டெல்லி: 2024-25ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் தங்கம் மற்றும் வெள்ளி நகைகளுக்கு வரி குறைப்பு செய்யப்பட்டுள்ளது.
2024-25ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். தங்கம், வெள்ளிக்கு இறக்குமதி வரி 15 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாகவும், பிளாட்டினம் மீதான சுங்கவரி 15.4 சதவீதத்தில் இருந்து 6.5 சதவீதமாவும் குறைப்பு செய்யப்பட்டுள்ளது.
இந்தியர்கள் அதிக முதலீடு செய்வது தங்கம் தான். தங்கத்தின் அளவை வைத்து ஒருவரின் பொருளாதாரம் கணிக்கப்படுவதும் உண்டு. அத்தகைய நகைக்கு கடந்த நிதியாண்டில் சுங்கவரி 15 சதவீதம் வதிக்கப்பட்டிருந்தது. இந்த வரி இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் 6.5 சதவீதமமாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த வரி குறைப்பால், இந்தியாவிற்கு கடத்தல் மூலம் நாட்டில் தங்கம் நுழைவதை தடுக்க முடியும். அத்துடன் கள்ளச்சந்தை வர்த்தகமும் கட்டுப்படுத்தப்படும். இதன் வாயிலாக அரசுக்கும் வருவாய் அதிகரிக்கும்.
கடந்த சில மாதங்களாக நிலையற்று இருந்து வருகிறது தங்கம் விலை. தங்கத்தின் விலை உயர்வு எப்போது இல்லாத அளவிற்கு உயர்ந்து வருவதால் வாடிக்கையாளர்கள் கவலை அதிகரித்துள்ளது. இந்த நிலையில், மத்திய பட்ஜெட்டில் தங்கம் மற்றும் வெள்ளிக்கு சுங்கவரியை குறைந்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதனால் தங்கம் மற்றும் வெள்ளியின் விலையில் கணிசமாக குறைய வாய்ப்பு உள்ளது. தங்கத்தின் மீதான வரி குறைப்பு நகைக்கடை வைத்திருப்பவர்களுக்கு நேரடி பலன் கிடைக்கும். அத்துடன் இந்த வரி குறைப்பால் நகை நகை விற்பனையும் அதிகரிக்கும்.
சுங்க வரி குறைக்கப்படுவதால் தங்கம், வெள்ளி விலை குறைகிறது. தங்கம் நீண்ட கால முதலீட்டுக்கு ஏற்ற உலோகம் என்பதால், வரி குறைப்பால் தங்கத்தில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. தங்கம் வெள்ளி மட்டுமின்றி தாமிரம் மற்றும் உருக்கு இறக்குமதி வரிகளும் குறைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.செல்போன் மற்றும் சார்ஜர்களுக்கு சுங்கவரி 15% குறைப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால் செல்போன்களின் விலையும் குறைகிறது.
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}