"நாகை முதல் சென்னை வரை .. வச்சு செய்யப் போகுது மழை".. தமிழ்நாடு வெதர்மேன் அலர்ட்!

Nov 13, 2023,03:17 PM IST

சென்னை: நாகப்பட்டனம் முதல் சென்னை வரை கடலோரத்தில் மிக சிறப்பான மழை பெய்யவுள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் நல்ல செய்தியைக் கூறியுள்ளார்.


இன்று இரவு தொடங்கி 15ம் தேதி வரை சிறப்பான மழை காத்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். வட கிழக்குப் பருவமழையில் இதுவரை சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் பெரிய அளவிலான ஸ்பெல் எதுவும் இல்லை. அதேசமயம், தெற்கு, மேற்கு மற்றும் மத்திய மாவட்டங்களில் ஓரளவு நல்ல மழை பெய்துள்ளது.


இந்த நிலையில் வட கடலோர மாவட்டங்களில் நிலவும் பற்றாக்குறையை இப்போது பெய்யப் போகும் மழை தீர்த்து வைத்து விடும் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் போட்டுள்ள பதிவில், 13ம் தேதி இரவு முதல்வர் நவம்பர் 15ம் தேதி வரை நல்ல மழை பெய்யப் போகிறது. நாகை முதல் சென்னை வரை மழை வச்சு செய்யப் போகுது. நாகை, காரைக்கால், கடலூர், புதுச்சேரி, சென்னை மாவட்டங்களில் இதுவரை இருந்த பற்றாக்குறை மழை முடிவுக்கு வரப் போகிறது.




குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியால் இந்தப் பகுதிகளில் கூடுதல் மழைக்கு வாய்ப்புள்ளது. காரைக்கால், நாகை இடையே ஏற்கனவே மழை தொடங்கி விட்டது என்று கூறியுள்ளார் வெதர்மேன்.

சமீபத்திய செய்திகள்

news

Tamil Nadu Assembly elections: தமிழ்நாட்டில் 84.29% வாக்குப் பதிவு.. கரூர் மாவட்டத்தில்தான் உச்சம்!

news

தமிழ்நாடு முழுக்க வாக்குப் பதிவு விகிதம் அதிகரிக்க என்ன காரணம்.. சென்னையும் கலக்குதே!

news

வாக்குப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் அதிகரிங்க.. தேர்தல் ஆணையத்துக்கு விஜய் கோரிக்கை

news

முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, விஜய், ரஜினி, கமல், அஜீத் ஓட்டுப் போட்டாச்சு!

news

சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்வு? - வதந்தி என.. மத்திய அரசு விளக்கம்!

news

விதைக்குள் காடு விரும்பி அதை நாடு!

news

நெருங்குதலும் விலகலும்

news

Dr Latha poems: அமைதியே என் ஆயுதம்.. நான் என உறுதி கொள்!

news

English Language Day: வில்லியம் ஷேக்ஸ்பியரை நினைவு கூர்ந்து Thanks சொல்வோம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்