ஜி20 மாநாடு புறக்கணிப்பா?.. ஐரோப்பா டூர் செல்லும் ராகுல் காந்தி

Sep 06, 2023,04:26 PM IST
டில்லி : இந்தியாவில் ஜி20 மாநாடு நடைபெற உள்ள நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஒரு வார பயணமாக ஐரோப்பா டூர் சென்றுள்ளார்.

டில்லியில் செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் ஜி 20 நாடு நடைபெற உள்ளது. இதற்காக உலக நாடுகளின் தலைவர்கள் பலரும் நாளை மற்றும் நாளை மறுநாள் இந்தியா வர உள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. 

வெளிநாட்டு தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் ஆகியோரின் வருகையை முன்னிட்டு ஜனாதிபதி மாளிகையில் விருந்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விருந்தில் பங்கேற்க எதிர்க்கட்சிகளின் தலைவர்கள், நாட்டின் முக்கிய தலைவர்கள் உள்ளிட்டோருக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. 

உலக தலைவர்கள் இந்தியா வரும் சமயத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, நேற்று ஐரோப்பாவிற்கு புறப்பட்டு சென்றுள்ளார். இந்த ஒரு வார பயணத்தின் போது அவர் ஐரோப்பிய யூனியனின் வழக்கறிஞர்கள், மாணவர்கள், இந்திய வம்சாவளியினர் ஆகியோரை சந்தித்து பேச உள்ளதாக சொல்லப்படுகிறது. 

The Hague நகரில் செப்டம்பர் 7 ம் தேதி ஐரோப்பிய வழக்கறீஞர்களை ராகுல் காந்தி சந்திக்க உள்ளார். அதைத் தொடர்ந்து செப்டம்பர் 08 ம் தேதி பாரிஸ் பல்கலைக்கழகத்தில் நடக்கும் கூட்டத்தில் மாணவர்களிடையே ராகுல் காந்தி பேச உள்ளார்.

செப்டம்பர் 9 ம் தேதி பாரிசில் நடக்கும் Labour union of France கூட்டத்தில் பங்கேற்கும் ராகுல் காந்தி, செப்டம்பர் 10 ம் தேதி நார்வே செல்ல உள்ளார். அங்கு ஓஸ்லோ பகுதியில் நடக்கும் கூட்டத்தில் இந்திய வம்சாவளியினரை அவர் சந்தித்து பேச உள்ளார். செப்டம்பர் 11 ம் தேதியே ராகுல் காந்தி இந்தியா திரும்ப உள்ளதாக சொல்லப்படுகிறது. அதாவது ஜி20 மாநாடு முடிந்து ஒரு நாள் கழிந்த பிறகே ராகுல் காந்தி இந்தியா திரும்ப உள்ளார். 

30 நாடுகளை சேர்ந்த தலைவர்கள், சிறப்பு விருந்தினர்கள், 14 சர்வதேச அமைப்புகள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்ளும் ஜி20 மாநாட்டை புறக்கணிக்கும் விதமாக ராகுல் காந்தி வெளிநாடு புறப்பட்டு சொல்வதாக சொல்லப்படுகிறது.

சமீபத்திய செய்திகள்

news

மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்

news

வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!

news

கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!

news

வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!

news

நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!

news

கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி

news

India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?

news

ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!

அதிகம் பார்க்கும் செய்திகள்