ஜி20 மாநாடு புறக்கணிப்பா?.. ஐரோப்பா டூர் செல்லும் ராகுல் காந்தி

Sep 06, 2023,04:26 PM IST
டில்லி : இந்தியாவில் ஜி20 மாநாடு நடைபெற உள்ள நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஒரு வார பயணமாக ஐரோப்பா டூர் சென்றுள்ளார்.

டில்லியில் செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் ஜி 20 நாடு நடைபெற உள்ளது. இதற்காக உலக நாடுகளின் தலைவர்கள் பலரும் நாளை மற்றும் நாளை மறுநாள் இந்தியா வர உள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. 

வெளிநாட்டு தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் ஆகியோரின் வருகையை முன்னிட்டு ஜனாதிபதி மாளிகையில் விருந்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விருந்தில் பங்கேற்க எதிர்க்கட்சிகளின் தலைவர்கள், நாட்டின் முக்கிய தலைவர்கள் உள்ளிட்டோருக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. 

உலக தலைவர்கள் இந்தியா வரும் சமயத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, நேற்று ஐரோப்பாவிற்கு புறப்பட்டு சென்றுள்ளார். இந்த ஒரு வார பயணத்தின் போது அவர் ஐரோப்பிய யூனியனின் வழக்கறிஞர்கள், மாணவர்கள், இந்திய வம்சாவளியினர் ஆகியோரை சந்தித்து பேச உள்ளதாக சொல்லப்படுகிறது. 

The Hague நகரில் செப்டம்பர் 7 ம் தேதி ஐரோப்பிய வழக்கறீஞர்களை ராகுல் காந்தி சந்திக்க உள்ளார். அதைத் தொடர்ந்து செப்டம்பர் 08 ம் தேதி பாரிஸ் பல்கலைக்கழகத்தில் நடக்கும் கூட்டத்தில் மாணவர்களிடையே ராகுல் காந்தி பேச உள்ளார்.

செப்டம்பர் 9 ம் தேதி பாரிசில் நடக்கும் Labour union of France கூட்டத்தில் பங்கேற்கும் ராகுல் காந்தி, செப்டம்பர் 10 ம் தேதி நார்வே செல்ல உள்ளார். அங்கு ஓஸ்லோ பகுதியில் நடக்கும் கூட்டத்தில் இந்திய வம்சாவளியினரை அவர் சந்தித்து பேச உள்ளார். செப்டம்பர் 11 ம் தேதியே ராகுல் காந்தி இந்தியா திரும்ப உள்ளதாக சொல்லப்படுகிறது. அதாவது ஜி20 மாநாடு முடிந்து ஒரு நாள் கழிந்த பிறகே ராகுல் காந்தி இந்தியா திரும்ப உள்ளார். 

30 நாடுகளை சேர்ந்த தலைவர்கள், சிறப்பு விருந்தினர்கள், 14 சர்வதேச அமைப்புகள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்ளும் ஜி20 மாநாட்டை புறக்கணிக்கும் விதமாக ராகுல் காந்தி வெளிநாடு புறப்பட்டு சொல்வதாக சொல்லப்படுகிறது.

சமீபத்திய செய்திகள்

news

LPG Shortage: கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு... சென்னை ஹாஸ்டல்களில் இனி காபி, டீ கிடையாது!

news

சிலிண்டர் தட்டுப்பாடு : அம்மா உணவகங்களை இயக்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

news

கரூர் வழக்கு...மார்ச் 15ம் தேதி ஆஜராக விஜய்க்கு மீண்டும் சிபிஐ சம்மன்

news

சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்குப் பற்றாக்குறை.. ஹோட்டல்களை மூடும் அபாயம்!

news

சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில் மஞ்சள் பிள்ளையார், வெற்றிலை பாக்கு

news

என்டிஏ கூட்டணியில் விஜய் உண்மையா?...ஒரே போடாக போட்ட அண்ணாமலை

news

கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ சம்மன்... மார்ச் 17-ல் ஆஜராவேன்- செந்தில் பாலாஜி அதிரடி

news

சமையல் எரிவாயு சிலிண்டர் உற்பத்தியை அதிகரிக்க.. மத்திய அரசு உத்தரவு

news

விஜய் குறித்த கருத்து...பாஜக செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் பதவி பறிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்