சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 போட்டி தேர்வுக்கு இன்று முதல் ஏப்ரல் 30 வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியாகி உள்ளது . மேலும் ஜூன் 15ஆம் தேதி முதல் நிலை தேர்வு நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தமிழ்நாட்டில் உள்ள காலி பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. இதற்காக தமிழ்நாடு அரசு நடத்தும் குரூப்-1, குரூப் 2, குரூப் 4, போன்ற போட்டி தேர்வுகள் மூலம் அரசுப் பணியிடங்களில் அமர வேண்டும் என்பது இன்றைய தலைமுறையினரின் கனவாக உள்ளது. இதனால் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ள இளைஞர்களும் பெண்களும் மும்மரமாக தயாராகி வருகின்றனர். அதே சமயத்தில் போட்டித் தேர்வுக்கான அறிவிப்பு ஆணை எப்பொழுது வெளியாகும் என்று எதிர்பார்ப்புடனும் காத்து வந்தனர்.
இந்த நிலையில் இளைஞர்களின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று குரூப்-1,போட்டி தேர்வுக்கான அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டுள்ளது. அதன்படி, குரூப் ஒன் தேர்வு மூலம் மொத்தம் காலியாக உள்ள 70 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் 28 துணை ஆட்சியர் பணிகள், 7 துணை காவல் கண்காணிப்பாளர் பணிகள், 19 வணிக வரி உதவி ஆணையாளர் பணியிடங்கள், 3 மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் பணியிடங்கள், 6 உதவி ஆணையர் பணிகள் என மொத்தம் 70 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
அரசு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு பட்டம் பெற்றிருக்க வேண்டும். 1.7.2025 அன்று தேர்வாளர்களுக்கு 21வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். அதிகபட்சமாக வயது வரம்பு 34 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தகுதியுடையவர்கள் இன்று முதல் வரும் 30ம் தேதி வரை https://tnpsc.gov.in/ என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். குரூப் 1 முதல்நிலை தேர்வு தேர்வு வரும் ஜூன் 15ஆம் தேதி நடைபெறும். முதன்மை தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திருத்த வேண்டியது அறிக்கைகளை அல்ல சில உள்ளங்களை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
ஜூன் 21, 22 சென்னை எழும்பூர் டூ திருநெல்வேலி இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம்
22ம் தேதி முருகனை கையில் எடுப்பது போல் 2026ல் தமிழகத்தை கையில் எடுப்போம்: நயினார் நாகேந்திரன்
சுப்ரீம் கோர்ட்டே சொல்லிடுச்சு... தமிழ்த் திரையுலகுக்கு புதுத் தெம்பு.. கமல்ஹாசனின் ரியல் Thuglife
கமல்ஹாசனை எப்படி மன்னிப்பு கேட்கச் சொல்லலாம்.. தக்லைபுக்கு தடை இல்லை.. உச்சநீதிமன்றம் அதிரடி
காவிரி நதிநீர் பற்றி பேச பொம்மை முதல்வருக்கு துளியும் அருகதை இல்லை: எடப்பாடி பழனிச்சாமி!
வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய தங்கம் விலை... இன்று மட்டும் சவரனுக்கு ரூ.840 குறைவு!
சிறுவன் கடத்தல் வழக்கு: கைது செய்யப்பட்டுள்ள ஏடிஜிபி ஜெயராம் சஸ்பெண்ட்
4 ராசிகளில் நீங்களும் ஒருவரா?..2025ல் பெரிய கோடீஸ்வரரா ஆய்ருவீங்களாம்ய்யா..பாபா வங்காவே சொல்லிட்டாரு
{{comments.comment}}