சாலையில் கழன்று ஓடிய அரசுப் பேருந்து சக்கரங்கள்: 3 மாணவர்கள் படுகாயம்

Jun 20, 2025,12:34 PM IST

கடையநல்லூர்: அரசு பேருந்தின் அச்சு முறிந்து பின் பக்க சக்கரங்கள் திடீரென கழன்று ஓடியது. இதனால் பேருந்து தரையில் மோதியதில் 3 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்.


மதுரை டூ குற்றாலம் இடையே அரசுப் பேருந்து, தென்காசி கடைநல்லூர் அருகே இடைகால் என்ற பகுதியில் விபத்துக்குள்ளாகியது. இந்த பேருந்தை சங்கரன் என்ற 55 வயதுடையவர் ஓட்டிவந்துள்ளார். இந்த பேருந்து மதுரை டூ குற்றாலம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது திடீர் என பேருந்தின் அச்சு முறிந்து இரண்டு சக்கரங்கள் மட்டும் தனியாக சாலையில் ஓடியது.




இதனால், பேருந்து டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது தரையில் மோதியது. இதில் பேருந்தில் பயணம் செய்ய அனைவரும் பேருந்தின் உள்ளேயே தூக்கி வீசப்பட்டனர். இதில்,  பேருந்தில் பின்னால் அமர்ந்திருந்த 3 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் அறிந்த போலீசார் விரைந்து வந்து பேருந்தில் உள்ள பயணிகளை மீட்டு மாற்று பேருந்தில்  அனுப்பி வைத்தனர். மேலும், பலத்த காயங்களுடன் இருந்த 3 மாணவர்களை அருகில் இருந்த மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


இந்த சம்பவம் குறித்து அப்பகுதி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அரசு பேருந்தின் சக்கரங்கள் தனியாக ஓடியது அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

இலங்கையில் பரபரப்பு.. கட்சி அலுவலகத்தில் வைத்து.. எதிர்க்கட்சி பிரமுகர் சுடப்பட்டார்!

news

தொடர் மழையால் காவிரி டெல்டா விவசாயிகளுக்கு இரட்டை இடி:ஆய்வு செய்து இழப்பீடு வழங்க வேண்டும்:அன்புமணி

news

அதிரடியாக குறைந்தது தங்கம் விலை... இன்று மட்டும் சவரனுக்கு ரூ.2400 குறைவு!

news

மகாலட்சுமி முகம் கொண்ட மங்கலா.. மீண்டும் மங்கலம் (5)

news

குருவிக்கூடு!

news

காற்றின் மொழி!

news

அரபிக் கடல்.. வங்கக் கடல்.. 2 தாழ்வுகள்.. லேட்டஸ்ட் நிலவரம் என்ன.. மழை எப்படி இருக்கும்?

news

இருபுறமும் காய்ந்த நிலை ஊடே மலர்வனம்…சீழ்க்கை கவிதைப் புத்தக விமர்சனம்

news

கந்தன் அருள் இருந்தால் துன்பம்.. வந்த வழி ஓடி விடும்.. கந்தசஷ்டி விரதம் ஆரம்பம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்