அரசு கல்லூரிகளில்.. 4000 உதவி பேராசிரியர் பணியிடங்கள்.. தேர்வு தேதி அறிவிச்சாச்சு.. சூப்பர் நியூஸ்!

Mar 14, 2024,06:09 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 4000 பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.


இந்தத் தேர்வில் கலந்து கொள்வதற்கு, மார்ச் 28ஆம் தேதி முதல் ஏப்ரல் 29ஆம் தேதி வரை ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம்.




கடந்த 2012 ஆம் ஆண்டு ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வுகளை தமிழக அரசு நடைமுறைப்படுத்தியது. அப்போதிலிருந்து அரசு மற்றும் அரசு சார்ந்த கல்லூரிகளில் பேராசிரியருக்கான தகுதி தேர்வு நடத்தப்பட்டு தேர்வில் தேர்ச்சி அடைந்தவர்கள் அரசு கல்லூரிகளில் பணியமர்த்தபடுவார்கள். இதுவரை அரசு சார்ந்த கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், அரசு பாலிடெக்னிக் மற்றும் சட்டக் கல்லூரிகள் ஆகியவற்றில் உதவி பேராசிரியருக்கான பணியிடங்கள் 4000 வரை நிரப்பப்படாமல் உள்ளன.


இந்த நிலையில் தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலி இடங்களை நிரப்புவதற்கான தேர்வு இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில்  569 உதவி பேராசிரியர், 656 ஆங்கில உதவி பேராசிரியர் உட்பட 4000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மார்ச் 28ஆம் தேதி முதல் ஏப்ரல் 29 ஆம் தேதி வரை, www.trb.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம். இந்த 4000 பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு வரும் ஆகஸ்ட் 4ஆம் தேதி நடைபெறும் எனவும் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.


இதில் விண்ணப்பிக்க விரும்புபவர்கள், முதுகலை பட்டத்தில் குறைந்தது 55 மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். செட் அல்லது நெட் தேர்வில் ஏதாவது ஒரு தேர்வில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

இலந்தை பழப் பாட்டி (குட்டிக் கதை)

news

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த திமுக முன்வர வேண்டும்: அன்புமணி ராமதாஸ்!

news

தொடர்ந்து குறைந்து வரும் தங்கம் விலை... இன்றைக்கு எவ்வளவு குறைவு தெரியுமா?

news

நீரில் மூழ்கிய நெற்பயிர்களுக்கு உடனடி நிவாரணம் வேண்டும்: நயினார் நாகேந்திரன்

news

அண்ணன் எங்க அண்ணன்.. கல்வி மாபெரும் ஆயதம்.. அதுவே உயர்த்தும்.. இது ஒரு உண்மைக் கதை!

news

பால் காவடி பன்னீர் காவடி புஷ்பக் காவடி.. முருகப்பெருமானுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?

news

இந்த பிரபஞ்சம் நீயே (You are the Universe )

news

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டால்.. எங்களை அழையுங்கள்.. உதவி எண்களை அறிவித்தார் சீமான்

news

ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..9 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்: வானிலை மையம்

அதிகம் பார்க்கும் செய்திகள்