பாஜக கூட்டணியில் தமாகா.,வின் வெற்றி உறுதி.. ஜி கே வாசன் நம்பிக்கை

Mar 22, 2024,02:49 PM IST

சென்னை: பாஜக கூட்டணியில் ஒதுக்கப்பட்ட 3 தொகுதிகளில், இரண்டு தொகுதியின் வேட்பாளர்களை இன்று அறிவித்தார் தமாகா தலைவர் ஜி கே வாசன். இந்த தேர்தலில் தங்கள் கட்சி உறுதியாக வெற்றி பெறும் என நம்பிக்கையுடன் அவர் தெரிவித்துள்ளார். 


பாஜக கூட்டணியில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு மூன்று தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அதில்  தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் ஸ்ரீபெரும்புத்தூர் தொகுதியில் வேணுகோபால் அவர்களும், ஈரோடு தொகுதியில் விஜயகுமார் அவர்களும் போட்டியிடுகின்றனர். தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை நாளை மறுதினம் அறிவிப்பதாக ஜி கே வாசன் தெரிவித்துள்ளார்.




தமாகா தலைவர் ஜி கே வாசன் செய்தியாளர் சந்திப்பில் கூறுகையில், லோக்சபா தேர்தலை முன்னிட்டு 40 பாராளுமன்ற தொகுதிகளில்  புதுவைத் தொகுதி உட்பட அனைத்து கட்சிகளின் ஆதரவோடு மக்களை சந்தித்து வாக்கு கேட்டு வெற்றி பெறக்கூடிய நல்ல நிலையை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி ஏற்படுத்தும் என நம்புகிறேன். மார்ச் 28 ஆம் தேதி எனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி ஏப்ரல் 17 வரை தொடர்ந்து 21 நாட்கள் பிரச்சாரம் செய்ய இருக்கிறேன். இதைப் பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பு பின்னர் அறிவிப்பேன். இந்த தேர்தலில் வெற்றி என்பது உறுதி. எங்கள் கூட்டணியின் குரல் பாராளுமன்றத்தில் ஒலிக்கும்.


பாஜகவின் கூட்டணியில் தமாகா மூன்று தொகுதிகளில் போட்டியிடுகிறது. ஈரோடு பாராளுமன்ற தொகுதி, ஸ்ரீபெரும்புதூர் பாராளுமன்ற தொகுதி, தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி, ஆகிய மூன்று தொகுதிகளில் எங்களுடைய வெற்றி வேட்பாளர்கள் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடுவார்கள். அதில் ஸ்ரீபெரும்புத்தூரில் வேணுகோபால் போட்டியிடுகிறார். ஈரோடு தொகுதியில் விஜயகுமார் போட்டியிடுகிறார். தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் பற்றிய  அதிகாரப்பூர்வமான அறிவிப்பை நாளை மறுதினம் அறிவிப்பேன் என கூறினார்.

சமீபத்திய செய்திகள்

news

India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?

news

ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி

news

கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!

news

வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!

news

மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்

news

வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!

news

கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!

news

ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!

அதிகம் பார்க்கும் செய்திகள்