சென்னை: இயேசுநாதர் உயிர் நீத்த தினத்தை புனித வெள்ளியாக அனுஷ்டித்தும், மீண்டும் உயிர்த்தெழுந்த தினத்தை ஈஸ்டர் சன்டேவாகவும் கிறிஸ்தவர்கள் கொண்டாடி வருகின்றனர். இன்று புனித வெள்ளியை முன்னிட்டு கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.
புனித வெள்ளி சந்திர நாட்காட்டியின் படி கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டிற்கான புனித வெள்ளி மார்ச் 29ஆம் தேதி இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. பெரும்பாலான மக்கள் இந்த நாளை மகிழ்ச்சியான நாள் என்று நினைக்கின்றனர். ஏனென்றால், அதில் புனிதம் என்ற வார்த்தை உள்ளதால் தான். ஆனால், இது ஒரு துக்க நாள். இயேசுநாதர் உயிர் நீத்த தினம் என்பதால் இதனை கிறிஸ்தவர்கள் துக்க நாளாக கருதுகின்றனர்.

புனித வெள்ளி நாளில் கத்தோலிக்கர்கள் இறைச்சி சாப்பிடமாட்டார்கள். விரதம் இருப்பார்கள். தங்கள் பாவங்களை நீக்குவதற்காக இயேசு கிறிஸ்து தன்னை சிலுவையில் அறைந்து கொண்டு உயிர் நீத்ததாகவும் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் கருதுகிறார்கள். ஏசு உயிர் நீத்ததாக கூறப்படும் வெள்ளி புனித வெள்ளியாக அனுசரிக்கப்படுகிறது. தாங்கள் செய்த பாவங்களுக்காக சிலுவை சுமந்து இயேசு நாதர் பட்ட பாடுகளை காண முடியாத மக்கள் இனி பாவங்களை செய்யப் போவதில்லை என இந்த புனித வெள்ளியில் ஒரு உறுதி ஏற்றுக் கொண்டதாக கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் கூறுகிறார்கள்.
இந்நாளில் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் தங்களை தூய்மையாக வைத்துக் கொள்வதையும், ஒரு நாள் முழுக்க உண்ணா நோன்பிருப்பதையும், குறிக்கும் ஒரு சந்தி சுத்த போசனத்தை கடைபிடிக்க விரும்புவதாக கூறுகிறார்கள். இயேசு உயிர் நீத்ததாக கருதப்படும் நாளில் இருந்து மூன்றாம் நாள் ஈஸ்டர் தினம் கொண்டாடப்படுகிறது. இயேசு சிலுவையில் அறையப்பட்ட நாள் வெள்ளிக்கிழமை என்று கூறப்படுகிறது. மீண்டும் இயேசு ஞாயிற்றுக்கிழமை உயிர்த்தெழுந்தார் என்பது நம்பிக்கை.
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!
{{comments.comment}}