சென்னை : கடந்த ஒரு மாதமாக இறங்கிக் கொண்டிருந்த தங்கம் விலை தற்போது மீண்டும் உயரத் துவங்கி உள்ளது.
இன்று கிராமிற்கு ரூ.43 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5415 க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் ரூபாய் 344 உயர்ந்துள்ளது. தங்கம் விலை மீண்டும் உயர்ந்து வருவதால் வாடிக்கையாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.
தங்கம் விலை செப்டம்பர் மாதத்தில் சரிவுடனேயே காணப்பட்டது. அக்டோபர் மாத ஆரம்பத்திலும் குறைந்தே இருந்தது. இந்த நிலை இன்று மாறி சற்று உயரத் தொடங்கி உள்ளது. இந்த விலையேற்றம் வாடிக்கையாளர்களை சிறிது கவலையில் ஆழ்த்தியுள்ளது. பண்டிகை கால, திருமண சீசன் துவங்க உள்ள நிலையில் தங்கம் விலை மீண்டும் உயர்ந்து வருகிறது.
இன்றைய தங்கத்தின் இன்றைய விலை நிலவரம் இதுதான். 1 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 5415 ரூபாயாக உள்ளது. இது நேற்றைய விலையில் இருந்து 43 ரூபாய் அதிகரித்துள்ளது. 8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 43320 ரூபாயாக உள்ளது. 1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 5907 ரூபாயாக உள்ளது. இது நேற்றைய விலையில் இருந்து 47 ரூபாய் அதிகமாகும்.
தங்கம் விலை உயர்ந்துள்ள நிலையில், வெள்ளியின் விலையும் உயர்ந்தே உள்ளது. 1 கிராம் வெள்ளி விலை ரூபாய்.72.60 காசாக உள்ளது. 8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 580.80 காசாக உள்ளது.
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}