லாகூர்: டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரிலிருந்து பாகிஸ்தான் வெளியேற்றப்பட்டுள்ள நிலையில் பாகிஸ்தான் அணி குறித்த சில முக்கியத் தகவல்களை அணியின் தலைமைப் பயிற்சியாளர் கேரி கிர்ஸ்டன் கூறியதாக வெளியான தகவல்கள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன.
பாகிஸ்தான் அணி டி20 உலகக் கோப்பைப் போட்டியில் மிகவும் மோசமாக ஆடி கடைசியில் சூப்பர் 8 சுற்றுக்கே தகுதி பெறாமல் வெளியேறி விட்டது. இதனால் பாகிஸ்தான் ரசிகர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். இந்த நிலையில் அணியின் நிலைமை மோசமாக உள்ளதாக கேரி கிர்ஸ்டன் கூறியதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அந்த ஊடகச் செய்திகளில் கூறப்பட்டுள்ளதாவது:

அணியில் ஒற்றுமை இல்லை. ஒருவருக்கு ஒருவர் உதவி செய்வதில்லை. தனித்தே அனைவரும் இயங்குகிறார்கள். பலரிடம் பிட்னஸ் சரியாக இல்லை. பலரிடம் Passion இல்லை. வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் யாரும் விளையாடவில்லை. இப்படியே இருந்தால் கஷ்டம். நல்ல உடல் தகுதியுடன், ஒற்றுமைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வீரர்களுக்குத்தான் அணியில் இடம் தரப்பட வேண்டும். அப்போதுதான் அணி வெற்றிப் பாதைக்குத் திரும்ப முடியும்.
சர்வதேச அணிகளுடன் மோதும்போது நாம் திறமையாக இருக்க வேண்டியது அவசியம். ஆனால் பலரிடம் அந்தத் தகுதி இல்லை. எப்படி விளையாட வேண்டும் என்பது கூட தெரியாமல் சில வீரர்கள் உள்ளனர். இது ஏமாற்றம் தருகிறது.
நான் பல அணிகளுடன் இணைந்து பணியாற்றியுள்ளேன். ஆனால் இங்குதான் இப்படி ஒரு சூழலை பார்க்கிறேன். அணி வீரர்கள் நான் சொன்ன சூழலுக்கு மாற வேண்டும். அப்படி இல்லாவிட்டால் அவர்கள் வெளியேற்றப்பட வேண்டும் என்று கிர்ஸ்டன் கூறியதாக செய்திகள் கூறுகின்றன.
கேரி கிர்ஸ்டன் பயிற்சியாராக இருந்தபோதுதான் தோனி தலைமையிலான இந்திய அணி உலகக் கோப்பையை வென்று அசத்தியது என்பது நினைவிருக்கலாம்.
டி20 உலகக் கோப்பைத் தொடரில் பாகிஸ்தான் அணி, உப்புச் சப்பே இல்லாத அமெரிக்க அணியிடம் தோல்வியைத் தழுவி அனைவரையும் அதிர வைத்தது. அடுத்து வழக்கம் போல இந்தியாவிடமும் அது தோற்றது. கனடா மற்றும் அயர்லாந்தை மட்டுமே அது வென்றது. ஏ பிரிவில் இடம் பெற்ற பாகிஸ்தான் அணி, 2 வெற்றி, 2 தோல்வியுடன் 3வது இடத்தைப் பிடித்து வெளியேறியுள்ளது.
தமிழ்நாட்டு மக்களின் ஒரே சின்னம் விசில்.. தவெகவுக்கு முதல் வெற்றி.. விசில் போடுவோம் - விஜய்
திருச்சி, பெரம்பலூர்உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் கொடுத்த தகவல்
விசில் கொடுத்தாச்சு.. கப்பு முக்கியம் பிகிலு.. மாமல்லபுரத்தில் ஆலோசனை.. ஆயத்தமாகும் விஜய்!
திமுக ஆட்சியில் கஞ்சா மயமான தமிழ்நாடு.. பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தாக்கு!
NDA கூட்டணியைப் பார்த்து செல்வப்பெருந்தகைக்கு குளிர் ஜூரம் ஏற்பட்டுள்ளது: அண்ணாமலை
2026 தேர்தலுக்கான விசில் ஒலித்தது-தவெக சின்னம் குறித்து பிரவீன் சக்ரவர்த்தி நெகிழ்ச்சி பதிவு!
திருப்பூரில் பரபரப்பு... கவிஞர் வைரமுத்து பங்கேற்ற நிகழ்ச்சியில் காலணி வீச்சு
தவெகவுக்கு விசில் சின்னம்: தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு!
மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் ஆட்சி..தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி: எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டம்
{{comments.comment}}