சென்னை: பாஜக கூட்டணியில் ஒதுக்கப்பட்ட 3 தொகுதிகளில், இரண்டு தொகுதியின் வேட்பாளர்களை இன்று அறிவித்தார் தமாகா தலைவர் ஜி கே வாசன். இந்த தேர்தலில் தங்கள் கட்சி உறுதியாக வெற்றி பெறும் என நம்பிக்கையுடன் அவர் தெரிவித்துள்ளார்.
பாஜக கூட்டணியில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு மூன்று தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அதில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் ஸ்ரீபெரும்புத்தூர் தொகுதியில் வேணுகோபால் அவர்களும், ஈரோடு தொகுதியில் விஜயகுமார் அவர்களும் போட்டியிடுகின்றனர். தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை நாளை மறுதினம் அறிவிப்பதாக ஜி கே வாசன் தெரிவித்துள்ளார்.

தமாகா தலைவர் ஜி கே வாசன் செய்தியாளர் சந்திப்பில் கூறுகையில், லோக்சபா தேர்தலை முன்னிட்டு 40 பாராளுமன்ற தொகுதிகளில் புதுவைத் தொகுதி உட்பட அனைத்து கட்சிகளின் ஆதரவோடு மக்களை சந்தித்து வாக்கு கேட்டு வெற்றி பெறக்கூடிய நல்ல நிலையை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி ஏற்படுத்தும் என நம்புகிறேன். மார்ச் 28 ஆம் தேதி எனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி ஏப்ரல் 17 வரை தொடர்ந்து 21 நாட்கள் பிரச்சாரம் செய்ய இருக்கிறேன். இதைப் பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பு பின்னர் அறிவிப்பேன். இந்த தேர்தலில் வெற்றி என்பது உறுதி. எங்கள் கூட்டணியின் குரல் பாராளுமன்றத்தில் ஒலிக்கும்.
பாஜகவின் கூட்டணியில் தமாகா மூன்று தொகுதிகளில் போட்டியிடுகிறது. ஈரோடு பாராளுமன்ற தொகுதி, ஸ்ரீபெரும்புதூர் பாராளுமன்ற தொகுதி, தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி, ஆகிய மூன்று தொகுதிகளில் எங்களுடைய வெற்றி வேட்பாளர்கள் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடுவார்கள். அதில் ஸ்ரீபெரும்புத்தூரில் வேணுகோபால் போட்டியிடுகிறார். ஈரோடு தொகுதியில் விஜயகுமார் போட்டியிடுகிறார். தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பை நாளை மறுதினம் அறிவிப்பேன் என கூறினார்.
3 உதயசூரியன்.. ஒரு தனிச் சின்னம்.. ஆக மொத்தம் மதிமுகவுக்கு 4 சீட்.. 2 தொகுதிகள் குறைவு!
ஐபிஎல் 2026: முதல் கட்ட அட்டவணை வெளியீடு.. பெங்களூருவில் தொடக்க ஆட்டம்.. சென்னைக்கு எப்போ?
துபாய் விமான நிலையம் அருகே ஈரான் ட்ரோன் தாக்குதல்: இந்தியர் உட்பட 4 பேர் காயம்
தேமுதிக.,விற்கு விருத்தாச்சலம் தொகுதி ஒதுக்கீடு?: மீண்டும் ஒரு 'கேப்டன்' மேஜிக் நடக்குமா?
ஒரே நாளில் 60 வேட்பாளர்கள் தேர்வு...அதிரடி காட்டும் தவெக விஜய்
தமிழகத்தின் புதிய ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் நாளை பதவியேற்பு
பிரதமரின் தமிழக வருகைக்கு முன்பு தொகுதிப் பங்கீட்டை முடிக்க அதிமுக தீவிரம்
நாகர்கோவில் மற்றும் போத்தனூரிலிருந்து அம்ரித் பாரத் ரயில்கள்!
திருச்சி வருகிறார் பிரதமர் மோடி.. ரூ. 5650 கோடி மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார்
{{comments.comment}}