பாலியல் குற்றங்களுக்கு இனி கடும் தண்டனை.. மசோதாவுக்கு.. கிரீன் சிக்னல் கொடுத்த ஆளுநர்!

Jan 23, 2025,05:01 PM IST

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் பெண்களுக்கு எதிரான பாலியல் வழக்குகளில் கடுமையான தண்டனை வழங்க வகை செய்யும் சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஆர் என் ரவி ஒப்புதல் வழங்கி உள்ளார்.


கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனால் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பின. தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டவர் தண்டிக்கப்பட வேண்டும் எனவும் அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. 


இந்த நிலையில் தமிழகத்தில் பெண்களுக்கு எதிராக குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், அண்ணா பல்கலைக்கழக மாணவியின் பாலியல் சம்பவம், அப்போது நடைபெற்று வந்த தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அதாவது எதிர்க்கட்சிகள் அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு ஆதரவாக முழக்கமிட்டு போர்க்கொடி ஏந்தினர். இதனால் பெரும் பரபரப்பு நிலவியது. 




இதனையடுத்து பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிராக பாலியல் வழக்குகளில் தண்டனைகளை கடுமையாக்க வழிவகை செய்யும் சட்ட மசோதாவை முதல்வர் மு க ஸ்டாலின் தாக்கல் செய்தார். குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக தண்டனைகள் கடுமையாக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த மசோதா கொண்டு வரப்பட்டது.


பெண்களை பின்தொடர்ந்து சென்று தொந்தரவு செய்தால் 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், கூட்டு பாலியல் பலாத்காரத்துக்கு தூக்கு தண்டனையும் வழங்கப்படும். மீண்டும் மீண்டும் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டால் ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை விதிக்கப்படும் என பல்வேறு முக்கிய அம்சங்கள் புதிய சட்டத் திருத்தத்தில் இடம் பெற்றிருந்தன. 


இந்த மசோதா ஒப்புதலுக்காக ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.  தற்போது இந்த மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். இதையடுத்து குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு மசோதா அனுப்பி வைக்கப்பட்டது. குடியரசுத் தலைவர் ஒப்புதல் கிடைத்த பிறகு இது சட்டமாகும்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

RIP Bharathiraja: பாசத்திற்குரிய பாரதிராஜா.. காலமானார் இயக்குநர் இமயம்.. கண்ணீரில் தமிழ் சினிமா

news

RIP Bharathiraja: இயக்குனர் பாரதிராஜாவின் இறுதிச்சடங்கு.. நாளை அரசு மரியாதையுடன் நல்லடக்கம்!

news

தவெக எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் அவசரக் கூட்டம்.. நாளை கூடுகிறது

news

இந்தியாவின் மிக நீண்ட கால பிரதமர்.. நரேந்திர மோடி சாதனை.. உலகத் தலைவர்கள் வாழ்த்து!

news

இயக்குனர் இமயம் பாரதிராஜா.. அந்த முட்டத்து கடல் அலைகள் கடற்கரை மணல்கள் கண்ணீர் விடுகிறது!

news

பாஜகவிலிருந்து விலகினார் அமர் பிரசாத் ரெட்டி...தலைமை மீது பகீர் குற்றச்சாட்டு

news

சிந்தனைச் சிதறல்.. நின்ற இடத்திலேயே வெல்வது எப்படி?

news

பரம ஏகாதசி.. 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் ஏகாதசி.. பாவங்கள் நீங்கும்

news

Kalaiyarasi Muthuvel Poem: அமிலம் கொட்டினாலும் ஆழ்துளையிட்டாலும்!

அதிகம் பார்க்கும் செய்திகள்