சென்னை: சென்னையில் இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது. சவரனுக்கு ரூ.160 உயர்ந்துள்ளது. இந்த விலை ஏற்றம் நகை பிரியர்களை சற்று கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.
புத்தாண்டு, பொங்கல் என பண்டிகை நாட்கள் வருவதினால் தங்கம் விலை சற்று உயர்ந்தே உள்ளது. இந்த விலை உயர்வு நகை வாங்குபவர்களை கலக்கத்தில் ஆழ்த்தினாலும், நகையின் தேவை இருப்பதினால் நகை வாங்கி வருகின்றனர். பண்டிகை காலம், முகூர்த்தம் வருவதால் நகை வாங்க நகை கடையில் கூட்டம் அதிகமாகவே இருந்து வருகிறது.
சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, சர்வதேச அரசியல் சூழல், நகையில் முதலீடு ஆகியவற்றின் காரணத்தினால் தங்கம் விலை ஏற்றம் கண்டுள்ளதாக நிபுணர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்த விலை உயர்வு பண்டிகையை முன்னிட்டு நகை வாங்குபவர்களிடையே சற்று கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய தங்கத்தின் விலையை பொருத்தவரை, ஒரு கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 5840 ரூபாயாக உள்ளது. இது நேற்றைய விலையில் இருந்து 160 ரூபாய் அதிகரித்துள்ளது. 8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 46720 ரூபாயாக உள்ளது. 8 கிராம் 24 கேரட்டின் விலை ரூ.50,968 ஆக உள்ளது.
தங்கம் விலை அதிகரித்துள்ள நிலையில், வெள்ளி விலை கிராம் ஒன்றிற்கு 0.30 காசுகள் அதிகரித்து ரூபாய் 79.50 காசாக உள்ளது. 8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 636 காசாக உள்ளது.
என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!
தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?
பூனைக் கண்ணை மூடிக்கொண்டுவிட்டால் உலகம் இருண்டுவிடுமா என்ன? அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி!
பாமக ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு: அன்புமணி அறிவிப்பு!
ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி... உறங்கி கோட்டை விட்ட தமிழக அரசு: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!
குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக முதலில் தனது முதுகை திரும்பி பார்க்க வேண்டும் : அமைச்சர் சேகர்பாபு
டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க
11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்
ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு
{{comments.comment}}