மணிப்பூர் முதல்வரை ஏன் இன்னும் டிஸ்மிஸ் செய்யவில்லை .. காங்கிரஸ் கேள்வி

Aug 08, 2023,01:32 PM IST
டெல்லி: மணிப்பூரில் கலவரம் மிகப் பெரிய அளவில் வெடித்தும் இதுவரை ஏன் அந்த மாநில முதல்வரை டிஸ்மிஸ் செய்யவில்லை என்று காங்கிரஸ் கட்சி கேட்டுள்ளது.

மணிப்பூர் விவகாரம் தொடர்பாக லோக்சபாவில் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மீதான விவாதம் இன்று தொடங்கியது.

முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி சார்பில் முதலில் விவாதத்தைத் தொடங்க சபாநாயகர் ஓம் பிர்லா அழைப்பு விடுத்தார். இதையடுத்து காங்கிரஸ் இளம் எம்பி கெளரவ் கோகோய் முதலில் விவாதத்தைத் தொடங்கிப் பேசினார்.

அவரது பேச்சின்போது பிரதமர் நரேந்திர மோடிக்கு 3 கேள்விகளை முன்வைத்தார்.

1. ஏன் பிரதமர் நரேந்திர மோடி இதுவரை மணிப்பூருக்குச் செல்லவில்லை?
2. மணிப்பூர்  மாநிலமே பற்றி எரிந்து வந்த நிலையில் அதுகுறித்துக் கருத்து தெரிவிக்க 80 நாட்களை பிரதமர் மோடி எடுத்துக் கொண்டது ஏன்?
3. மணிப்பூர் முதல்வரை ஏன் இதுவரை டிஸ்மிஸ் செய்யவில்லை?

தொடர்ந்து கோகோய் பேசுகையில், நாடாளுமன்றத்தில் பேசுவதில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி மெளன விரதம் கடைப்பிடித்து வருகிறார். இதனால்தான் நாங்கள் அவரது மெளனத்தை உடைக்க நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தைக் கொண்டு வர நேரிட்டது.  எங்களது கேள்விகளுக்கு பிரதமர் பதிலளிக்க வேண்டும் என்றார் அவர்.

சமீபத்திய செய்திகள்

news

அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!

news

கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!

news

23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்

news

அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!

news

ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!

news

ஆந்திராவில் பேருந்து விபத்து..20 பேர் பலி..11 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:மாவட்ட ஆட்சியர் தகவல்!

news

விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சி.. அடுத்தடுத்து டக் அவுட் ஆனால்.. ரவி சாஸ்திரி வார்னிங்!

news

தமிழ்நாட்டில் நாளை.. அரசு அலுவலகங்கள்.. பள்ளிகள் இயங்கும்.. மாநில அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்