காளம், பீகார், ஜார்கண்ட், ஒடிசா, சத்தீஸ்கர், உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசம், குஜராத் வழியாக மகாராஷ்டிராவின் மும்பை வரை மேற்கொள்ளப்படும்.
14 மாநிலங்கள் 85 மாவட்டங்கள் 66 நாட்கள்
மொத்தம் 14 மாநிலங்களில், 85 மாவட்டங்கள் வழியாக மக்களை சந்திக்கிறார் ராகுல் காந்தி. இந்தப் பயணம் மொத்தம் 66 நாட்கள் வரை நடைபெறும். இதன் பயண தூரம் 6500 கிலோமீட்டர் ஆகும் என்றார் வேணுகோபால்.
இனக் கலவரம் வெடித்து பல உயிர்களைக் குடித்த, பல பெண்களை மானபங்கப்படுத்தி நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளைப் பரப்பிய மணிப்பூரிலிருந்து ராகுல் காந்தியின் 2வது யாத்திரை தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்
ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்
ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!
12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
{{comments.comment}}