காஸாவில் 50,000 பேருக்கு நாலே டாய்லெட்தான்.. தண்ணீர் வெறும் 4 மணி நேரம்தான்.. ஷாக்கிங்!

Nov 08, 2023,02:42 PM IST

காஸா முனை: பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இஸ்ரேலின் தொடர் தாக்குதலால் அந்த நகரமே சிதிலமடைந்துள்ள நிலையில் நிவாரண முகாம்களில் நிலைமை மேலும் மோசமடைந்துள்ளதாக அங்கு சேவையாற்றி வரும் நர்ஸ் ஒருவர் தெரிவித்துள்ளார்.


ஹமாஸ் நடத்திய தாக்குதலால் வெகுண்ட இஸ்ரேல் அதிரடித் தாக்குதலில் குதித்தது. ஹமாஸைக் குறி வைத்து அது நடத்தி வரும் தாக்குதலால் காஸாவே சுடுகாடாகியுள்ளது. இதுவரை கிட்டத்தட்ட 10,000 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.


ஐ.நா. உள்பட பல்வேறு நாடுகள் போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தும் கூட அதை ஏற்க மறுத்து தொடர்ந்து காஸாவைத் தாக்கி வருகிறது இஸ்ரேல் ராணுவம். தற்போது காஸா நகரின் இதயப் பகுதி வரை முன்னேறி வந்து விட்டது இஸ்ரேல் ராணுவம். ஹமாஸ் படையினர் மறைந்திருக்கும் பங்கர்களைக் குறி வைத்துத் தாக்குதல் தொடர்ந்து வருகிறது.




இந்த நிலையில் போரில் சிக்கி மீட்கப்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஆனால் அங்கு நிலைமை மோசமாக உள்ளதாக அங்கு சேவையாற்றி வரும் நர்ஸ் ஒருவர் தெரிவித்துள்ளார்.  எமிலி கல்லஹன் என்ற நர்ஸ் இதுகுறித்துக் கூறுகையில் நான் பணியாற்றும் முகாமில் கிட்டத்தட்ட 50,000 பேர் தங்கியுள்ளனர். ஆனால் அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் போதுமானதாக இல்லை.


மொத்தமே 4 டாய்லெட்டுகள்தான் உள்ளன. தினசரி 4 மணி நேரத்திற்கு மட்டுமே தண்ணீர் வருகிறது. இங்கு பாலஸ்தீனத்தைச் சேர்ந்த டாக்டர்களும் நர்ஸ்களும் தங்கியுள்ளனர்.  எப்போது வேண்டுமானாலும் மரணம் உறுதி என்று தெரிந்தும் கூட அனைவரும் உயிரை துச்சமென மதித்து சேவையாற்றி வருகின்றனர். நானும் போரில் சிக்கி மீட்கப்பட்டவள்தான். அமெரிக்காவைச் சேர்ந்த நான் இப்போது பாதிக்கப்பட்ட மக்களுக்காக சேவையாற்றி வருகிறேன்.


காஸாவில் எந்த இடமும் பாதுகாப்பானதாக இல்லை. இந்த முகாம்  கூட பாதுகாப்பானதாக இல்லை.  இங்கு எனது குடும்பத்தினரும் தங்கியுள்ளனர். அவர்களுடன் இருப்பதால் பாதுகாப்பாக உணர்கிறேன்.  நாங்கள் அடிக்கடி முகாம்களை மாற்றிக் கொண்டே இருக்கிறோம். தாக்குதல் பயம் காரணமாக முகாம் அடிக்கடி மாற்றப்படுகிறது. இப்போது 5வது முறையாக மாறியுள்ளோம். இங்கு பெரும்பாலும் குழந்தைகள் அதிக அளவிலான காயங்களுடன் தங்கியுள்ளனர்.


மருத்துவமனைகளில் இடம் இல்லை. இதனால் முகாம்களிலேயே பலரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். போதிய அடிப்படை வசதிகள் இல்லாமல் அனைவருமே சிரமப்படுகிறோம். கழிப்பறை வசதிதான் மிக மிக மோசமாக உள்ளது.  எங்களிடம் மருந்துகள், பேன்டேஜுகளும் போதிய அளவில் இல்லை என்றார் அவர்.

சமீபத்திய செய்திகள்

news

மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்

news

தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை

news

முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு

news

ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு

news

மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!

news

இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!

news

இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!

news

சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!

அதிகம் பார்க்கும் செய்திகள்