"அய்யோ போலீஸ்".. லஞ்சப் பணத்தை வாயில் போட்டு கடகடன்னு மென்ற அதிகாரி!!

Jul 25, 2023,12:17 PM IST

போபால்: மத்தியப் பிரதேச மாநிலம் கட்னி பகுதியில் உள்ள அரசு அலுவலகத்திற்கு லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார் ரெய்டு வந்தனர். அப்போது லஞ்சப் பணத்தை அதிகாரி ஒருவர் டக்கென வாயில் போட்டு மென்று முழுங்கி விட்டார்.


வாயில் வெத்தலை பாக்கு போடுவது போல அவர் ஆசுவாசமாக கடித்து மென்று பணத்தை விழுங்கியதால் அவரைப் பிடிக்க வந்த போலீஸார் கையைப் பிசைந்து கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் நின்றனர். இதுதொடர்பான வீடியோ வைரலாகி விட்டது. 




அந்த அதிகாரியின் பெயர் கஜேந்திர சிங். இவர் பெரிய அளவில் லஞ்சம் வாங்குவதாக லஞ்ச  ஒழிப்புப் போலீஸாருக்குத் தொடர்ந்து புகார்கள் வந்தன. இதையடுத்து அவரை கையும் களவுமாக பிடிக்க போலீஸார் திட்டமிட்டனர். அதன்படி தங்களிடம் புகார் கொடுத்த ஒருவரிடம் ரூ. 5000 பணத்தைக் கொடுத்து அதை கஜேந்திர சிங்கிடம் ஒப்படைக்க கூறினர். அவரும்  கொண்டு போய் கொடுத்தார். அப்போது பின்னாடியே வந்த போலீஸார் கஜேந்திர சிங்கை மடக்கிப் பிடிக்க திட்டமிட்டனர்.


திடீரென போலீஸாரைப் பார்த்த கஜேந்திர சிங் அதிர்ச்சி அடைந்தார். ஆனால்அடுத்த விநாடியே சுதாரித்துக் கொண்ட அவர் அப்படியே அந்த ரூபாய் நோட்டுக்களை எடுத்து வாயில் திணித்தார். வேகம் வேகமாக மெல்ல ஆரம்பித்தார். மடக் மடக்கென அதை கடித்து மென்று அவர் விழுங்கிய வேகத்தைப் பார்த்து கூடியிருந்தோர் அதிர்ச்சியாகி விட்டனர். அவரைத் தடுக்க முயன்றும் முடியவில்லை. மொத்த பணத்தையும் வாயில் வைத்து மென்று விட்டார் கஜேந்திர சிங்.


வாய்க்குள் ரூபாய்த் தாள்களை அதக்கிக் கொண்டு அவர் நின்று நிதானமாக மென்றதைப் பார்த்து அந்த இடமே பரபரப்பாகி விட்டது. மொத்தப் பணத்தையும் மனிதர் மென்று விழுங்கி விட்டார். அவரது உயிருக்கு ஏதாவது ஆபத்தாகி விடப் போகிறதே என்பதால் அவரை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த டாக்டர்கள், உயிருக்கு ஆபத்தெல்லாம் இல்லை. அவர் நன்றாகவே இருப்பதாக தெரிவித்தனர்.


தற்போது அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேல் விசாரணை நடந்து வருகிறது.

சமீபத்திய செய்திகள்

news

இனி கூட்டணியே தேவையில்லை.. திமுக தனித்துப் போட்டியிட வேண்டும்.. தொண்டர்கள் வலியுறுத்தல்

news

காங்கிரஸ் அணுகுமுறையால் திமுக கூட்டணிக்குத் தோல்வி.. திருமாவளவன் குற்றச்சாட்டு

news

பெண் சிங்கம்.. ராத்திரி 11 மணி.. தனி ஆளாய்.. மொத்த கும்பலையும் வேரறுத்த.. ரிதி ராஜ் ஐபிஎஸ்!

news

மீண்டும் போர் பதற்றம்: ஈரானிலிருந்து இந்தியர்கள் வெளியேற மத்திய அரசு அறிவுறுத்தல்!

news

மக்களின் குறை தீர்க்கும் தமிழ்நாடு அரசு.. முக்கிய இமெயில் முகவரிகள்.. நோட் பண்ணிக்கங்க!

news

முதல்வர் விஜயைச் சந்தித்து.. செஸ் விளையாடி.. ஜெயித்து வாழ்த்து பெற்றார் சாம்பியன் பிரக்ஞானந்தா!

news

தமிழ்நாடு மின் வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு: சிபிசிஐடி-க்கு மாற்றி டிஜிபி உத்தரவு!

news

பா.ஜ.க-விலிருந்து விலகிய செய்தித் தொடர்பாளர் ஸ்ரீகாந்த் கருணேஷ்.. அண்ணாமலையுடன் இணைகிறாரா?

news

ராஜ்யசபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு இன்று கடைசி நாள்.. தவெக ஆதரவுடன் எம்.பி ஆகும் காங்.

அதிகம் பார்க்கும் செய்திகள்