சென்னை: சென்னையில், நேற்று உயர்ந்திருந்த தங்கம் வெள்ளி விலை இன்று குறைந்துள்ளது. தங்கம் சவரனுக்கு இன்று ரூ.40 குறைந்துள்ளது. வெள்ளியின் விலையும் குறைந்தே உள்ளது.
கடந்த மே மாதம் ஒரு பவுன் ரூ.55.200க்கு விற்கப்பட்டது. இந்த புதிய உச்சம் அனைவருக்கு மிகுந்த ஆச்சிரியத்தை ஏற்படுத்தியது. இது தங்கத்தின் வரலாற்றிலேயே புதிய உச்சமாகும். அதன் பிறகு தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கங்கள் நிறைந்து காணப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த 12ம் தேதி ஒரு பவுன் ரூ.53,440க்கு விற்கப்பட்டது.
13ம் தேதி ஒரு பவுன் ரூ.53,280க்கும், 14ம் தேதி ஒரு பவுன் ரூ.53.200 என விலை குறைந்து இருந்தது.இந்தநிலையில் கடந்த 15ம் தேதி தங்கம் விலை மீண்டும் உயர்ந்தது. இவ்வாறாக தங்கம் விலை ஏறுவதும் இறங்குவதுமாகவே இருந்து வருகிறது. நேற்று குறைந்திருந்த தங்கம் இன்று மீண்டும் உயர்ந்தது. இந்த விலை ஏற்றம் வாடிக்கையாளர்களிடையே சற்று கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் இன்றைய தங்கம் விலை
இன்றைய தங்கத்தின் விலையை பொருத்தவரை, 1 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 6,695 ரூபாயாக உள்ளது. இது நேற்றைய விலையில் இருந்து 5 ரூபாய் குறைந்து சவரனுக்கு ரூ.40 ஆக குறைந்துள்ளது. 8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 53,560 ரூபாயாக உள்ளது.
1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 7,304 ரூபாயாக உள்ளது. 8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.58,432 ஆக உள்ளது. ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்துள்ள நிலையில் 24 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.48 குறைந்துள்ளது.
சென்னையில் வெள்ளி விலை
நேற்று உயர்ந்திருந்த வெள்ளி இன்று குறைந்துள்ளது. இன்று 1 கிராம் வெள்ளி விலை 0.40 காசுகள் குறைந்து ரூ.96க்கு விற்கப்படுகிறது. 8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 761.60 ஆக உள்ளது. நேற்று ஒரு கிலோ வெள்ளியின் விலைரூ.95,600 இருந்த விலை இன்று ரூ.96,000க்கு விற்கப்படுகிறது.
மேகதாது அணை விவகாரம்: ஆகஸ்ட் 3ம் தேதி கர்நாடக முதல்வருடன் பேச பெங்களூர் செல்கிறார் முதல்வர் விஜய்
சோனம் வாங்சுக்கின் 26 நாள் உண்ணாவிரதத்தை மத்திய அரசு முடிவுக்குக் கொண்டு வந்தது எப்படி?
'ஜனநாயகன்' படம் பார்த்தால் சுறுசுறுப்பு வரும்: சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தகவல்
ஆடி வெள்ளிக்கிழமையன்று.. அம்மனுக்கு மஞ்சள் காப்பு.. அம்மன் வழிபாடு சிறப்புகள்!
எம்.எஸ். தோனியின் சாதனையை முறியடித்த ஸ்ரேயஸ் ஐயர்.. டி20 போட்டிகளில் புதிய உலக சாதனை
சிங்காரத்தேனே தென்மதுர மானே !
நாங்கள் பிறந்தது யார் செய்த குற்றம்?
பாறையும் செடியும்!
கொடுப்பதற்கென்றே பிறப்பெடுத்தவள் நீ!
{{comments.comment}}