சென்னை: அஜித் நடிப்பில் வெளியான குட் பேட் அக்லி திரைப்படம், கடந்த இரண்டு வாரங்களில் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனில் ரூபாய் 172.3 கோடி வசூலை வாரி குவிக்குள்ளது என அப்பட தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
நடிகர் அஜித் மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் திரிஷா, பிரபு, அர்ஜுன் தாஸ் சிம்ரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள குட் பேட் அக்லி திரைப்படம் கடந்த ஏப்ரல் பத்தாம் தேதி வெளியானது. இப்படம் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளது. அதிலும் இப்படத்தின் இடைஇடையே வரும் அஜித் குறித்த ப்ரோமோஷன் காட்சிகள் அஜித் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதுமட்டுமல்லாமல் இப்படத்தில் அமைந்துள்ள 90ஸ் பாடல்கள் இப்படத்திற்கு மேலும் மெருகூட்டி உள்ளது. குறிப்பாக இப்படத்தில் வரும் தொட்டு தொட்டு பேசும் சுல்தானா பாடல் இப்போதும் ட்ரெண்டிங்கில் முதலிடத்தை பிடித்து உலா வருகிறது.

அதே சமயத்தில் இன்றைய காலகட்டத்தில் முகம் சுளிக்கும் வகையில் மது, போதை ஆகியவற்றை மையமாகக் கொண்டு படங்கள் வெளியாகின்றன. இது இன்றைய இளைஞர்களின் மனதை சீர்குலைப்பதாக கருத்துக்கள் எழுந்து வருகிறது. ஆனால் இப்படமோ மது போதை உள்ளிட்டவைகளை தவிர்த்து உருவாகியுள்ளதால் ரசிகர்களிடையே ஆதரவு எழுந்துள்ளது.
இந்த நிலையில் குட் பேட் அக்லி திரைப்படம் வெளியாகி இரண்டு வாரம் ஆகி உள்ள நிலையில், தியேட்டர்களில் வெற்றி நடை போட்டு வருகிறது. கடந்த 14 நாட்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இப்படம், உலகளவில் ரூ. 248 கோடி வசூல் செய்துள்ளது.
குறிப்பாக தமிழ்நாட்டில் குட் பேட் அக்லி திரைப்படம் வெளியான இரண்டே வாரங்களில் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனில் ₹ 172.3 கோடி வசூலில் சாதனை படைத்துள்ளதாக அப்பட தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் குட் பேட் அக்லியின் வெற்றியை தொடர்ந்து, நடிகர் அஜித் யாருடைய படத்தில் நடிப்பார் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!
கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!
23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!
வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்
அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!
ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!
ஆந்திராவில் பேருந்து விபத்து..20 பேர் பலி..11 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:மாவட்ட ஆட்சியர் தகவல்!
விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சி.. அடுத்தடுத்து டக் அவுட் ஆனால்.. ரவி சாஸ்திரி வார்னிங்!
தமிழ்நாட்டில் நாளை.. அரசு அலுவலகங்கள்.. பள்ளிகள் இயங்கும்.. மாநில அறிவிப்பு
{{comments.comment}}