சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 போட்டி தேர்வுக்கு இன்று முதல் ஏப்ரல் 30 வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியாகி உள்ளது . மேலும் ஜூன் 15ஆம் தேதி முதல் நிலை தேர்வு நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தமிழ்நாட்டில் உள்ள காலி பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. இதற்காக தமிழ்நாடு அரசு நடத்தும் குரூப்-1, குரூப் 2, குரூப் 4, போன்ற போட்டி தேர்வுகள் மூலம் அரசுப் பணியிடங்களில் அமர வேண்டும் என்பது இன்றைய தலைமுறையினரின் கனவாக உள்ளது. இதனால் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ள இளைஞர்களும் பெண்களும் மும்மரமாக தயாராகி வருகின்றனர். அதே சமயத்தில் போட்டித் தேர்வுக்கான அறிவிப்பு ஆணை எப்பொழுது வெளியாகும் என்று எதிர்பார்ப்புடனும் காத்து வந்தனர்.
இந்த நிலையில் இளைஞர்களின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று குரூப்-1,போட்டி தேர்வுக்கான அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டுள்ளது. அதன்படி, குரூப் ஒன் தேர்வு மூலம் மொத்தம் காலியாக உள்ள 70 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் 28 துணை ஆட்சியர் பணிகள், 7 துணை காவல் கண்காணிப்பாளர் பணிகள், 19 வணிக வரி உதவி ஆணையாளர் பணியிடங்கள், 3 மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் பணியிடங்கள், 6 உதவி ஆணையர் பணிகள் என மொத்தம் 70 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
அரசு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு பட்டம் பெற்றிருக்க வேண்டும். 1.7.2025 அன்று தேர்வாளர்களுக்கு 21வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். அதிகபட்சமாக வயது வரம்பு 34 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தகுதியுடையவர்கள் இன்று முதல் வரும் 30ம் தேதி வரை https://tnpsc.gov.in/ என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். குரூப் 1 முதல்நிலை தேர்வு தேர்வு வரும் ஜூன் 15ஆம் தேதி நடைபெறும். முதன்மை தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் மாதம் வெளிநாடு செல்கிறேன்.. களப் பணிகளுக்குத் தயாராகுங்கள்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மை பணியாளர்களை அப்புறப்படுத்த ஹைகோர்ட் உத்தரவு
மதுரை சொத்து வரி முறைகேடு வழக்கில் இருவர் கைது: பிரேமலதா விஜயகாந்த் பாராட்டு!
கத்திக் குத்து, அரிவாள், கல்லூரிக்குள் நாட்டு வெடிகுண்டு... இது தான் திமுக அரசு: எடப்பாடி பழனிச்சாமி
2030 காமன்வெல்த் போட்டி.. அகமதாபாத்தில் நடத்த இந்தியா திட்டம்.. ஒப்புதல் அளித்தது IOA
தொடர்ந்து 4வது நாளாக குறைந்தது தங்கம் விலை... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
பச்சை சன்னா, கொத்தவரங்காய் கிரேவி.. டேஸ்ட்டியானது.. ஹெல்த்தியானது.. லஞ்ச்சுக்கு பெஸ்ட் ரெசிப்பி!
முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில்.. அதிமுகவிலிருந்து திமுகவில் இணைந்தார் டாக்டர் மைத்ரேயன்
பாகிஸ்தான் நம்மை அழிக்க நினைப்பதற்குள்.. பாதி பாகிஸ்தான் காலி.. இந்தியாவின் பலம் இதுதான்!
{{comments.comment}}