"இலை இங்கே பலம்.. தாமரை அங்கே பலம்".. வாசன் அனுப்பிய மெசேஜ்!

Sep 19, 2023,09:44 AM IST

சென்னை: அதிமுக பாஜக பிரியக் கூடாது இணைந்திருக்க வேண்டும் என்று மறைமுகமாக கூறியுள்ளார் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன்.


அதிமுக - பாஜக இடையிலான உரசல் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இரு பக்க தலைவர்களும் வாய்க்கு வந்தபடி பேச ஆரம்பித்துள்ளனர். துப்பாக்கி பிடித்த கை இது என்று ஆவேசம் காட்டிப் பேசுகிறார் அண்ணாமலை.. நாக்கை வெட்டுவோம் என்று செல்லூர் ராஜூ வீராவேசம் காட்டுகிறார். வசூல் யாத்திரை என்று சி.வி.சண்முகம் நக்கலடிக்கிறார்.. பாஜக கூட்டணியில் இல்லை என்று அதிரடியாக அறிவிக்கிறார் ஜெயக்குமார்.




இப்படி இரு தரப்பும் மாறி மாறி அடித்து ஆடிக் கொண்டிருக்கிறது. மேல் மட்ட அளவில் தலைவர்கள் இப்படி டான்ஸ் ஆடி வரும் நிலையில் அதிமுக மற்றும் பாஜக தொண்டர்களிடையே மனதளவில் ஏற்கனவே இருந்து வரும் விரிசல் மேலும் பெரிதாகி வெகு தூரத்திற்குப் போக ஆரம்பித்து விட்டனர். தற்போதைய நிலையில் கூட்டணி இருக்கிறது என்று கூறி பாஜக மேலிடம் சமாதானம் செய்து வைத்தாலும் கூட இருவரும் ஒருமித்து செயல்படுவார்களா என்பது சந்தேகம்தான். அந்தளவுக்கு இரு தரப்புக்கும் இடையே வெறுப்புணர்வு அதிகரித்து விட்டது.


இந்த நிலையில் இரு தரப்பையும் சமாதானப்படுத்தும் நடவடிக்கைகள் ஏதும் தொடங்கியிருக்கிறதா என்று தெரியவில்லை. ஆனால் இருவரும் பிரியக் கூடாது என்று முதல் குரல் கொடுத்துள்ளார் ஜி.கே.வாசன். தமிழ்நாட்டின் நாகரீகமான அரசியல் தலைவர்களில் ஒருவராக அறியப்படும் ஜி.கே.வாசன், இதுகுறித்து ஒரு டிவீட் போட்டுள்ளார். பளிச்சென இரண்டே வரிகளில் உள்ள அந்த டிவீட்டில் ஆயிரம் செய்திகள் அடங்கியுள்ளன.


"அகில இந்திய அளவில் பாஜக பலமான கட்சி. அதுபோல் தமிழகத்தில் அஇஅதிமுக பலமான கட்சி. 

தேர்தல் நெருங்கும் நேரத்தில் இது வெற்றிக் கூட்டணியாக அமையும்" ...இதுதான் ஜி.கே.வாசன் போட்டுள்ள ட்வீட்.. இதன் மூலம் அவர் உணர்த்துவது பாஜக அகில இந்திய அளவில் பெரிய ஆள் என்றால் அதிமுக தமிழ்நாட்டில் பெரிய ஆள். இருவரும் இணைந்தால்தான் பலம். அது இணைய வேண்டும் என்பதை சூசகமாக உணர்த்தியுள்ளார் வாசன்.


வாசனுக்குத் தெரிந்த இந்த உண்மை நிச்சயம் பாஜக, அதிமுகவினருக்கும் தெரியாமல் இருக்காது.. ஆனாலும் "இரண்டு தலைவர்களின்" ஈகோ காரணமாக முட்டி மோதிக் கொண்டிருக்கும் இந்தக் கட்சியினரின் பிரச்சினைகளை பாஜக மேலிடம் தீர்க்காவிட்டால் தேர்தலில் சுமூக உறவு இருக்க வாய்ப்பில்லை.. அது நிச்சயம் தேர்தல் முடிவுகளில் எதிரொலிக்கும் என்று அரசியல் நிபுணர்கள் அடித்துக் கூறுகிறார்கள்.

சமீபத்திய செய்திகள்

news

3 உதயசூரியன்.. ஒரு தனிச் சின்னம்.. ஆக மொத்தம் மதிமுகவுக்கு 4 சீட்.. 2 தொகுதிகள் குறைவு!

news

ஐபிஎல் 2026: முதல் கட்ட அட்டவணை வெளியீடு.. பெங்களூருவில் தொடக்க ஆட்டம்.. சென்னைக்கு எப்போ?

news

துபாய் விமான நிலையம் அருகே ஈரான் ட்ரோன் தாக்குதல்: இந்தியர் உட்பட 4 பேர் காயம்

news

தேமுதிக.,விற்கு விருத்தாச்சலம் தொகுதி ஒதுக்கீடு?: மீண்டும் ஒரு 'கேப்டன்' மேஜிக் நடக்குமா?

news

ஒரே நாளில் 60 வேட்பாளர்கள் தேர்வு...அதிரடி காட்டும் தவெக விஜய்

news

தமிழகத்தின் புதிய ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் நாளை பதவியேற்பு

news

பிரதமரின் தமிழக வருகைக்கு முன்பு தொகுதிப் பங்கீட்டை முடிக்க அதிமுக தீவிரம்

news

நாகர்கோவில் மற்றும் போத்தனூரிலிருந்து அம்ரித் பாரத் ரயில்கள்!

news

திருச்சி வருகிறார் பிரதமர் மோடி.. ரூ. 5650 கோடி மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார்

அதிகம் பார்க்கும் செய்திகள்