அரசு கல்லூரிகளில்.. 4000 உதவி பேராசிரியர் பணியிடங்கள்.. தேர்வு தேதி அறிவிச்சாச்சு.. சூப்பர் நியூஸ்!

Mar 14, 2024,06:09 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 4000 பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.


இந்தத் தேர்வில் கலந்து கொள்வதற்கு, மார்ச் 28ஆம் தேதி முதல் ஏப்ரல் 29ஆம் தேதி வரை ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம்.




கடந்த 2012 ஆம் ஆண்டு ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வுகளை தமிழக அரசு நடைமுறைப்படுத்தியது. அப்போதிலிருந்து அரசு மற்றும் அரசு சார்ந்த கல்லூரிகளில் பேராசிரியருக்கான தகுதி தேர்வு நடத்தப்பட்டு தேர்வில் தேர்ச்சி அடைந்தவர்கள் அரசு கல்லூரிகளில் பணியமர்த்தபடுவார்கள். இதுவரை அரசு சார்ந்த கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், அரசு பாலிடெக்னிக் மற்றும் சட்டக் கல்லூரிகள் ஆகியவற்றில் உதவி பேராசிரியருக்கான பணியிடங்கள் 4000 வரை நிரப்பப்படாமல் உள்ளன.


இந்த நிலையில் தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலி இடங்களை நிரப்புவதற்கான தேர்வு இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில்  569 உதவி பேராசிரியர், 656 ஆங்கில உதவி பேராசிரியர் உட்பட 4000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மார்ச் 28ஆம் தேதி முதல் ஏப்ரல் 29 ஆம் தேதி வரை, www.trb.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம். இந்த 4000 பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு வரும் ஆகஸ்ட் 4ஆம் தேதி நடைபெறும் எனவும் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.


இதில் விண்ணப்பிக்க விரும்புபவர்கள், முதுகலை பட்டத்தில் குறைந்தது 55 மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். செட் அல்லது நெட் தேர்வில் ஏதாவது ஒரு தேர்வில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

கல்வி எனும் ஆயுதத்தால் அனைத்தையும் தகர்த்தெறிந்த அறிவுச்சூரியன்தான் அம்பேத்கர்:முதல்வர் முக ஸ்டாலின்

news

எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும்?. நயினார் நாகேந்திரனுக்கு கனிமொழி கேள்வி!

news

உலகமே உற்றுப் பார்த்த மோடி - புடின் சந்திப்பு.. அசைந்து கொடுக்குமா அமெரிக்கா?

news

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை நேரில் பார்த்தால்.. 21 தலைமுறைக்கு முக்தி கிடைக்குமாம்!

news

Festival Trains annoounced.. சொந்த ஊருக்குப் போக கவலையில்லை.. ஸ்பெஷல் ரயில்கள் அறிவிப்பு!

news

11ம் வகுப்பு மாணவர்கள் தாக்கியதில்... +2ம் வகுப்பு மாணவன் பலி... 15 மாணவர்கள் கைது!

news

கீரை சாப்பிடாத குழந்தைகளும் விரும்பி உண்ணும் கீரை தொக்கு.. லஞ்சுக்கு சூப்பர் ரெசிப்பி!

news

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் கும்பாபிஷேகம்.. 149 பள்ளிகளுக்கு 8ம் தேதி விடுமுறை

news

இடியாப்பம்.. நீல கலர் ஜிங்குச்சா.. கலர் கலரா இடியாப்பம் செஞ்சு சாப்பிடலாமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்