சென்னை: தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. சென்னையில் விற்கப்படும் தங்கம் சவரனுக்கு ரூ.54000 க்கு நெருங்கி வருகிறது. இந்த விலை ஏற்றம் பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே உயர்ந்து வருகிறது.இந்த விலை உயர்வு நகை வாடிக்கையாளர்களை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. இன்றாவது குறையுமா? என்று வீடுகளில் விஷேசங்கள் வைத்துள்ளவர்கள் விலையை தினமும் கண்காணித்து வருகின்றனர். இருத்தும் நகை விலை குறைந்த பாடு இல்லை என்பதால், பொதுமக்கள் புலம்பிக்கொண்டே நகை வாங்கி வருகின்றனர்.
நகை விலை உயர்வு இன்னும் உயரவே வாய்ப்பு இருப்பதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருவதால், செல்வந்தர்கள் நகைகளை வாங்கி சேமிக்க தொடங்கியுள்ளனர். அதனால், நகைக்கடைகளில் கூட்டம் தற்பொழுதும் ஓரளவிற்கு வருவதாக நகைக்கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இன்றைய தங்கம் விலை...
இன்றைய தங்கத்தின் விலையை பொருத்தவரை, 1 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 6725 ரூபாயாக உள்ளது. இது நேற்றைய விலையில் இருந்து 20 ரூபாய் அதிகரித்து சவரனுக்கு ரூ.160 ஆக அதிகரித்துள்ளது. 8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 53,800 ரூபாயாக உள்ளது. 1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 7336 ரூபாயாக உள்ளது. 8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.58688 ஆக உள்ளது. ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்துள்ள நிலையில் 24 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.168 உயர்ந்துள்ளது.
வெள்ளி விலை...
என்ன ஒரு அதிசயம் வெள்ளி விலை சற்று குறைந்துள்ளது. வெள்ளியின் விலை நேற்றைய விலையை விட இன்று 0.50 காசுகள் குறைந்து இன்று 1 கிராம் வெள்ளி விலை 88.50 ரூபாயாக உள்ளது. 8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 708 ஆக உள்ளது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.500 குறைந்து ரூ.88,500 க்கு விற்கப்பட்டு வருகிறது.
புஷ்பா 3 நிச்சயம் உண்டு.. துபாயில் வைத்து ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன சுகுமார்!
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. தொடங்கியது வாக்குப் பதிவு.. முதல் ஓட்டைப் போட்ட பிரதமர் மோடி
கடலும் கடலின் ஒரு துளியும்!
இளையராஜா போட்ட வழக்கு.. குட் பேட் அக்லி-யை ஓடிடி தளத்திலிருந்து நீக்குமா நெட்பிளிக்ஸ்?
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 09, 2025... நல்ல காலம் பிறக்குது
ஜிஎஸ்டி வரிக் குறைப்பால்.. அதிரடியாக விலையைக் குறைத்த ஆடி கார் நிறுவனம்.. 10% குறைந்தது
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
{{comments.comment}}