சென்னை: அதிமுக பாஜக பிரியக் கூடாது இணைந்திருக்க வேண்டும் என்று மறைமுகமாக கூறியுள்ளார் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன்.
அதிமுக - பாஜக இடையிலான உரசல் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இரு பக்க தலைவர்களும் வாய்க்கு வந்தபடி பேச ஆரம்பித்துள்ளனர். துப்பாக்கி பிடித்த கை இது என்று ஆவேசம் காட்டிப் பேசுகிறார் அண்ணாமலை.. நாக்கை வெட்டுவோம் என்று செல்லூர் ராஜூ வீராவேசம் காட்டுகிறார். வசூல் யாத்திரை என்று சி.வி.சண்முகம் நக்கலடிக்கிறார்.. பாஜக கூட்டணியில் இல்லை என்று அதிரடியாக அறிவிக்கிறார் ஜெயக்குமார்.

இப்படி இரு தரப்பும் மாறி மாறி அடித்து ஆடிக் கொண்டிருக்கிறது. மேல் மட்ட அளவில் தலைவர்கள் இப்படி டான்ஸ் ஆடி வரும் நிலையில் அதிமுக மற்றும் பாஜக தொண்டர்களிடையே மனதளவில் ஏற்கனவே இருந்து வரும் விரிசல் மேலும் பெரிதாகி வெகு தூரத்திற்குப் போக ஆரம்பித்து விட்டனர். தற்போதைய நிலையில் கூட்டணி இருக்கிறது என்று கூறி பாஜக மேலிடம் சமாதானம் செய்து வைத்தாலும் கூட இருவரும் ஒருமித்து செயல்படுவார்களா என்பது சந்தேகம்தான். அந்தளவுக்கு இரு தரப்புக்கும் இடையே வெறுப்புணர்வு அதிகரித்து விட்டது.
இந்த நிலையில் இரு தரப்பையும் சமாதானப்படுத்தும் நடவடிக்கைகள் ஏதும் தொடங்கியிருக்கிறதா என்று தெரியவில்லை. ஆனால் இருவரும் பிரியக் கூடாது என்று முதல் குரல் கொடுத்துள்ளார் ஜி.கே.வாசன். தமிழ்நாட்டின் நாகரீகமான அரசியல் தலைவர்களில் ஒருவராக அறியப்படும் ஜி.கே.வாசன், இதுகுறித்து ஒரு டிவீட் போட்டுள்ளார். பளிச்சென இரண்டே வரிகளில் உள்ள அந்த டிவீட்டில் ஆயிரம் செய்திகள் அடங்கியுள்ளன.
"அகில இந்திய அளவில் பாஜக பலமான கட்சி. அதுபோல் தமிழகத்தில் அஇஅதிமுக பலமான கட்சி.
தேர்தல் நெருங்கும் நேரத்தில் இது வெற்றிக் கூட்டணியாக அமையும்" ...இதுதான் ஜி.கே.வாசன் போட்டுள்ள ட்வீட்.. இதன் மூலம் அவர் உணர்த்துவது பாஜக அகில இந்திய அளவில் பெரிய ஆள் என்றால் அதிமுக தமிழ்நாட்டில் பெரிய ஆள். இருவரும் இணைந்தால்தான் பலம். அது இணைய வேண்டும் என்பதை சூசகமாக உணர்த்தியுள்ளார் வாசன்.
வாசனுக்குத் தெரிந்த இந்த உண்மை நிச்சயம் பாஜக, அதிமுகவினருக்கும் தெரியாமல் இருக்காது.. ஆனாலும் "இரண்டு தலைவர்களின்" ஈகோ காரணமாக முட்டி மோதிக் கொண்டிருக்கும் இந்தக் கட்சியினரின் பிரச்சினைகளை பாஜக மேலிடம் தீர்க்காவிட்டால் தேர்தலில் சுமூக உறவு இருக்க வாய்ப்பில்லை.. அது நிச்சயம் தேர்தல் முடிவுகளில் எதிரொலிக்கும் என்று அரசியல் நிபுணர்கள் அடித்துக் கூறுகிறார்கள்.
பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!
8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?
எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்
அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!
மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!
டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!
ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?
என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!
{{comments.comment}}