சென்னை : தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் லோக்சபா தேர்தலில் போட்டியிட போகும் வேட்பாளர்களின் பட்டியலை அக்கட்சியின் தலைவர்கள் ஜி.கே.வாசன் இன்று வெளியிட்டார். அதோடு வேட்பாளர்களையும் அறிமுகம் செய்து வைத்தார்.
2024ம் ஆண்டு லோக்சபா தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி துவங்கி ஜூன் 01 ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெற உள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 19ம் தேதி லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மார்ச் 20ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் துவங்கி நடந்து வருகிறது. இதனால் அனைத்து கட்சிகளும் தங்களின் கட்சி சார்பில் போட்டியிட உள்ள வேட்பாளர்கள் குறித்த பட்டியலை வெளியிட்டு வருகின்றன. இந்த வரிசையில் இன்று தமாக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை பட்டியலை ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ளார்.

பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தமாக.,விற்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஈரோடு, ஸ்ரீபெரும்புதூர், தூத்துக்குடி ஆகிய தொகுதிகள் தமாக.,விற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
தமாக வேட்பாளர் பட்டியல் :
ஈரோடு - விஜயக்குமார்
ஸ்ரீபெரும்புதூர் - வேணுகோபால்
தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் குறித்த அறிவிப்பை மார்ச் 24ம் தேதி வெளியிட உள்ளதாக ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார். மேலும் இந்த தேர்தலில் தமாக., வேட்பாளர்கள் சைக்கிள் சின்னத்தில் போட்டியிட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி தொகுதியில் திமுக வேட்பாளராக கனிமொழி அறிவிக்கப்பட்டுள்ளார். அதிமுக சார்பில் இந்த தொகுதியில் சிவசாமி வேலுமணி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இதனால் தூத்துக்குடி தொகுதியிலும் மும்முனை போட்டி நிலவுகிறது.
அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!
கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!
23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!
வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்
அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!
ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!
ஆந்திராவில் பேருந்து விபத்து..20 பேர் பலி..11 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:மாவட்ட ஆட்சியர் தகவல்!
விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சி.. அடுத்தடுத்து டக் அவுட் ஆனால்.. ரவி சாஸ்திரி வார்னிங்!
தமிழ்நாட்டில் நாளை.. அரசு அலுவலகங்கள்.. பள்ளிகள் இயங்கும்.. மாநில அறிவிப்பு
{{comments.comment}}