விடாமல் துரத்தும் விலை உயர்வு..  ஒரு சவரன் ரூ. 54,000த்தை நெருங்கியது தங்கம் விலை!

Apr 11, 2024,01:42 PM IST

சென்னை: தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. சென்னையில் விற்கப்படும் தங்கம் சவரனுக்கு ரூ.54000 க்கு நெருங்கி  வருகிறது. இந்த விலை ஏற்றம் பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே உயர்ந்து வருகிறது.இந்த விலை உயர்வு நகை வாடிக்கையாளர்களை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. இன்றாவது குறையுமா? என்று வீடுகளில் விஷேசங்கள் வைத்துள்ளவர்கள் விலையை தினமும் கண்காணித்து வருகின்றனர். இருத்தும் நகை விலை குறைந்த பாடு இல்லை என்பதால், பொதுமக்கள் புலம்பிக்கொண்டே நகை வாங்கி வருகின்றனர். 


நகை விலை உயர்வு இன்னும் உயரவே வாய்ப்பு இருப்பதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருவதால், செல்வந்தர்கள் நகைகளை வாங்கி சேமிக்க தொடங்கியுள்ளனர். அதனால், நகைக்கடைகளில் கூட்டம் தற்பொழுதும் ஓரளவிற்கு வருவதாக நகைக்கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.


இன்றைய தங்கம் விலை...




இன்றைய தங்கத்தின் விலையை பொருத்தவரை, 1 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 6725 ரூபாயாக உள்ளது. இது நேற்றைய விலையில் இருந்து 20 ரூபாய் அதிகரித்து சவரனுக்கு ரூ.160 ஆக அதிகரித்துள்ளது. 8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 53,800 ரூபாயாக உள்ளது. 1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 7336 ரூபாயாக உள்ளது. 8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.58688 ஆக உள்ளது. ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்துள்ள நிலையில் 24 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.168 உயர்ந்துள்ளது. 


வெள்ளி விலை...


என்ன ஒரு அதிசயம் வெள்ளி விலை சற்று குறைந்துள்ளது. வெள்ளியின் விலை நேற்றைய  விலையை விட இன்று  0.50 காசுகள் குறைந்து இன்று 1 கிராம் வெள்ளி விலை 88.50 ரூபாயாக உள்ளது. 8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 708 ஆக உள்ளது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.500 குறைந்து ரூ.88,500 க்கு விற்கப்பட்டு வருகிறது.

சமீபத்திய செய்திகள்

news

India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?

news

ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி

news

கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!

news

வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!

news

மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்

news

வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!

news

கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!

news

ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!

அதிகம் பார்க்கும் செய்திகள்