சென்னை: நாகப்பட்டனம் முதல் சென்னை வரை கடலோரத்தில் மிக சிறப்பான மழை பெய்யவுள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் நல்ல செய்தியைக் கூறியுள்ளார்.
இன்று இரவு தொடங்கி 15ம் தேதி வரை சிறப்பான மழை காத்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். வட கிழக்குப் பருவமழையில் இதுவரை சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் பெரிய அளவிலான ஸ்பெல் எதுவும் இல்லை. அதேசமயம், தெற்கு, மேற்கு மற்றும் மத்திய மாவட்டங்களில் ஓரளவு நல்ல மழை பெய்துள்ளது.
இந்த நிலையில் வட கடலோர மாவட்டங்களில் நிலவும் பற்றாக்குறையை இப்போது பெய்யப் போகும் மழை தீர்த்து வைத்து விடும் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் போட்டுள்ள பதிவில், 13ம் தேதி இரவு முதல்வர் நவம்பர் 15ம் தேதி வரை நல்ல மழை பெய்யப் போகிறது. நாகை முதல் சென்னை வரை மழை வச்சு செய்யப் போகுது. நாகை, காரைக்கால், கடலூர், புதுச்சேரி, சென்னை மாவட்டங்களில் இதுவரை இருந்த பற்றாக்குறை மழை முடிவுக்கு வரப் போகிறது.

குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியால் இந்தப் பகுதிகளில் கூடுதல் மழைக்கு வாய்ப்புள்ளது. காரைக்கால், நாகை இடையே ஏற்கனவே மழை தொடங்கி விட்டது என்று கூறியுள்ளார் வெதர்மேன்.
திமுகவின் சரமாரி தாக்குதலிலிருந்து தப்ப.. அதிமுக, பாஜகவுடன் ஐக்கியமாவாரா தவெக விஜய்?
TVK Vijay: தவெக தலைவர் விஜய்யுடன்.. பவன் கல்யாண் பேசி வருகிறாரா.. உண்மை என்ன?
விஜய்க்கு மீண்டும் சிபிஐ சம்மன்...நாளை தவெக வேட்பாளர் நேர்காணல் நடப்பதில் சிக்கல்
குந்தவை த்ரிஷா பற்றி சர்ச்சை கருத்து...மன்னிப்பு கேட்டார் நடிகர் பார்த்திபன்
அமெரிக்காவுலதாங்க அதுக்குப் பேரு இறைச்சி பந்து.. நம்ம ஊர்ல என்ன தெரியுமா?
கேஸ் சிலிண்டர் புக் பண்ண போறீங்களா?...இந்த புதிய விதிகளை தெரிஞ்சுக்க மறந்துடாதீங்க
தமிழக ராஜ்யசபா தேர்தல்... 6 வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்வு
ஈரான் போர் பதற்றம்..எதிர்க்கட்சிகள் அமளி...வெளியுறவுத்துறை அமைச்சர் விளக்கம்
மார்ச் 12ல் தமிழகம் தழுவிய போராட்டம்...தவெக அறிவிப்பு
{{comments.comment}}