திருப்பூர்: திருப்பூரில் கேஸ் சிலிண்டர் வெடித்ததில் 42 வீடுகள் எரிந்து தரைமட்டம் ஆகியுள்ளன.
திருப்பூர், எம்ஜிஆர் நகரில், சாயா தேவி என்பவருக்கு சொந்தமான இடம் உள்ளது. இந்த இடத்தில் சாயா தேவி 42 தகர கொட்டகைகளை அமைத்து வாடகைக்கு வீட்டுள்ளார். இங்கு தமிழ்நாடு மற்றும் வட மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் தங்கியுள்ளனர். அனைவரும் வேலைக்கு சென்றிருந்த நேரத்தில் ஒவ்வொரு சிலிண்டராக வெடித்துள்ளது.
சுமார் 4 சிலிண்டர்கள் வெடித்ததில் 42 தகர கொட்டகைகளும் எரிந்து சம்பலாகியுள்ளது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த திருப்பூர் வடக்கு காவல் துறையினர், தீயனைப்பு துறையினரும் விரைந்து வந்து மீட்டு பணிகளை செய்து வருகின்றனர். இந்த வீடுகளில் தங்கியிருந்த தொழிலாளர்கள் சம்பவ இடத்திற்கு வந்து உடைமைகளை தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதுவரைக்கு வீட்டில் யாரும் இல்லை என்றே கூறப்பட்டு வருகிறது. மேலும் சில சிலிண்டர்கள் அங்கு இருப்பதாகவும், அந்த சிலிண்டர்களும் வெடிக்கும் வாய்ப்பு இருப்பதால் மீட்பு குழுவினர் மீட்புபணிகளில் ஈடுபடாமல் உள்ளனர். தற்பொழுது தீயை அனைக்கும் பணி தான் நடைபெற்று வருகிறது. இந்த சம்பவத்தில் யார் யார் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது குறித்து பின்னர் தான் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்விதான் ஒருவரின் நிலையான சொத்து... மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அட்வைஸ்!
திருப்பூரில் கேஸ் சிலிண்டர்கள் வெடித்து 42 வீடுகள் தரைமட்டம்!
Are you Ok?.. கேட்டதுமே அழுது விட்ட ஜனனி பொற்கொடி.. ஒரு நெகிழ்ச்சிக் கதை... say bye to STRESS!
குஜராத்தில் பாலம் இடிந்து விழுந்ததில் பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு!
கொத்தவரங்காய் துவையல்.. ஈஸியா பண்ணலாம்.. சூப்பர் டேஸ்ட்டியா இருக்கும்!
அத்தையுடன் தவறான உறவு.. இளைஞரை அடித்து உதைத்த உறவினர்கள்.. கடைசியில் நடந்த டிவிஸ்ட்!
இந்திய நர்ஸ் நிமிஷா பிரியாவுக்கு.. ஜூலை 16ல் ஏமனில் மரண தண்டனை?.. கவலையில் குடும்பம்!
தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்: ஏறிய வேகத்தில் இறங்கியது தங்கம் விலை!
அதிகரித்து வரும் காற்று மாசு.. திக்கித் திணறும் தலைநகர் டெல்லி.. கவலையில் மத்திய அரசு!
{{comments.comment}}