சென்னை : கடந்த ஒரு மாதமாக இறங்கிக் கொண்டிருந்த தங்கம் விலை தற்போது மீண்டும் உயரத் துவங்கி உள்ளது.
இன்று கிராமிற்கு ரூ.43 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5415 க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் ரூபாய் 344 உயர்ந்துள்ளது. தங்கம் விலை மீண்டும் உயர்ந்து வருவதால் வாடிக்கையாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.

தங்கம் விலை செப்டம்பர் மாதத்தில் சரிவுடனேயே காணப்பட்டது. அக்டோபர் மாத ஆரம்பத்திலும் குறைந்தே இருந்தது. இந்த நிலை இன்று மாறி சற்று உயரத் தொடங்கி உள்ளது. இந்த விலையேற்றம் வாடிக்கையாளர்களை சிறிது கவலையில் ஆழ்த்தியுள்ளது. பண்டிகை கால, திருமண சீசன் துவங்க உள்ள நிலையில் தங்கம் விலை மீண்டும் உயர்ந்து வருகிறது.
இன்றைய தங்கத்தின் இன்றைய விலை நிலவரம் இதுதான். 1 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 5415 ரூபாயாக உள்ளது. இது நேற்றைய விலையில் இருந்து 43 ரூபாய் அதிகரித்துள்ளது. 8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 43320 ரூபாயாக உள்ளது. 1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 5907 ரூபாயாக உள்ளது. இது நேற்றைய விலையில் இருந்து 47 ரூபாய் அதிகமாகும்.
தங்கம் விலை உயர்ந்துள்ள நிலையில், வெள்ளியின் விலையும் உயர்ந்தே உள்ளது. 1 கிராம் வெள்ளி விலை ரூபாய்.72.60 காசாக உள்ளது. 8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 580.80 காசாக உள்ளது.
எந்த ஷா வந்தாலென்ன?.. தமிழ்நாடு என்றைக்குமே டெல்லிக்கு Out of Control தான்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
கூட்டணி குறித்த முடிவுக்கு இபிஎஸ்சுக்கே அதிகாரம்..அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்
2026 சட்டசபைத் தேர்தலுக்கு முன் கூட்டணி விரிவாக்கம்.. ராஜ்யசபா தேர்தலை உற்று நோக்கும் தி.மு.க
விஜய்யின் பேச்சு அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது:புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்
தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 7 நாட்கள் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கும் பொங்கல் பரிசு: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
ஆஸ்திரேலியாவில்.. 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகத் தடை.. எந்தெந்த செயலிகளுக்கு ஆப்பு?
தவெகவுடன் கூட்டணி வருமா?.. பதிலளிக்காமல் தவிர்த்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி
12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வரும் அப்பாஸ்.. படம் பேரு என்ன தெரியுமா?
{{comments.comment}}