சென்னை: தங்கம் விலை வரலாறு காணாத வகையில் உச்சத்தை தொட்டுக் கொண்டிருக்கிறது. இன்று சவரனுக்கு ரூ.180 உயர்ந்துள்ளது. இந்த விலை ஏற்றத்தால் நகைப்பிரியர்கள் தற்போது அதிர்ச்சி அடைந்துள்ளனர். சாமானியர்களை இந்த நகை விலை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த சில மாதங்களாகவே நகை விலை உயர்ந்து வருகிறது. இந்த விலை உயர்வால் நடுத்தர மற்றும் சாமானிய மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ் கலாச்சாரத்தில் முக்கிய பங்கு வகித்து வருகிறது தங்கம். எந்த விஷேசம் என்றாலும் சிறிதளவாவது நகையின் பயன்பாடு இருந்து வருகிறது. இது சங்க காலம் முதல் இன்றைய நவீன காலம் வரை நடைமுறையில் இருந்து வருவது நாம் அனைவரும் அறிந்ததே. அப்படிப்பட்ட நகை சமீபகாலத்தில் வரலாறு காணாத உச்சத்தை தொட்டுள்ளது. இது நடுத்தர மக்கள் மற்றும் சாமானி மக்களை பெரிதும் பாதிப்படைய செய்துள்ளது.
நகை விலை ஒரு நாள் ஏற்றம், ஒரு நாள் இறக்கம் என்று இருந்தாலும், ஒட்டுமொத்தமாக பார்த்தால் நகை விலை உயரத்தான் செய்து வருகிறது. நகை விலை குறைவு என்பது ஒரு கண் துடைப்பு போலவே இருந்து வருகிறது. இந்த நகை விலை உயர்வால் சாதாரண மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். வரும் காலத்தில் தாலிக்கு தங்கம் வாங்குவது என்பதும் குதிரை கொம்பாக மாறும் நிலைக்கு வந்துள்ளது.
இன்றைய தங்கத்தின் விலையை பொருத்தவரை, 1 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 6205 ரூபாயாக உள்ளது. இது நேற்றைய விலையில் இருந்து 20 ரூபாய் அதிகரித்து சவரனுக்கு ரூ.180 ஆக அதிகரித்துள்ளது. 8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 49,640 ரூபாயாக உள்ளது. 1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 6769 ரூபாயாக உள்ளது. 8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.54152 ஆக உள்ளது. ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.180 உயர்ந்துள்ள நிலையில் 24 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.196 உயர்ந்துள்ளது.
தங்கம் மட்டுமா உயர்ந்துள்ளது. வெள்ளியின் விலையும் உயர்ந்தே தான் உள்ளது. வெள்ளியின் விலை நேற்றைய விலையை விட இன்று 0.30 காசுகள் உயர்ந்து இன்று 1 கிராம் வெள்ளி விலை 80.80 காசுகளாக உள்ளது. 8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 646.40 ஆக உள்ளது.
தங்கம் விலை ஏற்றம் கண்டு வருவதினால் முதலீட்டாளர்களும் தங்கத்தின் மீது அதிகளவில் முதலீடு செய்யத்தொடங்கியுள்ளனர். தங்கத்தின் தேவை அதிகரிப்பதன் காரணமாக, விலை ஏற்றம் கண்டுள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, சர்வதேச அரசியல் சூழல், நகையில் முதலீடு ஆகியவற்றின் காரணத்தாலும் தங்கம் விலை ஏற்றம் கண்டுள்ளதாக நிபுணர்கள் தெரிவித்து வருகின்றனர்.
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}