"நாகை முதல் சென்னை வரை .. வச்சு செய்யப் போகுது மழை".. தமிழ்நாடு வெதர்மேன் அலர்ட்!

Nov 13, 2023,03:17 PM IST

சென்னை: நாகப்பட்டனம் முதல் சென்னை வரை கடலோரத்தில் மிக சிறப்பான மழை பெய்யவுள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் நல்ல செய்தியைக் கூறியுள்ளார்.


இன்று இரவு தொடங்கி 15ம் தேதி வரை சிறப்பான மழை காத்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். வட கிழக்குப் பருவமழையில் இதுவரை சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் பெரிய அளவிலான ஸ்பெல் எதுவும் இல்லை. அதேசமயம், தெற்கு, மேற்கு மற்றும் மத்திய மாவட்டங்களில் ஓரளவு நல்ல மழை பெய்துள்ளது.


இந்த நிலையில் வட கடலோர மாவட்டங்களில் நிலவும் பற்றாக்குறையை இப்போது பெய்யப் போகும் மழை தீர்த்து வைத்து விடும் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் போட்டுள்ள பதிவில், 13ம் தேதி இரவு முதல்வர் நவம்பர் 15ம் தேதி வரை நல்ல மழை பெய்யப் போகிறது. நாகை முதல் சென்னை வரை மழை வச்சு செய்யப் போகுது. நாகை, காரைக்கால், கடலூர், புதுச்சேரி, சென்னை மாவட்டங்களில் இதுவரை இருந்த பற்றாக்குறை மழை முடிவுக்கு வரப் போகிறது.




குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியால் இந்தப் பகுதிகளில் கூடுதல் மழைக்கு வாய்ப்புள்ளது. காரைக்கால், நாகை இடையே ஏற்கனவே மழை தொடங்கி விட்டது என்று கூறியுள்ளார் வெதர்மேன்.

சமீபத்திய செய்திகள்

news

மீண்டும் ஒரு விமான விபத்து... 5 குழந்தைகள் உட்பட 49 பேர் பலி!

news

குடையை எடுத்து வச்சுக்கோங்க... 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு... வானிலை மையம்!

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் நலமாக இருக்கிறார்.. 2 நாளில் டிஸ்சார்ஜ்.. மருத்துவமனை அறிக்கை

news

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. பாஜகவைச் சேர்ந்தவரே வேட்பாளராக இருப்பார் என தகவல்!

news

எஸ் பாங்க் கடன் மோசடி.. அனில் அம்பானிக்கு சொந்தமான 50 இடங்களில் ரெய்டு

news

குழந்தைகளை கொன்ற வழக்கு: குன்றத்தூர் அபிராமிக்கு ஆயுள் தண்டனை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

news

பாமக கட்சி பெயர், கொடியை டாக்டர் அன்புமணி பயன்படுத்தக் கூடாது.. டாக்டர் ராமதாஸ் உத்தரவு

news

தொடர் உயர்வில் இருந்த தங்கம் திடீர் சரிவு... அதுவும் சவரனுக்கு ரூ.1,000 குறைவு!

news

Aadi Amavasai: அமாவாசை தினத்தில் சமைக்க வேண்டிய காய்கறிகள் என்ன?

அதிகம் பார்க்கும் செய்திகள்