சென்னை: சென்னையில் இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது. சவரனுக்கு ரூ.160 உயர்ந்துள்ளது. இந்த விலை ஏற்றம் நகை பிரியர்களை சற்று கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.
புத்தாண்டு, பொங்கல் என பண்டிகை நாட்கள் வருவதினால் தங்கம் விலை சற்று உயர்ந்தே உள்ளது. இந்த விலை உயர்வு நகை வாங்குபவர்களை கலக்கத்தில் ஆழ்த்தினாலும், நகையின் தேவை இருப்பதினால் நகை வாங்கி வருகின்றனர். பண்டிகை காலம், முகூர்த்தம் வருவதால் நகை வாங்க நகை கடையில் கூட்டம் அதிகமாகவே இருந்து வருகிறது.
சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, சர்வதேச அரசியல் சூழல், நகையில் முதலீடு ஆகியவற்றின் காரணத்தினால் தங்கம் விலை ஏற்றம் கண்டுள்ளதாக நிபுணர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்த விலை உயர்வு பண்டிகையை முன்னிட்டு நகை வாங்குபவர்களிடையே சற்று கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய தங்கத்தின் விலையை பொருத்தவரை, ஒரு கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 5840 ரூபாயாக உள்ளது. இது நேற்றைய விலையில் இருந்து 160 ரூபாய் அதிகரித்துள்ளது. 8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 46720 ரூபாயாக உள்ளது. 8 கிராம் 24 கேரட்டின் விலை ரூ.50,968 ஆக உள்ளது.
தங்கம் விலை அதிகரித்துள்ள நிலையில், வெள்ளி விலை கிராம் ஒன்றிற்கு 0.30 காசுகள் அதிகரித்து ரூபாய் 79.50 காசாக உள்ளது. 8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 636 காசாக உள்ளது.
GenZ வேற லெவல்தான்.. நிஜ காதலியை விட.. ஏஐ காதலிதான் ரொம்ப பிடிச்சிருக்காம்!
Ladies Finger: வெண்டைக்காய் ஒரு விளையாட்டு பொருளா?
மனம் திறந்து பேசுதடா .. மாந்தோப்பில் கிளி இரண்டு!
Tamil Short Story: நிலாவின் மந்திரச் சொல்!
கற்ற கல்வி உதவுமா?
M Bharathi Poem: ஆட்சி!
அர்கியம் அமைப்பின் AI-ஆதார் செயலி அறிமுகம்
நிலவின் கவிதை!
எங்கே எனது கவிதை!
{{comments.comment}}