சென்னை: அரசியலமைப்பு சாசனத்திற்கு உட்பட்டு மாநில அரசுக்குத் தொடர்ந்து ஆதரவு அளிப்பதாகவும், முதல்வர் மு.க.ஸ்டாலிடனுடன் சுமூக சந்திப்பு நடந்ததாகவும் ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு, இரு தரப்புக்கும் இடையிலான இறுக்க நிலை குறைவதற்கான அறிகுறியாக பார்க்கப்படுகிறது.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவிக்கும், திமுக அரசுக்கும் இடையே தொடர்ந்து முட்டல் மோதல் இருந்து வருகிறது. இரு தரப்பும் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் மாறி மாறி குட்டிக் கொள்வது தொடர் கதையாகியுள்ளது.
இந்த விவகாரம் சமீபத்தில் உச்சநீதிமன்றம் வரை போய் விட்டது. ஆளுநர் சட்ட மசோதாக்களுக்கு அனுமதி தருவதில் தாமதம் செய்வதாக கூறி தமிழ்நாடு அரசு வழக்குத் தொடர்ந்துள்ளது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் பல்வேறு கேள்விகள், அறிவுறுத்தல்களை வெளியிட்டிருந்தது. அதில் ஒன்று "முதல்வரும், ஆளுநரும் ஏன் பேசக் கூடாது.. பேசித் தீர்வு காண முயலக் கூடாது"" என்பதாகும்.
ஆளுநருக்குக் கொடுக்கப்பட்ட அறிவுறுத்தல் இது. இந்த அறிவுறுத்தலின்படி முதல்வர் ஸ்டாலினை பேச்சுவார்த்தைக்கு வருமாறு ஆளுநர் ரவி அழைக்கவே, முதல்வரும் இன்று மாலை ஆளுநர் மாளிகை சென்றார். உடன் அமைச்சர்கள் துரைமுருகன், தங்கம் தென்னரசு, ரகுபதி, ராஜ கண்ணப்பன் உள்ளிட்டோரும், உயர் அதிகாரிகளும் சென்றிருந்தனர்.

கிட்டத்தட்ட முக்கால் மணி நேரம் நடந்த இந்த சந்திப்புக்குப் பின்னர் பேசப்பட்டது என்ன என்பது குறித்து சட்ட அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களிடம் விளக்கினார். அதைத் தொடர்ந்து ஆளுநர் மாளிகையும் ஒரு செய்திக்குறிப்பை வெளியிட்டது. வழக்கமாக சுருக்கமான அறிக்கையாக இல்லாமல் சற்று நீண்டதாக இந்த அறிக்கை இருந்தது குறிப்பிடத்தக்கது.
அதில்,
ஆளுநர் ஆர்.என். ரவி அவர்கள், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை மாநில அரசு விவகாரங்கள் தொடர்பாக விவாதிக்கும் சந்திப்புக்கு அழைத்திருந்தார். அதன்படி, முதலமைச்சர், ஆளுநரை ஆளுநர் மாளிகை, சென்னையில் இன்று (30.12.2023) மாலை 5.30 மணியளவில் சந்தித்தார். முதலமைச்சருடன் அமைச்சர்கள் துரைமுருகன், தங்கம் தென்னரசு, எஸ். ரகுபதி, ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் மற்றும் மாநில தலைமைச் செயலாளர், முதலமைச்சரின் முதன்மைச் செயலாளர், தமிழ்நாடு பொதுத்துறை செயலாளர் ஆகியோரும் வந்திருந்தனர்.
இந்த சந்திப்பு சுமூகமாக இருந்தது. தமிழ்நாடு ஆளுநரும், முதலமைச்சரும் பரஸ்பரம் மரியாதையை பரிமாறிக் கொண்டு, மாநிலம் தொடர்பான பல்வேறு பிரச்சனைகள் குறித்து தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். ஆளுநர், தமிழ்நாட்டு மக்களின் நலனில் தாம் முழு ஈடுபாட்டைக் கொண்டிருப்பதாக மீண்டும் வலியுறுத்தினார். இந்திய அரசியலமைப்பின் வரம்புக்கு உட்பட்டு மாநில அரசுக்கு தொடர்ந்து ஆதரவளிப்பதாகவும் அவர் உறுதியளித்தார்.
ஆளுநர் ஆர். என்.ரவியுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியது என்ன?
ஆளுநர், மாநிலத்தின் மிகப்பெரிய நலனை கருத்தில் கொண்டு முதலமைச்சருடன் அவ்வப்போது சந்திப்புகள் நடைபெற வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தினார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
சுமூகமான சந்திப்பு என்று அரசுத் தரப்பிலும் கூறப்பட்டிருந்தது. அதேபோல ஆளுநரும் கூறியுள்ளார். ஆக, இந்த சந்திப்பு இரு தரப்புக்கும் இடையே நிலவி வந்த பிணக்கு மற்றும் இறுக்கமான சூழ்நிலைய தளர்த்த உதவும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது. இந்த நிலை தொடர்ந்து மோதல் போக்குகளும் முடிவுக்கு வந்தால் மாநில நலனுக்கு அது பெரும் பயனைக் கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
Aliya Riaz: யார் இந்த அலியா ரியாஸ்.. ஏன் இப்படி திடீரென வைரலாகியுள்ளார்?
Singapen Helpline Number: பெண்களே.. 1091 என்ற எண்ணை அழைத்தால்.. சிங்கப்பெண் படை விரைந்து வரும்!
FIFA WorldCup 2026: உலகக் கோப்பை கால்பந்து.. அமெரிக்காவில் அசத்தும் ஈரான்.. டிரம்பை கலாய்த்து மீம்ஸ்
பிரிட்டன் அரசியல்: 10 டவுனிங் ஸ்ட்ரீட்டின் சுழலும் கதவு.. கீர் ஸ்டார்மரும் பதவி விலகல்!
கையடக்கத்தில் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்.. அசத்தலாக சாதிக்கும் நெல்லை ஆசிரியர் பொன் ரேகா!
Chettinadu Recipes: செட்டிநாடு அடுப்படியில் அதிரடி ஸ்வீட்.. மணக்க மணக்க கோதுமை அல்வா!
Monday Motivation: வாழ்வித்த வாழ்த்துகள் (சிறுகதை)
Tamil Short Story: நிறைவேறாத கல்லூரிக்கனவு!
தில்லைக்கூத்தன் கோயில்.. சிதம்பரம் தில்லை நடராஜர் திருக்கோவில் சிறப்புகள்!
{{comments.comment}}