லாகூர்: டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரிலிருந்து பாகிஸ்தான் வெளியேற்றப்பட்டுள்ள நிலையில் பாகிஸ்தான் அணி குறித்த சில முக்கியத் தகவல்களை அணியின் தலைமைப் பயிற்சியாளர் கேரி கிர்ஸ்டன் கூறியதாக வெளியான தகவல்கள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன.
பாகிஸ்தான் அணி டி20 உலகக் கோப்பைப் போட்டியில் மிகவும் மோசமாக ஆடி கடைசியில் சூப்பர் 8 சுற்றுக்கே தகுதி பெறாமல் வெளியேறி விட்டது. இதனால் பாகிஸ்தான் ரசிகர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். இந்த நிலையில் அணியின் நிலைமை மோசமாக உள்ளதாக கேரி கிர்ஸ்டன் கூறியதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அந்த ஊடகச் செய்திகளில் கூறப்பட்டுள்ளதாவது:

அணியில் ஒற்றுமை இல்லை. ஒருவருக்கு ஒருவர் உதவி செய்வதில்லை. தனித்தே அனைவரும் இயங்குகிறார்கள். பலரிடம் பிட்னஸ் சரியாக இல்லை. பலரிடம் Passion இல்லை. வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் யாரும் விளையாடவில்லை. இப்படியே இருந்தால் கஷ்டம். நல்ல உடல் தகுதியுடன், ஒற்றுமைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வீரர்களுக்குத்தான் அணியில் இடம் தரப்பட வேண்டும். அப்போதுதான் அணி வெற்றிப் பாதைக்குத் திரும்ப முடியும்.
சர்வதேச அணிகளுடன் மோதும்போது நாம் திறமையாக இருக்க வேண்டியது அவசியம். ஆனால் பலரிடம் அந்தத் தகுதி இல்லை. எப்படி விளையாட வேண்டும் என்பது கூட தெரியாமல் சில வீரர்கள் உள்ளனர். இது ஏமாற்றம் தருகிறது.
நான் பல அணிகளுடன் இணைந்து பணியாற்றியுள்ளேன். ஆனால் இங்குதான் இப்படி ஒரு சூழலை பார்க்கிறேன். அணி வீரர்கள் நான் சொன்ன சூழலுக்கு மாற வேண்டும். அப்படி இல்லாவிட்டால் அவர்கள் வெளியேற்றப்பட வேண்டும் என்று கிர்ஸ்டன் கூறியதாக செய்திகள் கூறுகின்றன.
கேரி கிர்ஸ்டன் பயிற்சியாராக இருந்தபோதுதான் தோனி தலைமையிலான இந்திய அணி உலகக் கோப்பையை வென்று அசத்தியது என்பது நினைவிருக்கலாம்.
டி20 உலகக் கோப்பைத் தொடரில் பாகிஸ்தான் அணி, உப்புச் சப்பே இல்லாத அமெரிக்க அணியிடம் தோல்வியைத் தழுவி அனைவரையும் அதிர வைத்தது. அடுத்து வழக்கம் போல இந்தியாவிடமும் அது தோற்றது. கனடா மற்றும் அயர்லாந்தை மட்டுமே அது வென்றது. ஏ பிரிவில் இடம் பெற்ற பாகிஸ்தான் அணி, 2 வெற்றி, 2 தோல்வியுடன் 3வது இடத்தைப் பிடித்து வெளியேறியுள்ளது.
திமுகவின் சரமாரி தாக்குதலிலிருந்து தப்ப.. அதிமுக, பாஜகவுடன் ஐக்கியமாவாரா தவெக விஜய்?
TVK Vijay: தவெக தலைவர் விஜய்யுடன்.. பவன் கல்யாண் பேசி வருகிறாரா.. உண்மை என்ன?
விஜய்க்கு மீண்டும் சிபிஐ சம்மன்...நாளை தவெக வேட்பாளர் நேர்காணல் நடப்பதில் சிக்கல்
குந்தவை த்ரிஷா பற்றி சர்ச்சை கருத்து...மன்னிப்பு கேட்டார் நடிகர் பார்த்திபன்
அமெரிக்காவுலதாங்க அதுக்குப் பேரு இறைச்சி பந்து.. நம்ம ஊர்ல என்ன தெரியுமா?
கேஸ் சிலிண்டர் புக் பண்ண போறீங்களா?...இந்த புதிய விதிகளை தெரிஞ்சுக்க மறந்துடாதீங்க
தமிழக ராஜ்யசபா தேர்தல்... 6 வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்வு
ஈரான் போர் பதற்றம்..எதிர்க்கட்சிகள் அமளி...வெளியுறவுத்துறை அமைச்சர் விளக்கம்
மார்ச் 12ல் தமிழகம் தழுவிய போராட்டம்...தவெக அறிவிப்பு
{{comments.comment}}