சென்னை: தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. சென்னையில் விற்கப்படும் தங்கம் சவரனுக்கு ரூ.54000 க்கு நெருங்கி வருகிறது. இந்த விலை ஏற்றம் பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே உயர்ந்து வருகிறது.இந்த விலை உயர்வு நகை வாடிக்கையாளர்களை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. இன்றாவது குறையுமா? என்று வீடுகளில் விஷேசங்கள் வைத்துள்ளவர்கள் விலையை தினமும் கண்காணித்து வருகின்றனர். இருத்தும் நகை விலை குறைந்த பாடு இல்லை என்பதால், பொதுமக்கள் புலம்பிக்கொண்டே நகை வாங்கி வருகின்றனர்.
நகை விலை உயர்வு இன்னும் உயரவே வாய்ப்பு இருப்பதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருவதால், செல்வந்தர்கள் நகைகளை வாங்கி சேமிக்க தொடங்கியுள்ளனர். அதனால், நகைக்கடைகளில் கூட்டம் தற்பொழுதும் ஓரளவிற்கு வருவதாக நகைக்கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இன்றைய தங்கம் விலை...

இன்றைய தங்கத்தின் விலையை பொருத்தவரை, 1 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 6725 ரூபாயாக உள்ளது. இது நேற்றைய விலையில் இருந்து 20 ரூபாய் அதிகரித்து சவரனுக்கு ரூ.160 ஆக அதிகரித்துள்ளது. 8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 53,800 ரூபாயாக உள்ளது. 1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 7336 ரூபாயாக உள்ளது. 8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.58688 ஆக உள்ளது. ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்துள்ள நிலையில் 24 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.168 உயர்ந்துள்ளது.
வெள்ளி விலை...
என்ன ஒரு அதிசயம் வெள்ளி விலை சற்று குறைந்துள்ளது. வெள்ளியின் விலை நேற்றைய விலையை விட இன்று 0.50 காசுகள் குறைந்து இன்று 1 கிராம் வெள்ளி விலை 88.50 ரூபாயாக உள்ளது. 8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 708 ஆக உள்ளது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.500 குறைந்து ரூ.88,500 க்கு விற்கப்பட்டு வருகிறது.
LPG Shortage: கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு... சென்னை ஹாஸ்டல்களில் இனி காபி, டீ கிடையாது!
சிலிண்டர் தட்டுப்பாடு : அம்மா உணவகங்களை இயக்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
கரூர் வழக்கு...மார்ச் 15ம் தேதி ஆஜராக விஜய்க்கு மீண்டும் சிபிஐ சம்மன்
சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்குப் பற்றாக்குறை.. ஹோட்டல்களை மூடும் அபாயம்!
சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில் மஞ்சள் பிள்ளையார், வெற்றிலை பாக்கு
என்டிஏ கூட்டணியில் விஜய் உண்மையா?...ஒரே போடாக போட்ட அண்ணாமலை
கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ சம்மன்... மார்ச் 17-ல் ஆஜராவேன்- செந்தில் பாலாஜி அதிரடி
சமையல் எரிவாயு சிலிண்டர் உற்பத்தியை அதிகரிக்க.. மத்திய அரசு உத்தரவு
விஜய் குறித்த கருத்து...பாஜக செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் பதவி பறிப்பு
{{comments.comment}}